முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலைக்கார பெண்ணை கொன்ற உரிமையாளருக்கு ஆயுள்

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.4 - வீட்டில் வேலை செய்த பெண்ணை மண்ணெண்ணெய் ஊற்றி கொடூரமாக எரித்துக் கொன்ற வீட்டு உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பளித்தது. சென்னை சூளைமேடு சங்கராபுரம் தெருவில் வசிப்பவர் சுதிர்பல் சந்தானி. இவரது மனைவி பிரியா(32). இவர்களது வீட்டில் பரமேஸ்வரி என்பவர் வீட்டு வேலை செய்து வந்தார். அவருக்கு மாதம் ரூ.2 ஆயிரம் சம்பளம் ஆகும். ஆனால் சம்பளத்தை சரியாக கொடுப்பதில்லையாம். இந்நிலையில் பிரியாவிடம் வாங்கிய ரூ.15 ஆயிரம் கடனை திரும்ப கொடுக்க முடியாமல் பரமேஸ்வரி சிரமப்பட்டுள்ளார். 

இந்நிலையில் கடந்த கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரியா வீட்டில் இருந்து தீக்காயத்துடன் பரமேஸ்வரி தெருவுக்கு ஓடி வந்தார். பக்கத்து வீட்டினர் அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமி பரமேஸ்வரி கொடுத்த மரண வாக்குமூலத்தில், பிரியா தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி விட்டார் என்று கூறினார். இதையடுத்து பிரியா மீது போலீசார் கொலை வழக்குப்  பதிவு செய்தனர். 

இந்த வழக்கு சென்னை 4 வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி எஸ்.ராஜகோபாலன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் பிரபாவதி ஆஜரானார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் பிரியாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ராஜகோபாலன் தீர்ப்பளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்