முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரட்டை சதமடித்த வீரேந்திர சேவாக்குக்கு டெண்டுல்கர் பாராட்டு

சனிக்கிழமை, 10 டிசம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, டிச.-  10 - ஒரு நாள் போட்டிகளில் முதன் முதலில் இரட்டை சதம் போட்டு உலக சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கர் தனது சாதனையை குறுகிய காலத்திற்குள் முறியடித்த வீரேந்திர சேவாக்கை பாராட்டியுள்ளார்.  2010 ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான குவாலியர் போட்டியின் போது 200 ரன்களை எடுத்து உலக சாதனை படைத்தார் சச்சின். தற்போது அந்த சாதனையை வீரேந்திர சேவாக் முறியடித்துள்ளார். வீரேந்திர சேவாக் 219 ரன்களை குவித்துள்ளார். அவருக்கு உலகின் பல பகுதிகளில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் டெண்டுல்கரும், சேவாக்கை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  வீருவின் சாதனைக்காக மகிழ்ச்சியடைகிறேன். எனது சாதனையை ஒரு இந்தியர் முறியடித்தது எனக்கு மேலும் பெருமையாக உள்ளது. வெல்டன் சேவாக் என்று தனது எஸ்.எம்.எஸ்சில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்