முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் கேரள நகைக்கடைகளை முற்றுகையிட்ட வக்கீல்கள்

புதன்கிழமை, 21 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,டிச.- 21 - மதுரையில் கேரள நகைக்கடைகளை முற்றுகையிட்ட வக்கீல்கள் கடை முன்பு இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும். புதிய அணைகட்டுவதை கேரள அரசு கைவிடவேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர், அமைப்புகள், பொதுமக்கள் தொடர்போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள கேரள நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து மதுரையில் வக்கீல்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். நான்கு மாசிவீதிகளிலும் ஊர்வலம் நடைபெறும் என அவர்கள் அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று வக்கீல் சங்க தலைவர் தர்மராஜ், செயலாளர் ஏ.கே.தர்மராஜ் தலைமையில் 200 -க்கும் மேற்பட்ட வ க்கீல்கள் மோட்டார் சைக்கிளில் நான்கு மாசிவீதிகளிலும் ஊர்வலமாக வந்தனர். இதையொட்டி மேலமாசிவீதியில் உள்ள கேரள நகைக்கடைகள் முன் எச்சரிக்கையாக அடைக்கப்பட்டிருந்தன.
ஊர்வலமாக வந்த வக்கீல்கள் கேரள அரசை கண்டித்து கோஷமிட்டனர். மேலமாசி வீதியில் ஊர்வலம் வந்தபோது அங்குள்ள ஆலுக்காஸ் நகைக்கடை மற்றும் நேதாஜி ரோட்டில் உள்ள ஜோஸ்ஆலுக்காஸ் நகைக்கடைகள் முன்பு வக்கீல்கள் திடீர் முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். பின்னர் அவர்கள் நகைக்கடை முன்பு இருந்த  பொருட்களை அடித்து நொறுக்கினர். இதைபாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் உயர்அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவாத்தை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்