முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் ஜனாதிபதியின் கைக்கெடிகார ஏலம் நிறுத்தம்

வெள்ளிக்கிழமை, 30 டிசம்பர் 2011      வர்த்தகம்
Image Unavailable

 

பாட்னா, டிச.30 - மறைந்த முன்னாள் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத்தின் கைக்கெடிகாரம் ஏலம் விடப்படவிருந்தது நிறுத்தப்பட்டு விட்டதாக பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். ராஜேந்திர பிரசாத் பயன்படுத்திய விலையுயர்ந்த ரோலக்ஸ் தங்க கைக்கெடிகாரம் ஜெனிவாவில் நவம்பர் 13 ம் தேதி ஏலம் விடப்படவிருந்தது. இதை தடுத்து நிறுத்தக் கோரி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு பீகார் முதல்வர் நிதீஷ்குமார் கடிதம் எழுதியிருந்தார். 

இதையடுத்து பிரதமர் ஏலத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கலாசார அமைச்சகத்தை கேட்டுக் கொண்டார். அந்த அமைச்சகம் நடவடிக்கை எடுத்து ஏலத்தை நிறுத்தி வைத்துள்ளது. இது தொடர்பாக நிதீஷ்குமாருக்கு பிரதமர் எழுதியுள்ள கடிதத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை நிதீஷ்குமார் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்