முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் அடுத்தடுத்து விபத்தில் டிரைவர் உள்பட 4 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 15 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,மார்ச்.15 - மதுரையில் அடுத்தடுத்து நடந்த விபத்தில் டிரைவர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர்கள் காமராஜ், மணிமாறன். இவர்கள் இருவரும் சிவகங்கை மாவட்டம் பொட்டப்பாளையத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வந்தனர்.

சம்பவத்தன்று இரவு 9 மணி அளவில் பொட்டப்பாளையத்தில் இருந்து பைக்கில் மதுரையை நோக்கி வந்தனர். ரிங்ரோடு டோல்கேட் அருகே உள்ள சாமநத்தம் பிரிவில் அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. பலத்த காயம் அடைந்த இருவரும் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

   நெல்லை மாவட்டம் தென்காசி கூலக்கடை பஜாரை சேர்ந்தவர் அழகர்.டிரைவரான இவர் ஈரோட்டில் இருந்து திருமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது துவரிமான் அருகே நான்கு வழிச்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது  அழகர் ஓட்டி வந்த லாரி மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அழகர் இறந்தார். தூத்துக்குடியை சேர்ந்த சதீஷ்குமார் மதுரை மாவட்டம் வரிச்சூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த லாரி மோதி பலத்த காயம் அடைந்தார். இதில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்