எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெர்த், ஜன.14 - இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸி. வீரர்கள் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டனர். இந்திய பேட்ஸ்மேன்கள் 161 ரன்களில் சுருண்டனர். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு எதிராக 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரை சமன் செய்ய மூன்றாவது டெஸ்டை வென்றே தீர வேண்டிய கட்டாய நிலையில் இந்திய அணி களமிறங்கியது. அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணி இந்த டெஸ்டை வென்றால் தொடரை கைப்பற்றிவிடலாம் என்ற நிலை.
இந்நிலையில் நேற்று காலை பெர்த்தில் உள்ள டபிள்யூ. ஏ.சி.ஏ. மைதானத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான அந்த மைதானத்தில் இந்திய அணியை பேட் செய்யும்படி கேட்டுக்கொண்டார். இந்திய துவக்க வீரர்கள் வீரேந்திர சேவாக் மற்றும் கவுதம் காம்பீர் ஆகியோர் களமிறங்கினர். இந்திய அணிக்கு துவக்கம் மீண்டும் சரியாக மையவில்லை. இந்திய அதிரடி வீரர் சேவாக் ரன் எதுவும் எடுக்காத நிலையில் ஹில்பின்ஹாஸ் பந்தில் வழக்கம்போல் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அப்போது இந்திய அணி 4 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அடுத்து களமிறங்கிய ராகுல் டிராவிட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரன் எண்ணிக்கை 32 ஆக இருந்தபோது, ஹில்பின்ஹாஸ் பந்தில் 9 ரன்களை மட்டுமே எடுத்திருந்த டிராவிட் போல்டானார். அடுத்து 99 வது சதத்தில் நீண்ட நாட்களாக இருக்கும் சச்சின் களமிறங்கினார். இவர் 15 ரன்களை எடுத்திருந்தபோது இந்த தொடரில் முதன்முதலாக களமிறக்கப்பட்ட ரியான் ஹாரிஸ் எல்.பி.டபிள்யூ. முறையில் சச்சினை அவுட்டாக்கி அவரது நூறாவது சத கனவை தகர்த்தார். அப்போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 59 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அடுத்து லட்சுமன் களமிறங்கினார். அதுவரை தாக்குப்பிடித்த காம்பீர் 31 ரன் எடுத்த நிலையில் ஹில்பின்ஹாஸ் பந்தில் விக்கெட் கீப்பர் ஹாடினிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அப்போது இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அடுத்ததாக இளம் வீரர் விராட் ஹோக்லி லட்சுமனுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மெதுவாக ரன்களை சேர்த்தது. இதனால் இந்திய அணி நூறு ரன்களை கடந்தது. அணியின் எண்ணிக்கை 131 க்கு உயர்ந்தபோது 44 ரன்களை எடுத்திருந்த விராட் ஹோக்ளி, சிடிலின் பந்துவீச்சில் வார்னரால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்த சிறிது நேரத்திலேயே லட்சுமன் 31 ரன்கள் எடுத்த நிலையில் சிடிலின் பந்திலேயே கிளார்க்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஹோக்ளி, லட்சுமன் ஜோடி 5 வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக அதிகபட்சமாக 68 ரன்களை சேர்த்தது. அடுத்தபடியாக இந்திய கேப்டன் தோனி அடித்த 12 ரன்களே அதன்பிறகு வந்த இந்திய வீரர்களில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாக இருந்தது. இந்திய வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். இதனால் இந்திய அணி 60.2 ஓவர்களில் 161 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸி தரப்பில் ஹில்பின்ஹாஸ் 4 விக்கெட்டுகளையும், சிடில் 3 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் 1 விக்கெட்டையும் எடுத்தனர்.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணியின் வார்னர் மற்றும் கோவன் ஜோடி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய பந்துவீச்சு ஆஸி. வீரர்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை. ஆஸ்திரேலிய வீரர்கள் 23 ஓவர்களில் அதிரடியாக 149 ரன்களை குவித்தனர். இதில் வார்னர் 80 பந்துகளில் 104 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார். மற்றொரு துவக்க வீரர் கோவன் 40 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்திய அணி முதல் நாளிலேயே பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சொதப்பி உள்ளது. பெர்த் டெஸ்ட்டும் மிக மோசமான தோல்வியை கொடுப்பது உறுதி என்ற நிலையில் இந்திய அணியின் நிலை உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.