எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெர்த், ஜன.14 - இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸி. வீரர்கள் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டனர். இந்திய பேட்ஸ்மேன்கள் 161 ரன்களில் சுருண்டனர். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு எதிராக 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரை சமன் செய்ய மூன்றாவது டெஸ்டை வென்றே தீர வேண்டிய கட்டாய நிலையில் இந்திய அணி களமிறங்கியது. அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணி இந்த டெஸ்டை வென்றால் தொடரை கைப்பற்றிவிடலாம் என்ற நிலை.
இந்நிலையில் நேற்று காலை பெர்த்தில் உள்ள டபிள்யூ. ஏ.சி.ஏ. மைதானத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான அந்த மைதானத்தில் இந்திய அணியை பேட் செய்யும்படி கேட்டுக்கொண்டார். இந்திய துவக்க வீரர்கள் வீரேந்திர சேவாக் மற்றும் கவுதம் காம்பீர் ஆகியோர் களமிறங்கினர். இந்திய அணிக்கு துவக்கம் மீண்டும் சரியாக மையவில்லை. இந்திய அதிரடி வீரர் சேவாக் ரன் எதுவும் எடுக்காத நிலையில் ஹில்பின்ஹாஸ் பந்தில் வழக்கம்போல் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அப்போது இந்திய அணி 4 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அடுத்து களமிறங்கிய ராகுல் டிராவிட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரன் எண்ணிக்கை 32 ஆக இருந்தபோது, ஹில்பின்ஹாஸ் பந்தில் 9 ரன்களை மட்டுமே எடுத்திருந்த டிராவிட் போல்டானார். அடுத்து 99 வது சதத்தில் நீண்ட நாட்களாக இருக்கும் சச்சின் களமிறங்கினார். இவர் 15 ரன்களை எடுத்திருந்தபோது இந்த தொடரில் முதன்முதலாக களமிறக்கப்பட்ட ரியான் ஹாரிஸ் எல்.பி.டபிள்யூ. முறையில் சச்சினை அவுட்டாக்கி அவரது நூறாவது சத கனவை தகர்த்தார். அப்போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 59 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அடுத்து லட்சுமன் களமிறங்கினார். அதுவரை தாக்குப்பிடித்த காம்பீர் 31 ரன் எடுத்த நிலையில் ஹில்பின்ஹாஸ் பந்தில் விக்கெட் கீப்பர் ஹாடினிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அப்போது இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அடுத்ததாக இளம் வீரர் விராட் ஹோக்லி லட்சுமனுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மெதுவாக ரன்களை சேர்த்தது. இதனால் இந்திய அணி நூறு ரன்களை கடந்தது. அணியின் எண்ணிக்கை 131 க்கு உயர்ந்தபோது 44 ரன்களை எடுத்திருந்த விராட் ஹோக்ளி, சிடிலின் பந்துவீச்சில் வார்னரால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்த சிறிது நேரத்திலேயே லட்சுமன் 31 ரன்கள் எடுத்த நிலையில் சிடிலின் பந்திலேயே கிளார்க்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஹோக்ளி, லட்சுமன் ஜோடி 5 வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக அதிகபட்சமாக 68 ரன்களை சேர்த்தது. அடுத்தபடியாக இந்திய கேப்டன் தோனி அடித்த 12 ரன்களே அதன்பிறகு வந்த இந்திய வீரர்களில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாக இருந்தது. இந்திய வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். இதனால் இந்திய அணி 60.2 ஓவர்களில் 161 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸி தரப்பில் ஹில்பின்ஹாஸ் 4 விக்கெட்டுகளையும், சிடில் 3 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் 1 விக்கெட்டையும் எடுத்தனர்.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணியின் வார்னர் மற்றும் கோவன் ஜோடி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய பந்துவீச்சு ஆஸி. வீரர்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை. ஆஸ்திரேலிய வீரர்கள் 23 ஓவர்களில் அதிரடியாக 149 ரன்களை குவித்தனர். இதில் வார்னர் 80 பந்துகளில் 104 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார். மற்றொரு துவக்க வீரர் கோவன் 40 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்திய அணி முதல் நாளிலேயே பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சொதப்பி உள்ளது. பெர்த் டெஸ்ட்டும் மிக மோசமான தோல்வியை கொடுப்பது உறுதி என்ற நிலையில் இந்திய அணியின் நிலை உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
எஸ்.ஐ.ஆர் பணிகளில் குழப்பம்: என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டு
05 Nov 2025சென்னை: எஸ்.ஐ.ஆர். பணியில் கணக்கீட்டு படிவங்கள் வழங்கவில்லை என்று என்.ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.90 ஆயிரத்திற்கு கீழ் சரிவு
05 Nov 2025சென்னை, தங்கம் விலை நேற்றும் சரிவை சந்தித்துள்ளது.
-
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு
05 Nov 2025மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.
-
எங்களுக்கு சூழ்ச்சி தெரியவில்லை: கரூர் சம்பவம் குறித்து ஆதவ் அர்ஜுனா பேச்சு
05 Nov 2025சென்னை: எங்களுக்கு சூழ்ச்சி தெரியவில்லை கரூர் சம்பவம் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசினார்.
-
கருணை அடிப்படையிலான அரசு பணிக்கு விண்ணப்பம் தமிழக அரசாணை வெளியீடு
05 Nov 2025சென்னை: கருணை அடிப்படையிலான அரசு பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசாணை வெளியிட்டது.
-
பியூஷ் கோயல் நியூசிலாந்து பயணம்
05 Nov 2025வெலிங்டன்: மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலை நியூசிலாந்து சென்றார்.
-
சின்சினாட்டி மேயர் தேர்தல்: ஜே.டி.வான்ஸ் சகோதரரை தோற்கடித்தார் அஃப்தாப்
05 Nov 2025சின்சினாட்டி, அமெரிக்காவின் சின்சினாட்டி மேயர் தேர்தலில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் சகோதரர் கோரி போமனை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஃப்தாப் புரேவல் தோற்கடித்துள்ளார்.
-
புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் துவக்கம்
05 Nov 2025புதுச்சேரி: புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் தொடங்கியுள்ளது.
-
ரூ.23 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
05 Nov 2025சென்னை, ரூ.23 கோடி செலவில் தரை மற்றும் நான்கு தளங்கள் கொண்ட புதிய மருத்துவக் கட்டிடத்துடன் 225 படுக்கை வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை முத
-
வாக்கு திருட்டு விவகாரம்: ராகுலுக்கு கிரண் ரிஜிஜு பதில்
05 Nov 2025புதுடெல்லி: வாக்கு திருட்டு விவகாரத்தில் ராகுல்காந்தி பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகிறார் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
-
ஜனநாயகத்தை அழிக்கும் புதிய ஆயுதம் சிறப்பு தீவிர திருத்தம்: ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
05 Nov 2025புதுடெல்லி, வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் என்பது ஜனநாயகத்தை அழிக்க பா.ஜ.க.வின் புதிய ஆயுதம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம்சாட்டிய
-
தென்னாப்பிரிக்கா 'ஏ' அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விராட் கோலி, ரோகித் விளையாட வாய்ப்பில்லை
05 Nov 2025மும்பை: தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விளையாட வாய்ப்பில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
பீகாரில் 121 தொகுதிகளில் இன்று முதல் கட்ட தேர்தல்: ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார்
05 Nov 2025பாட்னா, பீகாரில் 121 தொகுதிகளில் இன்று முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
-
அரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்: ஆதாரங்களுடன் ராகுல் குற்றச்சாட்டு
05 Nov 2025புதுடெல்லி, அரியாணா மாநில வாக்காளர் பட்டியலில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் பெண் ஒருவரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி பல போலி வாக்காளர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர் என்று
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க.வுக்கு 100 சதவீத வெற்றி சிறப்பு பொதுக்குழுவில் விஜய் பேச்சு
05 Nov 2025சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு 100 சதவீத வெற்றி நிச்சயம் என்று பொதுக்குழுவில் விஜய் பேசினார்.
-
போதைப்பொருள் கடத்தி வந்த படகு மீது அமெரிக்கா தாக்குதல் - 2 பேர் பலி
05 Nov 2025வாஷிங்டன்: போதைப்பொருள் கடத்தி வந்த படகு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
கோவாவில் பாக்., ஆதரவு கோஷங்கள் - 9 பேர் கைது
05 Nov 2025பனாஜி: கோவாவில் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்கள் எழுப்பிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
இந்த மாத இறுதியில் புயலுக்கு வாய்ப்பு
05 Nov 2025சென்னை: தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக இந்த மாத இறுதியில் புயலுக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
முதல் மனைவி சம்மதம் இல்லாமல் இஸ்லாமிய ஆண்கள் 2-வது திருமணம் செய்ய முடியாது கேரள உயர் நீதிமன்றம் கருத்து
05 Nov 2025திருவனந்தபுரம்: இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு ஆண் 2-வது திருமணம் செய்து கொள்வதற்கு பல்வேறு நிபந்தனைகள் உள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.;
-
ஸ்மிருதி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதாவுக்கு தலா ரூ.2.25 கோடி மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு
05 Nov 2025மும்பை: மகளிர் ஒருநாள் உலக கோப்பை வென்றதற்காக மகாராஷ்டிர வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதா யாதவுக்கு அம்மாநில அரசு தலா ரூ.2.25 கோடி பரிசுத் தொகையை அ
-
கரூர் கூட்ட நெரிசல்: 3 காவல் உதவி ஆய்வாளர்களிடம் சி.பி.ஐ. விசாரணை
05 Nov 2025கரூர்: கரூர் கூட்ட நெரிசல்: 3 காவல் உதவி ஆய்வாளர்களிடம் சி.பி.ஐ. மீண்டும் விசாரணை நடத்தியது.
-
அமெரிக்கா: சரக்கு விமானம் விழுந்து விபத்து - 3 பேர் பலி
05 Nov 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் சரக்கு விமானம் தரையில் விழுந்து விபத்து விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
சத்தீஷ்கார் ரயில் விபத்து: பலி 11 ஆக அதிகரிப்பு
05 Nov 2025ராய்ப்பூர்: சத்தீஷ்கார் ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
-
ஏலம் போகாத தாவூத் இப்ராஹிம் சொத்துகள்
05 Nov 2025மும்பை: கடந்த பத்தாண்டுகளில் முதல் முறையாக, தாவூத் இப்ராஹிமுக்குச் சொந்தமான சொத்துகள் குறைந்தவிலையில் ஏலம் விடப்பட்டும் கூட, ஏலம் எடுக்க ஒருவர்கூட முன்வராதது பேசுபொருளா
-
அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி மறைவு
05 Nov 2025வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி ரிச்சர்டு புரூஸ் டிக் சேனி காலமானதை தொடர்ந்து தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.


