எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,ஜன.27 - விளையாட்டுத் துறையை ஊக்குவிக்க முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விளையாட்டு என்பது இளைஞர்களின் உடலையும், மனதையும் நலம் பெறச் செய்வதோடு மட்டுமல்லாமல், நம் நாட்டின் பெருமையை தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் இடம் பெறச் செய்வதிலும், மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளுக்கிடையே நல்லெண்ணம், நட்புறவு ஆகியவற்றை வளர்ப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகம் அளித்து, ஊக்குவித்து, வீரர்களிடையே போட்டி மனப்பான்மையையும் வெற்றி பெறும் அணுகு முறைகளையும் வளர்த்து, விளையாட்டுத் துறையில் தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்ய பல புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். திறமைமிக்க விளையாட்டு வீரர்களை கண்டறிந்து, தேசிய மற்றும் பன்னாட்டு போட்டிகளில் அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு தக்க பயிற்சி மற்றும் நிதியுதவி அளித்தல்; தலைசியில் ஊக்க சலுகைகளை வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை தமிழக முதலமைச்சர் விளையாட்டு வீரர்கள் உயர்ந்த அளவில் சாதனைகள் புரிந்திடுவதை ஊக்குவிக்கும் வகையில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
இதன் அடிப்படையில் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் பெற வாய்ப்புள்ள, திறன் வாய்ந்த சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை உருவாக்குவதற்காக சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை என்ற ஒரு திட்டத்தை துவக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்தத் திட்டத்தின்படி, ஐந்து விளையாட்டு வீரர்கள் /வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இவர்களை சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் பெற தயார் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். விளையாட்டு வீரர்கள் /வீராங்கனைகள் வெளிநாடுகளில் போட்டிகளில் பங்கேற்கவும், விஞ்ஞான ரீதியில் சிறப்பு பயிற்சி பெறவும், உயர்தர விளையாட்டு கருவிகள் மற்றும் பயிற்சிக் கருவிகள் வாங்கிடவும், சத்தான உணவு பெற்றிடவும், விளையாட்டு வீரர்களின் பயிற்றுநர்களின் திறனை மேம்படுத்தவும் ஆண்டு ஒன்றுக்கு 1 கோடியே 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் விளையாட்டுகளில் அதிக அளவில் பங்குபெறுதலை ஊக்குவிப்பதற்காக, தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் உதவித்தொகையை 5,000/ ரூபாயிலிருந்து 10,000/ ரூபாயாக உயர்த்தியும், கல்லூரி மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் உதவித் தொகையை 6,500/ ரூபாயிலிருந்து 13,000/ ரூபாயாக உயர்த்தியும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 39 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் செலவினம் ஏற்படும். மேலும், தமிழகத்தில் உள்ள தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வண்ணம், முதலமைச்சர் கோப்பைக்காக மாநில அளவில் நடத்தப்படும் 20 வகையான தடகள விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று முதல் பரிசு பெறும் ஒவ்வொரு வீரர்/ வீராங்கனைக்கும் தலா 1 லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசு வெல்பவர்களுக்கு தலா 75,000/ ரூபாயும், மற்றும் மூன்றாம் பரிசு வெல்பவர்களுக்கு தலா 25,000/ ரூபாயும், பரிசுத் தொகையாக வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக தொடர் செலவினமாக 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராம அளவில் சிறப்பாக திகழும் விளையாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு, சென்னை நீங்கலாக 31 மாவட்டங்களில், மாவட்டம் ஒன்றுக்கு, ஒரு கிராமம் வீதம், 31 கிராமங்களை தேர்ந்தெடுத்து, அக்கிராமங்களில் பிரபலமாக உள்ள விளையாட்டிற்கு ஏற்ப, விளையாட்டு மைதான வசதி ஏற்படுத்திட ஒவ்வொரு கிராமத்திற்கும் தொடராச் செலவினமாக 1 லட்சம் ரூபாயும், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் உயர்தரப் போட்டிகளில் கிராமங்களில் உள்ள இளைஞர்கள் பங்கேற்கும் வகையில் விளையாட்டு பயிற்சி அளித்திட தொடர் செலவினமாக 1 லட்சம் ரூபாயும் என 31 கிராமங்களுக்கு 62 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அரசின் இந்த நடவடிக்கைகள், பன்னாட்டு மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் அதிக அளவில் தமிழக வீரர்கள் /வீராங்கனைகள் பங்கேற்க வழி வகுக்கும் என முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் உத்தரவிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 10 hours ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை3 days 6 hours ago |
ஆனியன்ப்ரை6 days 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 3 days ago |
-
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு மற்றொரு டாக்டர் பட்டம்
14 May 2024வேலூர் : வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் மாநில பல்கலைக்கழகம் (பிங்ஹாம்டன் பல்கலைக்கழகம்)
-
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் 91.17 சதவீதம் : கோவை மாவட்டம் முதலிடம்
14 May 2024சென்னை : தமிழகத்தில் பிளஸ் -1 தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் தமிழகத்தில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.
-
தயாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி ஆஜர் : விசாரணை ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
14 May 2024சென்னை : தயாநிதி மாறன் தொடர்ந்து அவதூறு வழக்கில் சென்னை எழும்பூர் கோர்ட்டில் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் ஆஜரானார்.
-
மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமல்
14 May 2024சென்னை : சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமலுக்கு வரவுள்ளது.
-
நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது..
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-05-2024.
14 May 2024 -
பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்? - என்.ஐ.ஏ. தீவிர விசாரணை
14 May 2024சென்னை : பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
அரசு மருத்துவமனையில் செலுத்தும் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்
14 May 2024சென்னை : மஞ்சள் காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் செலுத்தும் தடுப்பூசிக்கான சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.&nb
-
சுவாதி மாலிவால் விவகாரம்: டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
14 May 2024புதுடெல்லி : டெல்லி மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ஆம் ஆத்மி எம்.பி.
-
அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
14 May 2024சென்னை : அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
14 May 2024சென்னை : நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
மும்பையில் விளம்பர பதாகை விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
14 May 2024மும்பை : மும்பையில் விளம்பர பதாகை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
-
சிவப்பு நிற உதட்டுச்சாயம் பூசும் பெண்களுக்கு அபராதம்: அதிபர் கிம்
14 May 2024பியாங்கியாங் : தங்கள் நாட்டு பெண்கள் சிவப்பு நிற உதட்டு சாயத்தை பூசிக்கொள்ள கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ள வடகொரிய அரசு இந்த தடையை மீறினால் கடும் நடவடிக்கை எ
-
நடப்பு கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 17-க்குள் விண்ணப்பிக்கலாம் : பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
14 May 2024சென்னை : நடப்பு கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கு மே 71 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
-
சிங்கப்பூரில் சட்டத்துறை துணை அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த முரளி பிள்ளை நியமனம்
14 May 2024சிங்கப்பூர் : சிங்கப்பூரில் சட்டம் மற்றும் போக்குவரத்து துறை துணை அமைச்சராக இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரான முரளி பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்.
-
நேபாள துணை பிரதமர் உபேந்திர யாதவ் ராஜினாமா
14 May 2024காத்மண்டு : நேபாளத்தில், நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி.-என்.) தலைவரும், துணை பிரதமருமான உபேந்திர யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
-
காங்கிரஸ் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜ் நியமனம்
14 May 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜை நியமனம் செய்து அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள்: புதுச்சேரியில் 97.75 சதவீதம் பேர் தேர்ச்சி
14 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 4-ம் தேதி முதல் 25-ந் தேதி வரை பிளஸ் 1 பொதுத்தேர்வு நடந்தது.
-
ஈரானுடன் சபஹர் துறைமுக ஒப்பந்தம்: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
14 May 2024வாஷிங்டன் : ஈரானுடன் சபஹர் துறைமுக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கோழிக்கோட்டில் மோசமான வானிலை: துபாய் விமானங்கள் கோவைக்கு திருப்பி விடப்பட்டன
14 May 2024கோழிக்கோடு : கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மோசமான வானிலை நிலவியதால், துபாயிலிருந்து வந்து இரண்டு விமானங்கள் கோவை விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன.
-
கென்யாவில் வெள்ளம்: 40 டன் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த இந்தியா
14 May 2024புதுடெல்லி : கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கென்யாவுக்கு 40 டன் மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், மீட்பு உபகரணங்கள், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட நிவ
-
விமான நிலையம், பள்ளிகளை தொடர்ந்து திகார் சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல் : டெல்லியில் பரபரப்பு
14 May 2024புதுடெல்லி : தலைநகர் டெல்லியில் அண்மைக்காலமாக பள்ளிகள், விமான நிலையம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது திகார் சிறைக்கும் வெடிகுண
-
தேர்தலில் போட்டியிட தடைகோரி மனு: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு : சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடரும் போராட்டம்: பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி
14 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடரும் போராட்டத்தின் விளைவாக பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
கல்லூரிகளில் தமிழ் பாட வகுப்புகள் குறைப்பு : புதுச்சேரி அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
14 May 2024புதுச்சேரி : கல்லூரிகளில் தமிழ் பாட வகுப்புகளை குறைத்தது தொடர்பாக பதிலளிக்க புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.