முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் சிரஞ்சீவி மருமகன் திடீர் தலைமறைவு

சனிக்கிழமை, 19 மார்ச் 2011      சினிமா
Image Unavailable

 

நகரி, மார்ச்.19 - நடிகர் சிரஞ்சீவியின் 2 வது மகள் ஸ்ரீஜா. இவர் கடந்த 2007ம் ஆண்டு என்ஜினீயர் சிரிஷ்பரத்வாஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் ஸ்ரீஜா சில நாட்களுக்கு முன் தன் கணவர் மீது ஐதராபாத் தில் உள்ள பஷின்பாக் காவல் நிலையத்தில் வரதட்சணை புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரில் என் கணவர், மாமியார் சூர்யமங்களா, மாமனார் ஆகியோரும் ரூ.1.5 கோடி வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை  எடுக்கவேண்டும் என்று குறிப்பிடிருந்தார். இதனை தொடர்ந்து  கணவர்,மாமனார், மாமியார் ஆகிய 3 பேர் மீது வரதட்சணை வழக்கு பதிவு செய்து சிரிஷ்பரத்வாஜை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணைக்கு பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். 

இந்த நிலையில் பரத்வாஜூம் அவரது பெற்றோரும் திடீரென தலைமறைவாகினர். இதற்கிடையே 3 பேரும் ஐதராபாத் நாம்பள்ளி கோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு மனு செய்தநர். அந்த மனுவில் சிரஞ்சீவி குடும்பத்தாரின் ஆலோசனையின் பேரில் எங்கள் மீது ஸ்ரீஜா பொய் புகார் கொடுத்துள்ளார். அவரை நாங்கள் சித்ரவதை ஏதும் செய்யவில்லை. எங்கள் மீதான புகாரை நன்றாக விசாரித்தால் உண்மை வெளிவரும். எங்களை கைது செய்யாமலிருக்க முன் ஜாமீன் தரவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வழக்கு வரும் திங்கள் கிழமை விசாரணைக்கு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்