முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் பாக்.கில் 14 தீவிரவாதிகள் பலி

சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், பிப்.- 18 - பாகிஸ்தானின் வடக்கு வஜ்ரிஸ்தான் பிராந்தியத்தில் அமெரிக்க உளவு விமானம் நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் 14 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.  ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறினாலும்கூட அங்குள்ள சில முக்கிய இடங்களில் அமெரிக்க உளவு படை விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. பாகிஸ்தானில் அல்கொய்தா, தலிபான் தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக திகழும் வஜ்ரிஸ்தான் பழங்குடியினர் பகுதியில் அமெரிக்கா அடிக்கடி ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த 9 ம் தேதி நடத்தப்பட்ட இதுபோன்ற ஒரு தாக்குதலில் 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இப்போது புதிதாக மேலும் சில ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. வஜ்ரிஸ்தானில் உள்ள நீர்அலி என்ற நகருக்கு அருகே ஷாகெய் என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது அமெரிக்காவின் ஆளில்லாத உளவு விமானம் இரண்டு ஏவுகணைகளை வீசி தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதலில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். தாக்குதலுக்கு உள்ளான அந்த வீடு முற்றிலுமாக தரைமட்டமானது. இரண்டாவதாக இதே வஜ்ரிஸ்தான் மாகாணத்தில் வேறு ஒரு இடத்தில் நடந்த ஏவுகணை தாக்குதலில் 8 தீவிரவாதிகள் பலியானார்கள். இந்த ஏவுகணை தாக்குதல்களை 8 மணி நேரத்தில் அமெரிக்க உளவுப்படை விமானம் நடத்தியுள்ளது.  இந்த புதிய ஏவுகணை தாக்குதல்களில் மொத்தம் 14 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை பாகிஸ்தான் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்