முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைன் எல்லையில் ரஷ்ய படைகள்: நேட்டோ புகார்

சனிக்கிழமை, 21 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

கீவ், ஜூன்.22 - உக்ரைன் எல்லையில் தனது படைகளை ரஷ்யா மீண்டும் குவித்து வருவதாக நேட்டோ அமைப்பு புகார் தெரிவித்துள்ளது. உக்ரைனின் புதிய அதிபர் பெட்ரோ போரோ ஐரோப்பிய யூனியனுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதுடன் மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான நடவடிக்கையில் ஈடுபடுவதால் கோபமடைந்துள்ள ரஷ்யா இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் நேட்டோ குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன் பாராளுமன்றத்தில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டதையடுத்து அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரும், ஜெர்மனிக்கான தூதருமான பால்வோ கிளிம்கின் தலைமையிலான பிரதிநிதிகள் ஐரோப்பிய யூனியனுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளனர். இதனால், உக்ரைன் கிழக்குப் பகுதியில் நிலவும் பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து ரஷ்யா உடனான பேச்சுவார்த்தைக்கான கதவுகள் சாத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. 

முன்னதாக, போரோ ரஷ்ய அதிபர் புடினை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, 1991-ஆம் ஆண்டு உக்ரைன் சுதந்திரம் பெற்றதிலிருந்து சந்தித்து வரும் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதை புடினிடம் அவர் வலியுறுத்தினார். மேலும், 10 வாரங்களுக்கு ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மீதான நடவடிக்கையை நிறுத்திவைக்கவும் போரோ ஒப்புக் கொண்டார். ஆனால் உக்ரைனின் கிழக்குப் பகுதிக்கு விடுதலை கொரும் கிளர்ச்சியாளர்கள் இதை ஏற்கவில்லை. எனினும், போரோவின் கருத்துக்கு ரஷ்யா இசைவு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்