முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக்கில் தீவிரவாதிகள் முகாம் தாக்குதல்: 57 பேர் பலி

வியாழக்கிழமை, 26 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

பாக்தாத், ஜூன் 27 - ஈராக்கில் தாக்குதல் நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து பல்வேறு நகரங்களையும் கைப்பற்றி வருகிறார்கள். அவர்களை எதிர்கொள்ள முடியாமல் ஈராக் ராணுவம் தவிக்கிறது. ஈராக்கை தாக்கி வரும் அதே தீவிரவாதிகள் அண்டை நாடான சிரியாவிலும் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். தீவிரவாதிகளின் பெரும் படையினர் ஈராக்கில் உள்ள அன்பார் பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

அவர்கள் மீது சிரியா ராணுவம் திடீரென விமான தாக்குதல் நடத்தியது. தீவிரவாதிகள் முகாம்கள் மீது குறி வைத்து குண்டு வீசினார்கள். ஆனால் அந்த குண்டுகள் தீவிரவாதிகள் முகாம் மீது விழுவதற்கு பதிலாக பொதுமக்கள் வசிக்கும் பல பகுதிகளில் விழுந்தன. இதில் 57 அப்பாவி பொதுமக்கள் பலியானார்கள். 120 பேர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினாலும் தங்கள் நாட்டு எல்லைக்குள் புகுந்து தாக்கியதால் சிரியாவுக்கு ஈராக் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்