முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீடி - சிகரெட் மீது 50% வரி விதிக்க மத்திய அரசு கடிதம்

திங்கட்கிழமை, 7 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை.8 - உலகிலேயே புகையிலை பொருட்கள் உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. புகையிலை பொருட்களை பயன்படுத்துவதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 15 வயதிற்கும் மேற்பட்டவர்கள் புகையிலையைபயன்படுத்துகிறார்கள்.

புகையிலையை உபயோகப்படுத்துவதால்பல நோய்கள் ஏற்படுகின்றன. இவ்வகையில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 35-வயதிலிருந்து 69 வயது வரை உள்ளவர்களின் நோய் பாதிப்பை சரிசெய்ய செலவான தொகை ஒரு லட்சத்து 4,500 கோடி ரூபாய் ஆகும். இந்தியாவிலும், உலக அளவிலும் தொற்று நோய்கள் அல்லாத வியாதிகளே மரணத்தில் பெரும் பாங்கு வகிக்கின்றன. 2008-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு படி இந்தியாவில் 52 லட்சம் பெர் இந்த நோயாள் இறந்துள்ளனர்.

பீடி உள்பட புகையிலை பொருட்களின் மீது கடுமையான வரி விதிப்பதன் மூலம், மக்களின் உடல் நடம் பெரும் பொது சகாதாரத்திற்காக செலவிடப்படும் தொகையும் குறையும். இவற்றைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை மந்திரி டாக்டர் ஹர்ஷவர்த்தன், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதலமைச்சர்கள், கவர்னர்கள் என அனைவருக்கும் கடிதம் எழுதியுள்ளன.

புகையிலைப் பொருட்களின் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைந்தபட்சம் 50 சதவீதமாக நிர்ண யிக்க ஆலோசனை கூறி உள்ளார். புகையிலை மீதான வரி விதிப்பில் நாட்டிலேயே ராஜ்ஸ்தான் மாநிலம் முன்னணியில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்