முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: 27 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 1 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

காஸா, ஆக.02 - 72 மணி நேர போர் நிறுத்தத்தை மீறி பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 27 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் செய்யப்பட்டுள்ளனர்.

பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் கடந்த 3 வாரங்களாக தாக்குதலை நடத்தி ஆயிரக்கணக்கான உயிர்களை பரித்துள்ளது. லட்சக்கணக்கான பொதுமக்கள் அகதிகளாகி உள்ளனர். அப்படி அகதிகளாக அடைக்கலம் புகுந்த பள்ளிக்கூடங்களையும் படுபாதக இஸ்ரேல் விட்டுவைக்கவில்லை. அவற்றின் மீதும் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்திவருகிறது வருகிறது.

இந்த நிலையில் சர்வதேச நாடுகள் முன் முயற்சியில் 72 மணி நேர போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடைபிடிக்க இஸ்ரேலும் காஸாவும் ஒப்புக் கொண்டன. ஆனால், நேற்று காலை 5 மணிக்கு இந்த போர் நிறுத்தம் முறிந்து போனது. இஸ்ரேல்- ஹமாஸ் இரு தரப்புமே போர் நிறுத்தத்தை மதிப்பதாக முன்னர் கூறியிருந்த போதிலும், அதனை முறித்துக் கொண்டு மீண்டும் போரைத் தொடர்ந்துள்ளன.

போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்த நிலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மொத்தம் 27 அப்பாவி பாலஸ்தீனர்கள் பலியாகி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்