முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜய் மால்யாவின் பாதுகாவலர் மர்ம மரணம்!

சனிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

பனாஜி,ஆக.17 - கோவாவில் உள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மால்யாவின் ‘கிங்ஃபிஷர் வில்லா’வில் பாதுகாவலர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் என்று அம்மாநில காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், "பீகாரைச் சேர்ந்த சரஜ் குமார் சிங் என்பவர் விஜய் மால்யாவின் ‘கிங்ஃபிஷர் வில்லா’வில் பாதுகாப்பு அதிகாரியாக பணிப் புரிந்துவந்தார். அவர் வெள்ளிக்கிழமையன்று மர்மமான முறையில் மரணம் அடைந்ததையடுத்து, அது தொடர்பாக கலன்குட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது", என்று தெரிவித்தனர். கோவா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது என்றும் அந்தி காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்