முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் ராஜ்குமார் சிலைக்கு தீ: பெங்களூரில் பதட்டம்

வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014      சினிமா
Image Unavailable

 

பெங்களூரூ, நவ 15 - மறைந்த கன்னட நடிகர் ராஜ்குாரின் சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து சேதம் செய்ததையடுத்து பெங்களூரூவில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

பெங்களூரூ ராஜராஜேஸ்வரி நகர் ப ங்காரப்பா நகரில் நிறுவப்பட்டிருந்த ராஜ்குமாரின் சிலை வரும் 24ம் தேதி திறக்கப்படவிருந்தது. இந்த நிலையில் கடந்த புதனன்று இரவு அந்த சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு தப்பி சென்றனர். இதனால் சிலை முழுவதும் சேதமடைந்தது. மறுநாள் இதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ராஜ்குமாரின் சிலை சேதப்படுத்தப்பட்ட செய்தி பெங்களூரூ முழுவதும் பரவியதால் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து ராஜ்குமார் ரசிகர் மன்றத்தினர் உட்பட கன்னட சங்கங்களை சேர்ந்தவர்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த பகுதிக்கு பலத்த போலீஸ் காவல் போடப்பட்டது. சம்பவ இடத்தில் மாநகர கூடுதல் ஆணையர் ஆலோக்குமார், து ணை ஆணையர்கள் லபுராம், அபிஷேக் கோயல் ஆகியோர் பார்வையிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்