முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்கள் பர்தா அணியக் கூடாது: முலாயம்சிங்

செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

 

லக்னோ, நவ.19 - சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் தன் கட்சி மகளின் அணி நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:

உத்திரப்பிரதேச மாநில கிராமங்களில் இந்து பெண்களும், முஸ்லிம் பெண்களும் பர்தா அணிகிறார்கள். இந்த பழக்கத்தை பெண்கள் கைவிட வேண்டும். பெண்கள் பர்தா அணிந்தால், அவர்களது வளர்ச்சி முன்னேற்றம் தடைப்படும். எனவே காலத்துக்கு ஒவ்வாத பர்தாவை கைவிட வேண்டும். கடந்த காலங்களில் இந்திய பெண்கள் பர்தா அணிந்தது இல்லை. சீதையும், திரவுபதியும் பர்தா அணிந்தார்களா? இல்லையே, வெயிலில் இருந்து தப்பிக்க போடப்பட்ட பர்தா நிரந்தரமாகிவிட்டது.

பெண்கள் பர்தா அணிவது தவறான பழக்கமாகும். இதை அகற்ற வேண்டும். இந்த தீய பழக்கத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு பெண்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முலாயம்சிங் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்