முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலில் 10 மணி நேரத்தில் தரிசனம்

ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை - திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் நேற்று 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள் தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில், விசேஷ தினங்களில் பக்தர்கள் லட்சக்கணக்கில் வருவதால் அன்று பல மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசிக்க வேண்டியிருக்கும்.
இந்நிலையில் நேற்று முன் தினம் அதிகாலை 3 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 67,030 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று காலை நிலவரப்படி இலவச தரிசனத்துக்கான வைகுண்டம் காம்ப்ளக்சில் 10 அறைகளில் பக்தர்கள் காத்திருந்தனர். அவர்கள் 10 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மலைப் பாதை வழியாக நடந்து வந்த திவ்ய தரிசன பக்தர்கள் 5 அறைகளில் காத்திருந்தனர். அவர்கள் தரிசனத்துக்கு 4 மணி நேரம் ஆனது . ஆன்லைனில் ரூ.300க்கான சிறப்பு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து