எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - சென்னை வேப்பேரி காளத்தியப்பன் தெருவில் 3 மாடி வீட்டில் வசிப்பவர் ஹேமந்த் ராஜ் ஜெயின் (50). இவரது மனைவி மஞ்சு (48). இவர்களுக்கு ஆசிஷ்குஞ்ச் (23) என்ற மகனும், பூஜா (21) என்ற மகளும் உள்ளனர்.
ஹேமந்த்ராஜ் சவுகார் பேட்டையில் எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் ஹேமந்த்ராஜ் கடைக்கு சென்று விட்டார். மகன் ஆசிஷ், மகள் பூஜா இருவரும் வெளியே சென்று விட்டனர். வீட்டில் மஞ்சு மட்டும் தனியாக இருந்தார். மாலை 5.30 மணியளவில் பூஜா வீட்டுக்கு வந்தார். அப்போது மஞ்சு கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இந்த தகவல் அறிந்ததும் கணவர் ஹேமந்த்ராஜ் கடையில் இருந்து வீட்டுக்கு வந்தார்.
இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ராமகிருஷ்ணன், வேப்பேரி உதவி கமிஷனர் ரவிசங்கர், இன்ஸ்பெக்டர்கள் பிரபு, ரங்கசாமி ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.அப்போது கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்து மஞ்சுவை கொலை செய்து விட்டு 1 கிலோ நகைகளுடன் தப்பி ஓடி விட்டதாக போலீசில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் வீட்டுக்கு பூச்சி மருந்து அடிக்க 2 பேர் வந்ததாகவும் அவர்கள் மஞ்சுவை கொலை செய்து விட்டு நகைகளுடன் தப்பி சென்றிருக்கலாம் என்றும் கணவர் ஹேமந்த்ராஜ் போலீசாரிடம் தெரிவித்தார் விசாரணையின் போது எதிரே உள்ள பள்ளியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதில் கொலையாளியின் உருவம் பதிந்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினார்கள்.கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது மாலை 5.30 மணி முதல் 6.15 மணிக்குள் ஒருவர் மஞ்சு வீட்டுக்கு வந்தது தெரிய வந்தது. அவர் ஜெயின் சமூகத்தை சேர்ந்த ஆள் போல காணப்பட்டார்.
இதையடுத்து உறவினர்களை அழைத்து அந்த காட்சிகளை போலீசார் காட்டினார்கள். அப்போது வீடியோவில் பதிவாகி இருந்தது மஞ்சுவின் கணவர் ஹேமந்த்ராஜ் என்று தெரிய வந்தது. அதே நேரத்தில் ஹேமந்த் ராஜ் கடையில் இல்லை என்பதும் உறுதியானது.இதையடுத்து ஹேமந்த்ராஜை பிடித்து போலீசார் கிடுக்கிபிடி விசாரணை நடத்தினார்கள்.
இதில் மனைவியை அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.அவரே மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடியது தெரியவந்தது. கொள்ளையர்கள் 1 கிலோ நகையுடன் தப்பி சென்றதாக ஹேமந்த்ராஜ் கூறி இருந்தார். ஆனால் 1 கிலோ நகை அங்கு இல்லை. 15 பவுன் நகையை ஹேமந்த் ராஜே எடுத்து படுக்கை அறையில் மனைவியின் புடவைக்குள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து ஹேமந்த் ராஜை போலீசார் கைது செய்தனர். நகையையும் பறிமுதல் செய்தனர்.
மனைவியை கொன்றது ஏன் என்பது குறித்து ஹேமந்த் ராஜ் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:–எனது மனைவி மஞ்சுவுக்கும் எனக்கும் திருமணமாகி நீண்ட நாட்கள் ஆகியும் பல நேரங்களில் எனது பேச்சை அவர் கேட்பதில்லை. அனைத்து விஷயங்களிலுமே எனது எண்ணங்களுக்கு எதிர்மாறாகவே செயல்பட்டு வந்தார்.இதனால் எனது மகன் ஆஷிஷ்குஞ்ச் திருமணமும் தள்ளிக் கொண்டே சென்றது. பல இடங்களில் பெண் பார்த்தும் எனக்கு பிடித்திருந்தும் என் மனைவிக்கு பிடிக்க வில்லை.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் எனது மகனுக்கு ஒரு இடத்தில் பெண் பார்த்து திருமணமும் நிச்சயிக்கப்பட்டு விட்டது. பெண் வீட்டாருடன் சேர்ந்து கொல்கத்தாவுக்கு சென்று திருமணத்துக்கு தேவையான ஆடைகள் மற்றும் பொருட்கள் வாங்க முடிவு செய்திருந்தேன். இதற்காக பெண் வீட்டாரும் நானும் செல்வதற்கு ரெயிலில் டிக்கெட் கூட எடுத்து விட்டோம். ஆனால் எனது மனைவி கொல்கத்தாவுக்கு செல்லக் கூடாது என்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்தார். இது தொடர்பாக கடந்த சில நாட்களாகவே எங்களுக்குள் வாக்கு வாதமும் ஏற்பட்டு வந்தது.
நேற்று காலையிலும் கொல்கத்தாவுக்கு போகக் கூடாது என்று என்னிடம் தகராறு செய்தார். நான் எதைச் செய்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த எனது மனைவி மஞ்சு திருமண விஷயத்திலும் இப்படி நடந்து கொள்கிறாரே என்று எனக்கு மிகவும் கோபமாக இருந்தது. இதனால் மிகுந்த மனஉளைச்சலுடனேயே நான் காலையில் கடைக்கு சென்றேன்.பின்னர் மாலையில் கொல்கத்தா செல்வது சம்பந்தமாக அவரிடம் பேசுவதற்காக கடையில் இருந்து வீட்டுக்கு சென்றேன். அப்போது எனக்கும் மனைவிக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது.
கொல்கத்தாவுக்கு யாரும் செல்லக் கூடாது என்று கூறி என்னிடம் சண்டை போட்டார்.இதனால் ஆத்திரம் அடைந்த நான் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மஞ்சுவின் கழுத்தை அறுத்து கொலை செய்தேன். பின்னர் எதுவும் தெரியாதது போல கதவை பூட்டி விட்டு கடைக்கு சென்று விட்டேன். சிறிது நேரத்தில் எனது மகன் ஆசிஷ் என்னிடம் வீட்டில் அம்மா இல்லையாம். கதவு பூட்டப்பட்டுள்ளதாக தங்கை பூஜா கூறுகிறாள்.
நீங்கள் வீட்டிற்கு சென்றீர்களா என்று கூறி சாவியை கேட்டான்.அப்போதும் நான் எதுவும் தெரியாதது போலவே இருந்து விட்டேன். பின்னர் ஆசிஷ் கடையில் இருந்த வீட்டு சாவியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றான். அங்கிருந்து எனக்கு போன் செய்து தாய் மஞ்சுவை யாரோ கொலை செய்து விட்டார்கள் என்று கூறினான்.இதையடுத்து நான் எதுவும் தெரியாதது போல அலறியடித்துக் கொண்டு வீட்டுக்கு ஓடினேன். அங்கு மஞ்சுவின் உடலை பார்த்து கதறி அழுதேன்.
போலீசாருக்கு என் மீது சந்தேகம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக காலையில் பூச்சி மருந்து அடிப்பதற்கு 2 பேர் வந்ததாகவும் அவர்கள் தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என்றும் கூறினேன். இதனை எல்லோருமே நம்பி விட்டனர்.
ஆனால் வீட்டுலேயே நான் பதித்து வைத்திருந்த நகையும், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளும் தான் நான் கொலையாளி என்பதை காட்டிக் கொடுத்து விட்டன. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 12 hours ago |
ஆனியன்ப்ரை5 days 11 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
13 May 2024சென்னை, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர் என்று தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2024.
13 May 2024 -
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்
13 May 2024அமராவதி, ஆந்திராவில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
ஹரா திரைப்பட இசை வெளியீடு
13 May 2024கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரித்துள்ள 'ஹரா' திரைப்படத்தை ஜூன் 7ம் தேதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது
-
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ். இரங்கல்
13 May 2024சென்னை, நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.
13 May 2024சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத
-
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது "என் உயிருக்கு ஆபத்து" என ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர் : போலீசார் முன்னிலையில் கோஷமிட்டதால் பரபரப்பு
13 May 2024கோவை : கோவையில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் போலீசார் முன்னிலையில் என் உயிருக்கு ஆபத்து என சவுக்கு சங்கர் ஆவேசமாக குரல் எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட
-
சந்தேக மரணமாக வழக்கு மாற்றம்: ஜெயக்குமார் மரணம் குறித்து தென்மண்டல ஐ.ஜி. விளக்கம்
13 May 2024நெல்லை, சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள தென்மண்டல ஐ.ஜி., இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழக்கில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்
-
அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி எதுவும் அளிக்கவில்லை : கவர்னர் விளக்கம்
13 May 2024சென்னை : அண்ணாமலைக்கு எதிராக கிரிமினல் வழக்குப்பதிய அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் கஞ்சா வணிகத்தை தடுக்க நேர்மையாக செயல்பட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை
13 May 2024சென்னை, கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளி தப்புவதற்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
'விக்கிரவாண்டி' இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்
13 May 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க நகைச்சுவை தொடர் Garfield
13 May 2024ஒரு சுட்டியான பூனைக்குட்டியின் பெயர்!
தனது எஜமானின் வீட்டில் வாழும் Garfield க்கு, Odie ஒரு நாய் , உற்ற நண்பன்!
-
"குற்றம் புதிது" பட தொடக்க விழா
13 May 2024GKR CINE ARTS என்ற பட நிறுவனம் சார்பில் DR.S.கார்த்திகேயன் , தருண் கார்த்திகேயன் தயாரிக்கும் படம் " குற்றம் புதிது "
-
நான் உயிரோடு இருக்கும்வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது : பீகார் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஆவேசம்
13 May 2024பாட்னா : பீகாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், "நான் உயிருடன் இருக்கும் வரை இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது" என பிரதமர் மோடி ஆவேசமாக பேசினார்.
-
ரஷ்யா மீது உக்ரைன் வான்வழி தாக்குதல்: 19 பேர் உயிரிழப்பு
13 May 2024மாஸ்கோ, ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய வான் தாக்குதலில் 10 தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 15 பேரும், அதன்பின்னர் நடந்த தாக்குதலில் 4 பேரும் இறந்துள்ளன
-
குழந்தைகளின் திரைப்படமாக 'புஜ்ஜி அட் அனுப்பட்டி'
13 May 2024குழந்தைகளின் திரைப்படமாக 'புஜ்ஜி அட் அனுப்பட்டி' படம் பற்றி இயக்குநர் ராம் கந்தசாமி கூறியதாவது.
-
3 டன் மலர்களை கொண்டு திருப்பதி கோதண்டராமர் கோவிலில் புஷ்ப யாகம்
13 May 2024திருப்பதி, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் 3 டன் மலர்களால் உற்சவர்கள் சீதா, லட்சுமணர், கோதண்டராமருக்கு புஷ்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம் நடந்தது.
-
ஹிட்லிஸ்ட் இசை வெளியீடு
13 May 2024இயக்குனர் மற்றும் நடிகர் கே.எஸ்.ரவிக்குமாரின் RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது 'ஹிட்லிஸ்ட்' திரைப்படம்.