முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கொழுப்பை கரைக்கும்

3 வாரங்கள் தினமும் ஒரு கப் காரட் எடுத்துக் கொண்டால் ரத்தத்தில் உள்ள கொலெஸ்ட்ரால் அளவு 11% குறைவதாக அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. காரட்டில் உள்ள எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்தினால் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. மேலும் மாலைக் கண் நோயை தடுக்கும். புற்று நோயிலிருந்து காக்க காரட் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கவனம் தேவை

ஒரே சோப்பை குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்துவது சரியல்ல. ஒருவரிடம் இருக்கும் சருமப் பிரச்சனை மற்றொருவருக்குப் பரவும் வாய்ப்பு இதனால் அதிகமாகும்,  மேலும், இது சுகாதாரமானது கிடையாது. பி.ஹெச் அளவு 5.5 இருக்கிற சோப்பாகத் தேர்ந்தெடுப்பது நல்லது.

டினோசர்கள் எந்தெந்த நாடுகளில் வாழ்ந்தன என தெரியுமா?

டினோசர் என்றாலே பெரியவர்கள் தொடங்கி சிறிவர்கள் வரை அனைவருக்கும் ஆர்வம் தான். ஒரு காலத்தில் பூமியில் வாழ்ந்து அழிந்து போன உயிரினங்களில் மிகப் பெரியவை டினோசர்கள். அவை குறித்த ஆய்வுகள் உலகம் முழுவதிலும் நடைபெற்று வருகின்றன. அதில் அண்மையில் நடைபெற்ற ஆய்வில் டினோசர்கள் 90 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு அண்டார்டிகா பகுதிகளில் நடமாடியது தெரியவந்துள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த ஆல்ப்ரெட் வேக்னர் கல்வி நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொண்டது. இதன் முடிவுகள் நேச்சர் இதழிலும் வெளியிடப்பட்டன. 90 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அண்டார்டிகா பிரதேசம் இப்போது போல பனி படர்ந்த பிரதேசமாக இல்லாமல் அடர்ந்த வனமாக இருந்தததாக சொல்லப்படுகிறது. அவற்றில் டினோசர்கள் நடமாடின என்கிறது அந்த ஆய்வு.

உலகின் மிக பழமையான ஒயின் பாட்டில் அண்மையில் கண்டுபிடிப்பு

மேலைநாடுகளில் ஒயினை தயாரிப்பதும், அவற்றை நூறாண்டுகளாக, தலைமுறை தலைமுறையாக பாதுகாப்பதும் வழக்கம். அண்மையில் ரோமை சேர்ந்த செல்வந்தர் ஒருவரின் கல்லறை ஜெர்மனியில் அமைந்துள்ளது. அதில்தான் உலகிலேயே மிகவும் பழமையான ஒயின் பாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஒயின் 4 நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. கிட்டத்தட்ட 1650 ஆண்டுகள் பழமையானதாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருப்பதால் திறந்தால் என்ன ஆகும் என்றோ, தற்போது அது நச்சுத் தன்மைய உடையதாகவோ மாறியிருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இருந்த போதிலும் திறக்கப்படாத பாட்டிலில் அடைக்கப்பட்ட மிக பழமையான ஒயினாக இது கருதப்படுகிறது.

பேரழிவை நோக்கி பூமி

பருவ நிலை மாற்றங்கள், புவி வெப்பமயமாதல் போன்றவற்றால் பூமி சுனாமி, சூறாவளி மற்றும் பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவுகளுக்கு உட்படுமாம். படிப்படியாக இதுபோன்ற அழிவுகளால் பூமி, 2100 ம் ஆண்டிற்குள் முற்றிலும் அழிவை சந்திக்கும் என மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. முதலில் கடல் இனங்கள் 95 சதவிகிதம் அழியும். இதைதொடர்ந்து, மற்ற இடங்களுக்கு பேரழிவு தொடருமாம். இதுவரை ஆர்டோவிசினியன், டெவோனியன், பெர்மியன் - ட்ராயாசிக், ஜூராஸிக், க்ரட்டாசியஸ் எனப்படும் 5 காலகட்டங்களில், உலகில் உள்ள உயிர்கள் 5 பேரழிவுகளைச் சந்தித்தது. இதற்கு இணையான ஒரு பேரழிவு வரும் 2100ம் ஆண்டுக்குள் நடக்கும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

நெருங்கும் ஆபத்து ...

தற்போது, வேலைப்பளு, மன உளைச்சல், தூக்கமின்மை, தவறான பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட காரணங்களால் இரவு 11 மணிக்கு மேல் தூங்கினால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் நம்மை தாக்கும் அபாயம் உள்ளது. முதலில் செரிமானக் கோளாறு, வாயு தொல்லை என தொடங்கி 35 வயதிற்கு பிறகு புற்றுநோயாகவும் மாற வாய்ப்புள்ளதாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago