ஐம்பது கிராம் கொல்லையும், ஐம்பது கிராம் புளியும், 300 மில்லி அளவு வெந்நீரில் இரவில் ஊறவைக்க வேண்டும். காலையில் கொதிக்க வைத்து 100 மில்லியாக வற்றச்செய்யவேண்டும். வற்றியதும் வடிகட்டி சிறிது சுக்கு, மரமஞ்சள் பொடிகளைச் சேர்க்க வேண்டும். அத்துடன் தேன் கலந்து வெறும் வயிற்றில் பருகினால் பசி தூண்டப்படும், செரிமானம் அதிகரிக்கும்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
உலகில் முதன்முறையாக கிங்ஸ்டனில் உள்ள டோனர் எனும் பொம்மை நிறுவனம் திருநங்கை வடிவிலான பொம்மைகளைத் தயாரித்துள்ளது. திருநங்கையான ஜாஸ் ஜென்னிங்ஸை மாடலாக வைத்து இந்த பொம்மைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் திருநங்கைகள் குறித்த நேர்மறை எண்ணங்கள் மக்களிடம் ஏற்படுமாம்,
உலகின் முதல் முழு நீள அனிமேஷன் சினிமா எங்கு தயாரிக்கப்பட்டது தெரியுமா.. நாம் அனைவரும் யூகிப்பது போல அமெரிக்காவில் உள்ள ஹாலிவுட்டிலோ.. இங்கிலாந்திலோ அல்ல. மாறாக உலகின் முதல் முழு நீள அனிமேஷன் திரைப்படம் அர்ஜென்டினாவில் தயாரிக்கப்பட்டது. El Apóstol என்று பெயரிடப்பட்ட அரசியல் நகைச்சுவை படமாக இந்த படம் 1917 இல் தயாரிக்கப்பட்டது. 70 நிமிடங்கள் கொண்ட அப்படத்தை Quirino Cristiani என்ற இத்தாலியர் அப்படத்தை இயக்கியிருந்தார். ஆனால், பெரும்பாலும் 1937 இல் வால்ட் டிஸ்னியால் எடுக்கப்பட்ட Snow White and the Seven Dwarfs என்ற படத்தையே முதன்முதலாக எடுக்கப்பட்ட முழு நீள அனிமேஷன் படம் என பெரும்பாலானோர் கருதிக் கொண்டிருக்கின்றனர். மேலும் அந்த அர்ஜென்டினா படம் கின்னஸிலும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதயம், எலும்புகள் பலப்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்கும் சிறந்த மற்றும் எளிய பயிற்சியான நடை பயிற்சி உடல் உறுப்புகள் அனை்ததுக்கும் பயனளித்து, கொழுப்பைக் கரைத்து, உடலை கட்டுகோப்பாக வைக்கிறது. நடைபயிற்சியை நாம் தொடர்ந்து தடையில்லாமல் மேற்கொள்ள காலை பொழுதில், பூங்காக்களில் நண்பர் அல்லது உறவினரோடு நடப்பதை வழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.
மியாமி, பெர்முடா தீவு மற்றும் புவேர்ட்டோ ரிக்கோவுக்கு இடையே அமைந்திருக்கும் மிகப்பெரிய கடல் பரப்பளவு தான் பெர்முடா முக்கோணம். இங்கு கடலில் கடக்கும் கப்பல்கள், வானத்தில் கடக்கும் விமானங்கள் உள்வாங்கி மறைந்தன. அதற்கான காரணம் பெர்முடா முக்கோணத்தின் மேல் இருக்கும் மேகங்கள் தானாம். கில்லர் க்ளவுட்ஸ் என்று அழைக்கப்படும், பெர்முடா முக்கோணத்தின் மேல் இருக்கும் இந்த மேகங்கள் அறுங்கோண வடிவில் (Hexagonal) இருப்பதால், அங்கு காற்று மணிக்கு 170 மைல் வேகத்தில் பயணிக்கிறது. இதனாலேயே, பெர்முடா முக்கோணம் பகுதியில் கப்பல்கள் மற்றும் விமானங்கள் உள்வாங்கின என்றும் ஆராய்ச்சியார்கள் கூறுகின்றனர்.
பொதுவாக கார் உள்ளிட்ட மோட்டார் வாகனங்கள் என்றாலே புகையை கக்கிக் கொண்டு செல்லும் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். ஆனால் நீரை வெளிவிடும் கார் வந்துள்ளது தெரியுமா.. இந்தியாவில் ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தும் முதல் காரை டொயோட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது டொயோட்டாவின் இந்த மிராய் வகைக் கார்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 646 கிலோமீட்டர் வரை செல்லும் திறன்கொண்டவை. பெட்ரோல், டீசல் கார்களுக்குச் சிறந்த மாற்றாக விளங்கும் இந்தக் காரில் அதிக அழுத்தத்தைத் தாங்கும் ஹைட்ரஜன் எரிபொருள் டேங்கும், மின்மோட்டாரும் உள்ளன. ஹைட்ரஜனை நீராகவும் ஆக்சிஜனாகவும் மாற்றுவதன் மூலம் கார் ஓடுவதற்கான ஆற்றல் கிடைக்கிறது. இந்தக் காரில் உள்ள எஞ்சின் புகையை வெளியிடுவதற்குப் பதில் நீரை வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


