முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கலாம் பெயர்

விண்வெளியில் ஐ.எஸ்.எஸ். என்று அழைக்கப்படும் சர்வதேச விண்வெளி மையத்தில் புதிய உயிரினம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய உயிரினம், பாக்டீரியா வடிவம் போன்றது. இந்த உயிரினம் பூமியில் காணப்படுவதில்லை. சர்வதேச விண்வெளி நிலையத்தில் மட்டுமே காணப்படுபவை. இந்த உயிரினத்துக்கு மறைந்த டாக்டர் அப்துல் கலாமின் பெயரை நாசா விஞ்ஞானிகள் சூட்டியுள்ளனர்.

ஸ்மார்ட் ரெயில் !

சீனாவில் சாலையில் வரையப்பட்டுள்ள கோட்டின் மீது மணிக்கு 70 கி.மீ. வரை வேகத்தில் செல்லும் உலகின் முதல் ஸ்மார்ட் ரெயில் தனது சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்து பயணத்தை தொடங்கி உள்ளது. ஏ.ஆர்.டி. என்று அழைக்கப்படும் இந்த ரெயில் மூன்று பெட்டிகளை கொண்டுள்ளது. இதில் 300 பேர் பயணம் செய்யலாம். மற்ற ரெயில் அல்லது டிராம் போக்குவரத்திற்கு ஆகும் செலவை விட குறைந்த அளவான தொகையே இதற்கு செலவாகிறது. தற்சமயம் ஹூனான் மாகாணம் சுஜோவ் நகரில் நான்கு நிலையங்களை கொண்ட 3.1 கி.மீ. தொலைவிற்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டு, ரெயில் இயக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு முதல் முக்கிய சாலைகளில் இயங்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவம் ஆயிரம்

உங்கள் அக்குள் பகுதியில் கருப்பாக மடிப்புகள் இருந்தால் அவை சர்க்கரை வியாதியின்அறிகுறியாகும். இது ஒரு சரும கோளாறு. அக்குள் பகுதியில் உருவாகும். அக்குள் பகுதியில் உள்ள அந்த கருப்பு மடிப்பு வெல்வெட் போல் மிருதுவாகவும், கெட்டியாகவும் இருக்கும். சிலருக்கு கோதுமையிலுள்ள குளுடன் அலர்ஜியை உண்டாக்கும். அவர்களுக்கு சர்க்கரை வியாதி வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்.

ஆய்வகத்தில் தயாரான செயற்கை வைரங்கள்

நகைகள் என்றாலே உலகம் முழுவதும் முன்னணியில் இருப்பது தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள்தான். இவற்றில் பெரும்பாலும் இவை அனைத்தும் இயற்கை முறையில் சுரங்கங்களில் வெட்டி எடுக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன. தங்கத்தை செயற்கையாக ஆய்வகத்தில் உற்பத்தி செய்வது பெரும் செலவு பிடிக்கும் காரியம் என்பதால் யாரும் இதுவரை அதில் ஈடுபடவில்லை. வைரத்தில் இதுவரை செயற்கை வைரம் என கூறப்பட்டவை அனைத்தும் விலை மலிவான வைரமாகவே இருந்து வந்தது. ஆனால் முதன்முறையாக இயற்கை வைரத்துக்கு இணையாக மதிப்புள்ள செயற்கை வைரத்தை நகை உற்பத்தி நிறுவனம் ஒன்று தனது ஆய்வகத்தில் தயாரித்துள்ளது. உலகின் மிகப் பெரிய ஜூவல்லரி பிராண்டான பந்தோரா முதன்முறையாக தனது ஆய்வகத்தில் தயார் செய்த செயற்கை வைரத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் மற்றொரு பிராண்டான பந்தோரா பிரில்லியன்ஸ் ஏற்கனவே பிரிட்டனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  தற்போது இதன் புதிய முயற்சி 2022 இல்  உலக சந்தையில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பூமி சூரியனை சுற்றும் நாள்களை பண்டைய காலத்தில் கணக்கிட்டவர் யார் தெரியுமா?

இன்றைய நவீன அறிவியல்தான் பூமி சூரியனை சுற்றி வருகிறது என நம்ப வைக்கப்பட்டுள்ளோம். ஆனால் நவீன அறிவியலுக்கு முன்பே இந்தியாவின் பல்வேறு அறிஞர்களும், ஞானிகளும் இதை முறையாக கூறியதுடன், அதை கணக்கிட்டும் கூறியுள்ளனர். அதில் மிகவும் முக்கியமானவர் பாஸ்கர ஆச்சார்யா. கணிதவியல் அறிஞராகவும், வானியல் அறிஞராகவும் திகழ்ந்த அவர் நவீன அறியவியலுக்கு முன்பாகவே பூமி சூரியனை சுற்றி வரும் காலத்தை துல்லியமாக கணித்து சொன்னவர்.  அன்றைக்கு அவரது கணக்கீட்டின் படி, 365.258756484 நாட்கள் என தெரியவந்தது. நவீன அறிவியலில் அது 365.2564 நாள்கள் என கணக்கிடப்பட்டது. இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு வெறும் 0.0002 சதவீதம் மட்டுமே என்பது ஆச்சரியம் தானே.

காற்றிலிருந்து உணவு

மனிதன் வெறும் காற்றை சுவாசித்து உயிர் வாழ முடியாது, அவனுக்கு உணவும் தண்ணீரும் வேண்டும் என்பது நாம் அனைவருக்கும் நன்கு தெரியும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீருக்கு மிகவும் சிரமப்படும் பாலைவன பகுதி மக்களின் வசதிக்காக காற்றிலிருந்து தண்ணீரை தயாரிக்கும் ரோபோவை விஞ்ஞானிகள் வடிவமைத்திருந்தனர். தற்போது உணவையும் காற்றிலிருந்தே தயாரிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. பின்லாந்தை சேர்ந்த சோலார் புட்ஸ் என்ற நிறுவனம், காற்றை மாசுபடுத்தும் கரியமில வாயுவை சூரிய மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றைக் கொண்டு, சோலெய்ன் என்ற புதுமையான புரத மாவை உற்பத்தி செய்யத் துவங்கியுள்ளது. அமெரிக்க விண்வெளி மையமான நாசாவின் தொழில்நுட்பத்தை பின்பற்றி இந்த சாதனையை சோலார் புட்ஸ் செய்துள்ளது .வழக்கமான தானிய மாவுகளில் இருக்கும் அதே சுவையும், புரதம், கார்போ ஹைட்ரேட் மற்றும் சிறிது கொழுப்பு ஆகியவை சோலார் புட்ஸ் நிறுவனத்தின் காற்று மாசிலிருந்து தயாரிக்கும் சோலெய்ன் புரத்ததிலும் இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ சோலெய்ன் தயாரிக்க எரிபொருள் செலவு குறைவு. ஒரு கிலோ சோயாவை உற்பத்தி செய்ய 2,500 லிட்டர் தண்ணீர் தேவை. ஆனால், சோலெய்னுக்கு வெறும், 10 லிட்டர் தண்ணீரே போதும். இதனால், பருவநிலை மாற்றத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், சோலெய்ன் புரத மாவை விற்பனை செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago