முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மிகவும் உயரமான மலைப்பிரதேசங்களில் வளரும் அரிய வகை மலர் கண்டுபிடிப்பு

மிகவும் உயரமான இடங்களில் வளரும் அரிய வகை மலரை கண்டறிந்துள்ளனர். சீனாவின் யுன்னான் பிரதேசத்தில் உள்ள துணை ஆல்பைன் மலைப்பகுதியில் சுமார் 3590 மீட்டர் உயரத்தில் இந்த செடி வளர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. Entosthodon elimbatus என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த செடி நான்கு முதல் எட்டி மிமீ உயரம் வரை வளரக் கூடியது. மேலும் பாறைகளின் பிளவுகளில் உள்ள மண்ணில்தான் இது வளருமாம். இந்த விசித்திரமான தாவரம் குறித்த ஆய்வு கட்டுரை அறிவியல் இதழ்களிலும் கடந்த 2020இல் வெளியிடப்பட்டன.

100 மடங்கு வேகம்

தற்போதைய வைஃபை இணைய இணைப்பை விட நூறு மடங்கு வேகமான இணைப்பை வழங்கும் புதிய தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. அகச்சிவப்பு கதிர்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் விநாடிக்கு 40 ஜிபிக்கும் அதிகமான வேகத்துடன் இணைய இணைப்பினைப் பெற முடியுமாம்.

வைட்டமின் சி

ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளது. ஒன்று, இதுவரை ப்ளாஷ் பயன்படுத்தாமல், திடீரென்று செய்தால் ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படும். மற்றொன்று உடலில் வைட்டமின் சி குறைவாக இருந்தால், ஈறுகளில் இரத்தம் கசியும். எனவே வைட்டமின் சி உணவுகளை அதிகம் எடுத்தால் இதை தவிர்க்கலாம்.

எளிய வழி இருக்கு

தொலைந்து போன ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை கண்டறிய, போன் தொலையும் முன்னரே உங்களது ஸ்மார்ட்போனின் கூகுள் செட்டிங்-ஐ செயல்படுத்தி இருக்க வேண்டும். மேலும் லொகேஷன் ரிபோர்டிங் ஆப்ஷன் செட் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் சரி பார்க்க வேண்டும். தொலைந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை டிராக் செய்ய முதலில் கணினி அல்லது லேப்டாப் மூலம் பிரவுஸர் ஒன்றை ஓபன் செய்து, பின் உங்களது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் பதிவு செய்திருந்த கூகுள் அக்கவுண்ட் மூலம் லாக்-இன் செய்து, இறுதியாக கூகுளில் "find my phone" என டைப் செய்தால் உங்கள் ஸ்மார்ட்போன் இருக்கும் இடம் தெரியும். துல்லியமாக அறிந்து கொள்ள "Ring button" என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

குழந்தைக்கு எமன்

15 நிமிடங்களுக்கு மேல் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளின் ஆக்கப்பூர்வமான சிந்தனை படைப்புகள் தற்காலிகமாக குறைவதாக, 3 வயதுடைய 60 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஒட்டக சிவிங்கிகள் ஒலி எழுப்புமா?

ஒவ்வொரு மிருகமும் விதவிதமான ஓசைகளை எழுப்பக் கூடியனவாகும். அதே போல பறவைகளும் விதவிதமான ஒலிகளை எழுப்பும். அவை நம் மனதுக்கு மிகுந்த இதமான உணர்வை அளிக்கும். அதே நேரத்தில் மிருகங்கள் எழுப்பும் ஒலிகள் சில வேளை நம்மை கவர்ந்தாலும், பல நேரங்களில்அவை அச்சுறுத்துவதைப் போலவே இருக்கும். பறவைகள், விலங்குகள் ஒலிகளை நாம் கேட்டிருந்தாலும் விலங்குகளில் மிக உயரமான மிருகமான ஒட்டக சிவிங்கிகள் ஒலி எழுப்புமா?  அவை எப்படி ஒலி எழுப்பும் என்பதை நம்மில் பெரும்பாலானோர்.. அவ்வளவு ஏன் நாம் யாருமே கேட்டிருக்க முடியாது. இது மிகுந்த ஆச்சரியமாக உள்ளது அல்லவா.. அவை எழுப்பும் ஒலிகளை மனிதனால் கேட்க முடியாது என்பதுதான் அதன் சிறப்பம்சம். மனித செவிகளுக்கு குறிப்பிட்ட டெசிபலில் தொடங்கி குறிப்பிட்ட டெசிபல் வரையிலான சத்தங்களை மட்டுமே கேட்கும் திறன் உள்ளது. அதற்கு கூடுதலாகவோ, குறைவாக எழும் சத்தங்களை மனித செவிகளால் கேட்க இயலாது. எனவே ஒட்டக சிவிங்கிகள் எழுப்பும் ஒலிகள் நமது செவித்திறனுக்கு குறைவான டெசிபல் கொண்டவை என்பதால் நம்மால் அவற்றை வெறும் செவிகளால் கேட்க முடியாது. ஆராய்ச்சியாளர்களின் பிரத்யேக கருவிகளை கொண்டுதான் அவற்றை பதிவு செய்ய இயலும் என்பது ஆச்சரியம் தானே..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago