முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

இந்திரா நூயி

குளிர்பான உலகில் கொடிகட்டி பறக்கும் பெப்சி நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான இந்திரா நூயி, சுந்தர் பிச்சையைப் போலவே சென்னையைச் சேர்ந்தவர். கடந்த 1994ம் ஆண்டில் பெப்சி நிறுவனத்தில் இணைந்த நூயி, 2001-ம் ஆண்டு அந்த நிறுவனத்தின் சி.இ.ஒ-வாக உயர்ந்தார். வணிகரீதியிலான கொள்கைகளை வகுக்கும் 19 பேர் கொண்ட குழுவில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய-அமெரிக்கர்  இவர்.

நாள்தோறும் 200 உயிரினங்கள் அழிகின்றன

சூழல் மாசு உலகையே அச்சுறுத்தி வருகிறது. ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் 150-200 வகையான தாவரங்கள், பூச்சிகள், பறவைகள் மற்றும் பாலூட்டிகள் அழிந்து வருவதாக விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். 65 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு சூழல் சமநிலை இழப்பால் டைனோசர்கள் அழிந்ததிலிருந்து தற்போது உலகம் எதிர் கொண்டு வரும் சூழல் அச்சுறுத்தல் முன்பை விட அதிகமாகும் என எச்சரிக்கின்றனர்.

புது முயற்சி

பாகிஸ்தானில், லாகூரை சேர்ந்த அகமது அலி என்ற சிறுவன் தனது கண்களின் விழிகளை 10 மி.மீட்டர் தூரம் வெளியே துருத்தி சாதனை படைத்துள்ளான். பள்ளியில் படிக்கும் அவன் அதை வீடியோ எடுத்து சமூகவலை தளங் களில் வெளியிட்டான். மேலும், கின்னஸ் உலக சாதனைக்காக அந்த வீடியோவை தற்போது அனுப்பி வைத்து இருக்கிறான்.

எண்ணெய் குளியல்

ஒரு நிகழ்வு நடப்பதற்கு முன்பாக அது நடந்துவிட்டதாக நினைத்துப் பயப்படுவது. நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டால் ஏற்படுகிறது. இதற்கு தலையில் க்ஷீரபலா எண்ணெய், பலா அஸ்வகந்தா எண்ணெய் போன்றவற்றைத் தேய்ப்பதால் நரம்பு மண்டலத்தின் துரித நிலை குறைக்கப்படுகிறது. இந்த எண்ணெய் குளியல் பதற்றத்தைக் குறைப்பதற்கு ஒரு சிறந்த மருந்து.

சமண படுகைகளைப்போல மலை உச்சியில் பாறைகளை குடைந்து வீடு கட்டி வசிப்பவர்கள்

தென்னிந்தியா முழுவதும் உள்ள எந்த மலைக்கும், குன்றுக்கும் சென்றாலும் அங்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சமணத் துறவிகளால் உருவாக்கப்பட்ட குடை வரை சிற்பங்களையும், கோயில்களையும், படுக்கைகளையும் காண முடியும். இன்றைக்கும் தொல்லியல் துறையின் மிகப் பெரிய ஆச்சரியங்களில் ஒன்றாக நமது பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் அவை தாங்கி நிற்கின்றன. ஆனால் இன்றைய நவீன யுகத்தில் அப்படி யாராவது மலை உச்சியில் பாறையை குடைந்து குடை வரை குடியிருப்பை அமைப்பார்களா என்றால்... ஆம் என்றுதான் நாம் சொல்ல வேண்டும். ஆனால் அது நடந்துள்ளது இங்கு அல்ல. இத்தாலியில். அந்நாட்டில் உள்ள Dolomites Mountains என்ற மலையில்தான் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2700 மீட்டர் அதாவது 8 ஆயிரத்து 858 அடி உயரத்தில் பாறையை குடைந்து தன்னந்தனிமையில் ஒருவர் வீட்டை உருவாக்கியுள்ளனர். முதலாம் உலகப் போரின் போது இத்தாலியர்களுக்கும் ஆஸ்திரோ ஹங்கேரியர்களுக்கும் சண்டை வந்த போது அதிலிருந்து தப்ப விரும்பிய சிலர் இது போன்று யாரும் எளிதில் வரமுடியாத இந்த இடத்தில் வீட்டை உருவாக்கினர். தொலைவிலிருந்து பார்க்கும் போது பாறையில் ஒட்டியிருப்பது போல தோன்றும் இந்த வீடு தற்போது பாரம்பரிய சுற்றலா தளத்தில் இடம் பெற்றுள்ளது. மிகவும் ஆச்சரியமும் வியப்பும் அளிக்கும் செய்தியாக இது உலகுக்கு தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தாகம் தீர்க்கும்

சர்க்கரை நோய், உடல் உஷ்ணம், அதிக வியர்வை, அதிகளவில் சிறுநீர் கழிப்பது போன்றவற்றால் நாவறட்சி ஏற்படும். அதிக வயிற்றுப்போக்கால் நீர்ச்சத்து வெளியேறுவதாலும் நாவறட்சி உண்டாகிறது. அதிக தாகம், நாவறட்சியை போக்க ஆவாரை, அரச இலை, நித்திய கல்யாணி ஆகியவை மருந்தாகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago