எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், மறைமலைநகர், மாநில ஊரக வளர்ச்சி பயிற்சி மையத்தில், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமை சார்பாக, 32 பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை பணியினை திறம்பட மேற்கொள்வதற்காக நேற்று (16.4.2015) நடைபெற்ற மூன்று நாட்கள் பயிற்சியினை கூடுதல் தலைமை செயலாளர்ஃவருவாய் நிர்வாக ஆணையரும், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமையின் தலைவருமான முனைவர்.டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.வே.க.சண்முகம் முன்னிலையில், வருவாய்த்துறை அமைச்சர் .ஆர்.பி.உதயகுமார் குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்து பேசியதாவது,
“ மக்களின் முதல்வர் அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மை பணியினை திறம்பட மேற்கொள்வதற்காக, மாவட்டங்களில் பேரிடர் மேலாண்மை பிரிவு ஒன்றினை ஏற்படுத்தியும், 32 வட்டாட்சியர்கள் (பேரிடர் மேலாண்மை) பணியிடங்கள் உருவாக்கியும் தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ள அனைத்து வட்டாட்சியர்களும் முழு மனதோடும், முழு அளவோடும் செயலில் பணியாற்ற வேண்டும். எப்போது வேண்டுமானாலும் போர் வரும், வராமலும் போகும், ஆனாலும், இராணுவத்திற்கு முதலாவதாக அதிக நிதி இந்திய அரசு வழங்கி வருகிறது. அதுபோல் சூறாவளி, வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம், தீ, நிலச்சரிவு போன்ற பல்வேறு பேரிடர்கள் எப்போது வேண்டுமானாலும் வரும், அல்லது வராமலும் இருக்கும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் சுனாமி பாதிப்பு ஏற்பட்ட போது, அம்மா அவர்களது அரசு மிகச் சிறப்பாக மீட்பு பணியில் செயல்பட்டது. உலக நாடுகள் வியக்கும் வகையிலும், வழிகாட்டியாகவும் தமிழகத்தில் சுனாமி தாக்குதல் மீட்பு பணி நடைபெற்றது.
இதனை கருத்தில் கொண்டு அம்மா அவர்களது அரசு பேரிடர் காலங்களில் தயார் நிலையில் எப்போதும் இருப்பதற்காக வருவாய்த்துறையின் கீழ் ஒரு தனி துறையாக பேரிடர் மேலாண்மை துறை உருவாக்கப்பட்டு தற்போது மாவட்டங்கிளல் 32 வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பயிற்சி வகுப்பில் எல்லாவிதமான பேரிடர் காலங்களிலும் எப்போதும் நாம் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கு பல்வேறு விதமான பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி முடித்தவுடன் அந்தந்த மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு நீங்கள் பயிற்சி அளிக்க வேண்டும். எப்போது பேரிடர் வந்தாலும் அக்காலங்களில் தமிழகம் முதன்மை மாநிலமாக செயல்படுதல் வேண்டும். அதற்காக தான் இப்பயிற்சி உங்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் பணி புதிதாக உருவாக்கப்பட்டு நீங்கள் இப்பணியில் முதல் முறையாக பணியாற்றி வருகிறீர்கள்.
இப்பணியில் நீங்கள் செல்லுகின்ற இடத்தில், முழு அற்பணிப்புடனும், தயார் நிலையில் இருந்தாலும் பொதுமக்கள் தயார் நிலையில் இருப்பதில்லை. மேலும், நாம் களத்திற்கு செல்லும் போது பல்வேறு மனநிலையில் உள்ள மக்களை சந்திக்க நேரிடும், அப்போது நாம் மக்களுக்கு ஏற்றவாரு அந்த நேரத்தில் செயல்பட வேண்டும். காஞ்சிபரம் மாவட்டத்தில் கடந்த வருடம் மௌலிவாக்கம் கட்டடம் இடிந்து பல்வேறு மக்கள் உயிரிழந்தனர். அப்போது மாண்புமிகு அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி அரசு அலுவலர்கள், பணியாளர்கள் இரவும், பகலும் தங்களை மறந்து மீட்பு பணியில் முழுமையாக ஈடுபட்டனர்.
பேரிடர் மேலாண்மை என்பது திட்டமிடல், ஒருமுகப்படுத்துதல் மற்றம் நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக ஒருங்கிணைக்கும் ஒரு செயலாகும். பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர்களின் பணியானது, மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை தொடர்பான பணிகளை செயல்படுத்துதல், மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையத்தினை நிர்வகித்தல். மாவட்ட பேரிடர் மேலாண்மை திட்டத்தினை தயார் செய்தல். 13-வது நிதிக்குழு ஒதுக்கீடு தொகையை பயன்படுத்துதல். மாவட்டத்திலிருந்து மாநில நிவாரண ஆணையருக்கு பேரிடர் நிவாரணம் குறித்த பிரேரணைகளை அனுப்புதல். பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண்ம வழங்குதல் மற்றும் பயனீட்டு சான்று சமர்ப்பித்தல். வருவாய் மற்றும் பிறதுறை அலுவலர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்தல். பாதிப்பிற்கு இலக்காகும் சமூகத்தினருக்கு பேரிடர் தயார் நிலை குறித்து பயிற்சியளித்தல். மாநிலகணக்காயரின் தணிக்கை மற்றம் அது தொடர்பான பணிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளுதல் ஆகும்.
மேலும், இந்த மூன்று நாட்கள் பயிற்சியில், பேரிடர் மேலாண்மையின் அடிப்படைகள், பேரிடர் அடிப்படையில் தமிழ்நாட்டின் அமைப்பு குறித்த விளக்கம், பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 குறித்த விளக்கம். சமுதாய அடிப்படையிலான பேரிடர் மேலாண்மை திட்டத்தின் குறிக்கோள்கள். இந்திய பேரிடர் இணையதள வசதி. பல்வேறு பேரிடர்களை வீடியோ மூலம் தெளிவுபடுத்தல். தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை முகமையின் குறிக்கோள் மற்றும் பணிகள். மாவட்ட பேரிடர் மேலாண்மை மற்றும் வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) பணிகள். மாவட்ட அளவில் கணக்குள் பராமரித்தல் ஆகும். இப்பயிற்சியின் ஒரு பகுதியாக வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலக கட்டுபாட்டில் இயங்கி வரும் மாநில அவசர கட்டுபாட்டு மையம், இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் சோழிங்கநல்லூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு பேரிடர் பாதுகாப்பு மையம் மற்றும் முன்னெச்சரிக்கை கருவி அமைக்கப்பட்டுள்ள இடத்தை நேரில் பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்களுக்கு சேவை செய்யும் வருவாய்த்துறை மற்ற துறைகளுக்கு தாய் துறை ஆகும். இத்துறையின் கீழ் தற்போது பேரிடர் மேலாண்மை துறை செயல்பட்டு வருகிறது. உங்கள் பணி புனிதமான பணி, முக்கியமான பணி. விலை மதிக்க முடியாத மனித உயிர்களை காப்பாற்ற நீங்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும்” என்றார்அமைச்சர் .ஆர்.பி.உதயகுமார் .
இந்நிகழ்ச்சியில், மாநில ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் .எல்.இராஜா, சென்னை பேரிடர் மேலாண்மை இணை இயக்குநர் .எஸ்.கந்தசாமி, வருவாய் கோட்டாட்சியர்கள் .ஆர்.பன்னீர்செல்வம் (செங்கல்பட்டு), மரு.டி.பரிதாபேகம் (தாம்பரம்) மற்றும் வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஜூசி சிக்கன்கட்லட்2 days 48 sec ago |
ஜூசி க்ரீன் சிக்கன்4 days 20 hours ago |
கத்திரிக்காய் ரோஸ்ட்1 week 2 days ago |
-
கோலி குறித்து பயிற்சியாளர்
16 Jun 2024விராட் கோலியின் ஃபார்ம் குறித்து எந்தவொரு கவலையும் இல்லை என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
-
உலகில் சிறந்த 100 தொழில் நுட்ப நிறுவனங்கள்: 3 இந்திய நிறுவனங்கள் இடம்பிடிப்பு
16 Jun 2024புதுடில்லி; உலகளவிலான 100 தொழில் நுட்ப நிறுவனங்கள் பட்டியலில் 3 இந்திய நிறுவனங்கள் இடம் பிடித்து உள்ளது.
-
கடைசி ஓவரில் திரில் வெற்றி: ஸ்காட்லாந்தை வீழ்த்தியது ஆஸி.,
16 Jun 2024நியூயார்க்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற 35-வது போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
-
செல்போன் மூலம் இ.வி.எம்.களில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை மும்பை தேர்தல் அதிகாரி விளக்கம்
16 Jun 2024புதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டுக்கு ஓடிபி எண் எதுவும் தேவையில்லை என மும்பை தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
16 Jun 2024நெல்லை: திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
16 Jun 2024நெல்லை: திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
மழையால் போட்டி ரத்து: இந்தியா, கனடாவுக்கு தலா ஒரு புள்ளிகள்
16 Jun 2024புளோரிடா: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா – கனடா அணிகள் இடையேயான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
-
தலைநகரில் தண்ணீருக்காக சண்டை 3 பேர் காயம்
16 Jun 2024புதுடெல்லி: புதுடெல்லியில் காணப்படும் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சத்தால் சண்டை நிலவியது. இதில் 3 பேர் காயம் அடைந்தனர்.
-
டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள்
16 Jun 2024நியூயார்க்: நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் நேபாள அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில் இதற்கு முன் பல அணிகள் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளன
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: ஆஸி., வெற்றியால் சூப்பர் 8-க்கு முன்னேறிய இங்கிலாந்து அணி
16 Jun 2024நியூயார்க்: ஸ்காட்லாந்தை வெளியேற்றிய ஆஸ்திரேலியா வெற்றியால்
சூப்பர் 8-க்கு முன்னேறிய இங்கிலாந்து அணி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-06-2024.
17 Jun 2024 -
ஆட்டோ ஓட்டுனரின் கனவு ராக்கெட் டிரைவர்
17 Jun 2024ஸ்டோரீஸ் பை தி ஷோர் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அனிருத்வல்லப் தயாரிக்கும் புதிய படம் "ராக்கெட் டிரைவர்".
-
ஆகஸ்ட்டில் வெளியாகிறது டபுள் ஐஸ்மார்ட்
17 Jun 2024உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இருவரும் தங்களின் மாபெரும் வெற்றி படமான ’ஐஸ்மார்ட் ஷங்கர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் சீக்குவல் ‘டபுள் ஐஸ்மா
-
முன்னாள் ஜெனரல் விலகல் எதிரொலி: போர் கேபினட்டை கலைத்த இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு
17 Jun 2024டெல்அவீவ், காசா மீதான போர் திட்டத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக முக்கிய உறுப்பினர் விலகல் காரணமாக போர் கேபினட்டை கலைத்தார் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு.
-
இலங்கை-இந்தியா இடையே பாலம்: இறுதிக்கட்டத்தில் ஆய்வுப் பணிகள்; அதிபர் ரணில் விக்ரமசிங்கே தகவல்
17 Jun 2024கொழும்பு, இலங்கை-இந்தியா இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்தும் திட்டத்துக்கான ஆய்வுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்
-
‘லாந்தர்’ இசை வெளியீடு
17 Jun 2024எம் சினிமா புரொடக்ஷன்ஸ் சார்பில் பத்ரி மற்றும் ஸ்ரீவிஷ்ணு இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘லாந்தர்’.
-
மலாவியில் பயங்கரம்: இறுதி ஊர்வலத்தில் வாகனம் மோதிய விபத்தில் 4 பேர் பலி
17 Jun 2024லிலாங்வே : மலாவியில் இறுதி ஊர்வலத்தில் வாகனம் மோதிய விபத்தில் 4 பேர் பலியான சோக நிகழ்வு நடந்துள்ளது.
-
தங்கம் விலை சற்று சரிவு
17 Jun 2024சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 அதிரடியாக அதிகரித்த நிலையில் நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவேன்: கொத்தையம் கிராம மக்களுக்கு இ.பி.எஸ். உறுதி
17 Jun 2024ரெட்டியார்சத்திரம்: கொத்தையம் கிராமத்தில் குளத்தை அழித்து தொழில்பேட்டை அமைக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவேன் என்று எடப்பாட
-
காஷ்மீர் ரியாசி தீவிரவாத தாக்குதல்: விசாரணையை என்.ஐ.ஏ.விடம் ஒப்படைத்த மத்திய உள்துறை
17 Jun 2024புதுடெல்லி : ஜம்மு காஷ்மீரின் ரியாசியில் பேருந்து மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையை மத்திய உள்துறை அமைச்சகம் தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்
-
பிரம்மிக்கவைக்க வரும் பயமறியா பிரம்மை
17 Jun 202469 எம்எம் ஃபிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ராகுல் கபாலியின் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக்
-
நடுவானில் விமான எஞ்சின் செயலிழப்பு: அவசர அவசரமாக ஆஸ்திரேலியா விமானம் தரையிறக்கம்
17 Jun 2024வெலிங்டன் : நியூசிலாந்தின் குயின்ஸ்டவுண் நகரில் இருந்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு வெர்ஜீன் ஆஸ்திரேலியா விமான நிறுவனத்தின் விமானம் நேற்று முன்தினம் இரவு புறப்ப
-
மஹாராஜா விமர்சனம்
17 Jun 2024சலூன் கடை நடத்தி வரும் விஜய்சேதுபதி, தனது மகளுடன் சென்னையின் புறநகர் பகுதியில் வசித்து வருகிறார்.
-
சவுதியில் கடும் வெப்ப அலை: ஜோர்டன், ஈரானை சேர்ந்த ஹஜ் பயணிகள் 19 பேர் பலி
17 Jun 2024சவுதி, கடும் வெப்ப அலையால் ஹஜ் புனிதப் பயணம் சென்ற ஜோர்டனைச் சேர்ந்த 14 பேர், ஈரானைச் சேர்ந்த 5 பேர் என 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
கடலில் மூழ்கி உயிரிழந்த 3 மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்ச ரூபாய் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
17 Jun 2024சென்னை, ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே இயந்திர மீன்பிடி படகு சேதமடைந்ததால் நீரில் மூழ்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட