எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நாட்டுக்கோழி வளர்ப்பில் செயற்கை வெப்பம் அளித்தல் மற்றும் தீவனபராமரிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கோழி வளர்ப்பில் மிக முக்கியமாக செய்ய வேண்டியது வெப்ப பணி வெப்ப பராமரிப்பு .புறக்கடைகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளின் குஞ்சுகளுக்கு செயற்கை வெப்பம் அளிக்கப்படுவதில்லை. தாய்க்கோழியே தனது இறகுகளினால் மூடி குஞ்சுகளுக்கு தேவையான வெப்பத்தையும் பாதுகாப்பையும் அளிக்கிறது, வணிக நோக்கில் அதிக எண்ணிக்கையில் பராமரிக்கப்படும் கோழிக்குஞ்சுகளுக்கே செயற்கை வெப்பம் அளிக்கப்படுகிறது.
குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவந்த பிறகு அவற்றினுடைய உடம்பில் உள்ள இறகுகள் முழு வளர்ச்சி அடையும் வரை உடல் வெப்பநிலையை ஒரே சீராக வைத்துக்கொள்ள முடியாத காரணத்தால் செயற்கை வெப்பம் அளிப்பது இன்றியமையாததாகும். முதலில் சுத்தம் செய்யப்பட்ட இடத்தில அடைகாப்பானை அமைக்க வேண்டும். குஞ்சுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப குஞ்சுக்கு வெப்பம் அளிக்கக்கூடிய மின்சார பல்புகளை பொறுத்த வேன்டும். குஞ்சுகளை வளர்க்க ப்ரூடெர் தகடுகள் அல்லது அட்டைகள் அல்லது பந்திப் பாய்களை ஒன்றோடொன்று இணைத்து வட்ட வடிவில் அமைப்பது நல்லது. இந்த அடைக்கப்பனுக்குள் 2 அங்குல உயரத்திற்கு நெல் உமி அல்லது மர இழைப்புச் சுருள் அல்லது கடலை தோல் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை பரப்ப வேண்டும். கூளத்தின் மீது சுத்தமான பழைய செய்தித் தாள்களை பரப்பிவிடவேண்டும். பொதுவாக குளிர் காலங்களில் 10 நாட்களுக்கும், கோடை காலங்களில் 7 நாட்களுக்கும் செயற்கை வெப்பம் அளித்தால் போதுமானது. முதல் வாரத்தில் குஞ்சுகள் சௌகரியமாக இருக்கும் படி மின் விளக்குகளின் எண்ணிக்கை மற்றும் உயரத்தை சரி செய்யவேண்டும்.
செயற்கை வெப்பம் அளித்திட 60 வாட்ஸ் மின்விளக்குகளை தேவையான உயரத்தில் தொங்கவிடவேண்டும். அடைகாப்பானில் குஞ்சுகளின் தேவைகேற்றார் போல் செயற்கை வெப்பத்தை அதிகரித்தோ, குறைத்தோ அளித்தால் வேண்டும். தேவையான வெப்ப அளவில் குஞ்சுகள் பரவலாக இருக்கும். செயற்கை வெப்பம் அளிக்க்க மின்சாரம் இல்லாத சமயங்களில் கரி அடுப்பின் மீது இரும்பு சட்டிகளை கவிழ்த்து அல்லது பானைகளை வைத்து குஞ்சுகளுக்கு செயற்கை வெப்பத்தை அளிக்கலாம். அடைகாப்பனுக்குள் எந்த நேரமும் 50 சதவீத கோழிகள் தண்ணீர், தீவனம் சாப்பிட்டு கொண்டும் , சுறுசுறுப்பாக சுற்றி திரிந்து கொண்டும் இருக்க வேண்டும்.
தீவன பராமரிப்பு : குஞ்சுகளுக்கு முதல் 5 நாட்களுக்கு தண்ணீருடன் எதிர் உயிரி மருந்தும் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்ஸ் மற்றும் வைட்டமின் எ கலவையும் கலந்து கொடுக்க வேண்டும். கூண்டு முறையில் வளர்க்கும் கோழிகளுக்கு கூண்டின் மேற்பகுதியில் ஒரு குஞ்சுக்கு ஒரு வாட் வீதம் கணக்கிட்டு மின் விளக்கு பொருத்தி குறைந்தது முதல் ஒரு வாரம் வெப்பம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
உடலிலுள்ள தண்ணீர் தொடர்ச்சியாக தோல், சுவாசம் மற்றும் எச்சத்தின் மூலமும் வெளியேறிக்கொண்டு இருப்பதால் அதை ஈடு செய்வதற்கு எந்நேரமும் கோழிகளுக்கு சுத்தமான தண்ணீர் கிடைப்பதற்கு வழி செய்ய வேண்டும். மேலும் தண்ணீர் மற்றும் தீவன உபகரணங்கள் எப்போதும் சுத்தமாக இருத்தல் மிக அவசியம்.
பொதுவாக புறக்கடைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு சமசீரான தீவனம் அளிக்கப்படுவதில்லை. நாட்டுக்கோழிகள் சமையலறை கழிவுகள், சோறு, காய்கறிகள், வெங்காயம், ஆகியவற்றை உண்டு உயிர் வாழ்கின்றன. இதை தவிர வீட்டில் உள்ள உடைந்த மற்றும் உபரியான தானியங்களான நெல், அரிசி,கம்பு, சோளம், கோதுமை, அரிசிகுருணை, தவிடு, ஆகியவற்றை உட்கொள்கின்றன. மேலும் பூச்சி, புழு, கரையான்,எறும்பு, கீரைகள், புல் பூண்டு முதலியவற்றை உட்கொள்கின்றன. இவற்றை உண்பதன் மூலம் நாட்டு கோழிகளுக்கு ஓரளவிற்கு புரத சத்து கிடைத்தாலும் அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைப்பதில்லை.
எனினும் தானியங்கள் , பிண்ணாக்கு, தவிடு,, தாது உப்பு மற்றும் வைட்டமின்கள் கொண்டு தயாரித்த அணைத்து ஊட்ட சத்துகளும் அடங்கிய சமசீர் தீவனம் அளிப்பதன் மூலம் நாட்டு கோழிகள் விரைவில் விற்பனை எடையை அடைவதுடன் முட்டையிடும் திறனும் அதிகரிக்கிறது. முதல் 8 வாரங்களுக்கு குஞ்சு பருவ தீவனத்தை கொடுத்து வளர்க்க வேண்டும், சுட வைத்து ஆறவைத்த சுத்தமான தண்ணீர் அணைத்து நேரங்களிலும் குஞ்சுகளுக்கு கிடைக்குமாறு கவனித்து கொள்ளவேண்டும். வளர் நாட்டு கோழிகளுக்கு கொடுக்கப்படும் தீவனத்தில் எரிசக்தியின் அளவு 2700 கிலோ கலோரியும் , புரதத்தின் அளவு 22 சதவீதம் என்ற அளவில் இருக்க வேண்டும். மேலும் முட்டையிடும் கோழிகளுக்கு தீவனத்தில் 2 சதவீதம் கிளிஞ்சல் அளிக்கப்பட வேண்டும்.
இனப்பெருக்க பராமரிப்பு : இன சேர்க்கைக்கு ஒரு சேவலுக்கு 10 பெட்டைக் கோழிகளை பயன்படுத்தலாம். நல்ல ஆரோக்கியமான அதிக வீரியமுள்ள சேவலையே தேர்வு செய்து இனவிருத்திக்கு பயன் படுத்த வேண்டும். இதனால் நல்ல திரட்சியான குஞ்சுகளை பொரிக்க முடியும். வீரியமுள்ள சேவலைத் தேர்வு செய்து அதனை தனியாகக் காற்றோட்டமுள்ள இடத்தில் பராமரித்து, சரிவிகித உணவு கொடுத்து அதனிடமிருந்து அறிவியல் தொழிநுட்ப முறையில் விந்துவை பெற்று செயற்கை முறை கருவூட்டல் மூலம் அதிக அளவு கருவுற்ற முட்டைகளை உற்பத்தி செய்து, அதிகப்படியான கோழி குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம்.
பெட்டை கோழிகளுக்கு ஒரு நாளில் இயற்க்கை மற்றும் செயற்கை ஒளி இரண்டும் சேர்ந்து, சுமார் 16 மணி நேரம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். பெட்டை கோழிகள் தேவையான செயற்கை ஒளி பெற 100 சதுர அடிக்கு ஒரு 60 வாட்ஸ் மின் விளக்கு பொருத்துவது அவசியம்.
செயற்கை ஒளியைக் காலையில் 2 மணி நேரமும், மாலையில் 2 மணி நேரமும் படிப்படியாக அதிகரித்து கொள்ளலாம். அல்லது நடைமுறையில் மாலையில் மட்டும் இரவு 10 மணி வரை விளக்கொளி அமைக்கலாம். நாட்டுக்கோழிகள் 7 முதல் 8 மாத காலத்தில் முட்டையிட ஆரம்பிக்கின்றன. நாட்டுக்கோழிகள் ஒரு வருடத்தில் சுமார் 60 முதல் 80 முட்டைகள் இடும். தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக்கோழிகள் வருடத்திற்கு சுமார் 150 முதல் 200 முட்டை வரை இடும் திறன் கொண்டவை.
உற்பத்தியாகும் அடைமுட்டைகளின் குஞ்சுபொரிப்புத்திறன் குறையாமல் இருக்க அடை முட்டைகளை நாம் பாதுகாக்கவேண்டும். வீட்டின் ஒரு மூலையில் மணல் குவித்து அகன்ற வாயுடைய மண் பானையில் உமியைப் போதியளவு நிரப்பி முட்டைகளை அடுக்க வேண்டும். பானையின் அகன்ற வாயினை மெல்லிய துணி கொண்டு கட்ட வேண்டும்.
அவ்வப்போது பானை மீது குளிர்ந்த நீரை தெளித்து பாதுகாத்து வந்தால் குஞ்சுபொரிக்கும் திறன் அதிகரிக்கும். வணிக நோக்கில் அதிக அடை முட்டைகளை பாதுக்காக்கும் போது முட்டைகளை முட்டை அட்டைகளில் சேமித்து முட்டை அறையின் வெப்பம் 65 டிகிரி பாரன்ஹீட் இருக்கவேண்டும். இதற்க்கு பொதுவாக குளிர்சாதன அறை போதுமானது.
சிறிய அளவில் அடை முட்டைகளைக் குஞ்சு பொரிக்க பயன்படுத்தினாலும் கரு வளர்ந்த முட்டையைக் குஞ்சு பொரிக்க பயன்படுத்துவதே சிறந்ததாகும். மின்சார குண்டு பல்பு அல்லது டார்ச் விளக்கு கொண்டு 7 ஆம் நாள் முட்டையை ஆராய வேண்டும். கரு வளர்ந்த முட்டையாக இருந்தால் ரத்தக்குழாய்கள் சிவப்பு நிறத்தில் சிலந்தி வலை போன்ற அமைப்புடன் காணப்படும்.
நாட்டுக்கோழிகள் இயற்கையாக முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொரிப்பது போன்றே செயற்கையாக வெப்பம் மற்றும் ஈரப்பதம் முட்டைகளுக்கு கொடுத்து குஞ்சு பொறிக்க குஞ்சு பொரிப்பான்கள் தற்போது அதிக அளவில் பயன்படுத்தபட்டு வருகிறது. 40 முதல் 1 லட்சம் முட்டைகள் வரை வைக்கக்கூடிய குஞ்சு பொரிப்பான்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தமிழக சட்டசபை இன்று கூடுகிறது
19 Jan 2026சென்னை, பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்ட சபை இன்று கூடுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி.
-
வரும் 22-ம் தேதி அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
19 Jan 2026சென்னை, மத்திய அமைச்சரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பா.ஜ.க. பொறுப்பாளருமான பியூஸ் கோயல் நாளை (புதன்கிழமை) சென்னைக்கு வருகை தரவுள்ளார்.
-
டெல்லியில் லேசான நிலநடுக்கம்
19 Jan 2026புதுடெல்லி, டெல்லியில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
தொடர்ந்து 4-வது ஆண்டாக சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவு
19 Jan 2026பெய்ஜிங், சீனாவில் தொடர்ந்து 4-வது ஆண்டாக குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவை கண்டுள்ளது. இது தொடர்பாக அரசு அறிவித்த பல்வேறு திட்டங்கள் பலனற்று போயின.
-
லடாக்கில் நிலநடுக்கம்
19 Jan 2026புதுடெல்லி, லே லடாக் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
நெம்மேலியில் ரூ.342.6 கோடியில் புதிதாக அமைகிறது நீர்த்தேக்கம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
19 Jan 2026செங்கல்பட்டு, 1.6 டி.எம்.சி.
-
குடியரசு தினவிழா அணிவகுப்பு ஒத்திகை: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
19 Jan 2026சென்னை, குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –19-01-2026
19 Jan 2026 -
பாகிஸ்தானில் பயங்கரம்: வணிக வளாக திடீர் தீ விபத்தில் 14 பேர் பலி
19 Jan 2026கராச்சி, பாகிஸ்தானில் நாட்டில் வணிக வளாக ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 14 பேர் பலியான சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30 வரை அவகாசம் நீட்டிப்பு
19 Jan 2026சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான காலஅவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றம்: 71 புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம்
19 Jan 2026சென்னை, தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பு ரீதியான 71 மாவட்டங்களுக்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
நெம்மேலியில் புதிதாக அமையவுள்ள 'மாமல்லன்' ஏரி மூலம் 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
19 Jan 2026மாமல்லபுரம், 69 ஏரிகளில் இருந்து வரும் உபரிநீரை சேமித்து மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் புதிதாக அமையவுள்ள மாமல்லன் ஏரி மூலம் 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியும
-
ஸ்பெயின் ரயில் விபத்தில் உயிரிழப்பு 21 ஆக உயர்வு
19 Jan 2026மாட்ரிட், ஸ்பெயின் நாட்டில் நடந்த ரயில் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
-
அமெரிக்காவின் நலனுக்கு எது தேவையோ அதை செய்வேன்: அதிபர் டெனால்ட் ட்ரம்ப் அதிரடி முடிவு
19 Jan 2026நியூயார்க், இனி அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவின் நலனுக்கு எது தேவையோ அதைச் செய்வதில் கவனம் செலுத
-
பனையூரில் இன்று நடைபெறுகிறது 12 பேர் அடங்கிய த.வெ.க.வின் தேர்தல் அறிக்கை குழு கூட்டம்
19 Jan 2026சென்னை, பனையூரில் இன்று நடைபெறுகிறது த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு கூட்டம்.
-
பா.ஜ. புதிய தேசிய தலைவரை தேர்வு செய்ய இன்று தேர்தல்
19 Jan 2026புதுடெல்லி, பா.ஜ. புதிய தேசிய தலைவரை தேர்வு செய்ய இன்று தேர்தல் நடக்கிறது. இன்றே புதிய தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகிறது.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: விஜய்யிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் அடுக்கடுக்கான தொடர் கேள்வி: விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய திட்டம்
19 Jan 2026புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் 2-வது முறையாக நேரில் ஆஜரான த.வெ.க. தலைவர் விஜய்யிடம் தாமதமாக வர காரணம் என்ன? உள்ளிட்ட அடுக்கடுக்கான தொடர் கேள்விகளை சி.பி.ஐ.
-
கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்: கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்
19 Jan 2026சென்னை, செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு, கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றுவரும் கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம் கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
19 Jan 2026சென்னை, சென்னையில் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை காலை வணிகம் தொடங்கியதும், ஆபரணத் தங்கம் விலை மற்றும் வெள்ளி விலைகள் உயர்ந்து விற்பனையானது.
-
செர்பியா நாட்டில் ஊழலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி
19 Jan 2026நோவி சாத், செர்பியா அரசில் ஊழலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி நடத்தினர்.
-
பா.ம.க. எங்களுக்கே சொந்தம்: ஐகோர்ட்டில் ராமதாஸ் வழக்கு
19 Jan 2026சென்னை, பா.ம.க. கட்சி விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
-
திபெத்தில் நிலநடுக்கம்
19 Jan 2026பெய்ஜிங், திபெத்தில் ரிக்டர் 4 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இ.பி.எஸ்.சுடன் தனியரசு சந்திப்பு?
19 Jan 2026சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு சந்தித்து பேசினார்.
-
காஸா தொடர்பான அமைதி வாரியம்: இந்தியாவுக்கு ட்ரம்ப் அழைப்பு
19 Jan 2026நியூயார்க், காஸாவில் மறுசீரமைப்புக்காகவும் அமைதியை நிலைநாட்டவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அமைதி வாரியத்தில் சேர இந்தியாவுக்கு அமெரிக்
-
தமிழகத்தில் விடைபெற்ற வடகிழக்கு பருவமழை இயல்பை விட 3 சதவீதம் குறைவு
19 Jan 2026சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விடைபெற்ற நிலையல் கடந்த ஆண்டை விட 3 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


