எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துடன் தமிழ் செம்மொழி உயராய்வு நிறுவனத்தை இணைக்கும் முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கல்தோன்றி மண் தோன்றா காலத்தே -வாளோடு முன்தோன்றி மூத்தக் குடி எனும் தொன்மை சிறப்பிற்குரிய தமிழ் இனத்தின் உயர்தனிச் செம்மொழியான தமிழ், உலகின் செவ்வியல் மொழிகளுள் காலத்தால் மூத்தது. பல்லாண்டு கால காத்திருப்புக்குப் பின்னர் 2004 ஆம் ஆண்டில்தான் தமிழ் மொழிக்கு இந்திய அரசு செம்மொழி எனும் சிறப்பை நல்கியது. இதனைத் தொடர்ந்துதான் வடமொழி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா மொழிகள் செம்மொழி பட்டியலில் இணைக்கப்பட்டன.செம்மொழிகளாக அறிவிக்கப்பட்ட பல்வேறு மொழிகளின் வளர்ச்சிக்காவும், பண்பாட்டு மேன்மைக்காவும் செம்மொழி ஆய்வு நிறுவனங்கள் அமைக்கப்பட்டன.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ், செம்மொழி உயராய்வு மையம் 2006 ஆம் ஆண்டு முதல் மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் மத்திய நிறுவனத்தில் செயல்பட்டு வந்தது.பின்னர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, தமிழறிஞர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ் செம்மொழி உயராய்வு நிறுவனம் தன்னாட்சி தகுதியுடன் சென்னையில் இயங்கி வருவதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அனுமதி அளித்தது.செம்மொழி தமிழின் தொன்மையையும், தனித்தன்மையையும் நன்கு புலப்படுத்தும் நோக்கில் பல்வேறு ஆய்வுப் பணிகளை செம்மொழி ஆய்வு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. பழந்தமிழ் நூல்களின் செம்பதிப்பு, பழந்தமிழ் நூல்களை மொழி பெயர்த்தல், வரலாற்று முறைத் தமிழ் இலக்கணம் வகுத்தல், தமிழின் தொன்மை -பன்முக ஆய்வு, தமிழ் திராவிட பிற மொழிக் குடும்பங்கள் ஒப்பாய்வு, தமிழ் வழக்காறுகள் ஆய்வு, பழந்தமிழ் ஆய்வுக்கான மின் நூலகம், இணையவழிச் செம்மொழித் தமிழ்க் கல்வி, பழந்தமிழ் நூல்களுக்கான தரவகம், செம்மொழித் தமிழ்க் காட்சிக் குறும்படங்கள் தயாரிப்பு போன்ற பணிகளைத் தமிழ் செம்மொழி ஆய்வு நிறுவனம் நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
மேலும், செம்மொழி ஆய்வு நிறுவனம் மூலம் தமிழ் மொழி ஆய்வில் சிறந்து விளங்கும் தமிழ் அறிஞர்களுக்கு இளம் அறிஞர் விருது, தொல்காப்பியர் விருது, குறள் பீட விருது ஆகிய மூன்று பிரிவுகளில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் தமிழ் செம்மொழி உயர் ஆய்வு நிறுவனத்திற்கு மத்திய அரசு முழு நேர இயக்குநரை நியமிக்காமல் அதன் செயற்பாட்டை முடக்கியுள்ளது. தற்போது சென்னை தரமணியில் இயங்கி வரும் தமிழ் செம்மொழி உயர் ஆய்வு நிறுவனத்தை திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக் கழகத்தின் ஓர் உறுப்பாக இணைத்துவிட மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.தமிழ் செம்மொழி உயர் ஆய்வு நிறுவனத்தின் தன்னாட்சி உரிமையைப் பறித்து, நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல வகைகளில் அந்நிறுவனத்தின் ஆய்வுப் பணிகளைத் தடுத்து நிறுத்தும் உள்நோக்கத்துடன் அந்நிறுவனத்தை திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்துடன் இணைப்பதற்கு மத்திய அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பின்னர் சமஸ்கிருத மொழி, இந்தி மொழித் திணிப்பைத் தீவிரப்படுத்தி வருவதுடன், தொன்மை சிறப்பு மிக்க தமிழ்த் தேசிய இனத்தின் மொழி, இன மற்றும் பண்பாட்டு அடையாளங்களைச் சிதைப்பதற்கான வேலைகளில் இறங்கி உள்ளது. தமிழர் நாகரிகத்தின் வரலாற்றுத் தொன்மையைப் பறைசாற்றும் வகையில் கீழடியில் அகழ்வு ஆய்வின் மூலம் பல சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.ஆனால், மத்திய அரசின் தொல்லியல் துறை கீழடி ஆய்வுப் பணிகளை முடக்குவதன் மூலம், தமிழ் இனத்தின் பண்டைய பண்பாட்டுத் தரவுகளை இருட்டடிப்பு செய்ய முயலுகிறது. தற்போது தமிழ் செம்மொழி உயர் ஆய்வு நிறுவனத்தைச் சீர்குலைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்துடன் தமிழ் செம்மொழி உயர் ஆய்வு நிறுவனத்தை இணைக்கும் முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். தமிழக அரசு, மத்திய அரசின் இம்முயற்சியைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் ஜல்லிக்கட்டுக்காக நடந்ததைப் போன்று தமிழகம் பொங்கி எழுந்து போராடும்'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 17 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 2 weeks ago |
-
இஸ்ரேல் மீது அணுகுண்டு தாக்குதல்: ஈரான் தவலை மறுத்தது பாகிஸ்தான்
16 Jun 2025ஈரான் : இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணுகுண்டு தாக்குதல் நடத்தும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அந்த தகவலை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
-
படை தலைவன் திரை விமர்சனம்
16 Jun 2025வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த ஒரு குட்டி யானையை நாயகன் சண்முக பாண்டியன் வளர்க்கிறார்.
-
கட்ஸ் திரை விமர்சனம்
16 Jun 2025நாயகன் ரங்கராஜ் சிறு வயதில் தாய், தந்தையை இழந்து, பின்னர் படித்து போலீஸ் இன்ஸ்பெக்டராகிறார்.
-
சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பிறகும் தமிழ்நாடு கவர்னர் மாறவில்லை : முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
16 Jun 2025தஞ்சாவூர் : கும்பகோணத்தில் கலைஞர் பெயரால் அமையவிருக்கும் பல்கலைகழகத்துக்கு இதுவரை ஆளுநர் அனுமதி தரவில்லை. பொறுத்திருப்போம்.
-
நிரம்பியது பில்லூர் அணை: பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
16 Jun 2025மேட்டுப்பாளையம் : கோவை, திருப்பூருக்கு குடிநீர் வழங்கும் பில்லூர் அணை நிரம்பி வழிகிறது.
-
முழுமையான பதிலடி கொடுத்த பிறகே பேச்சுவார்த்தை குறித்து முடிவு : ஈரான் அறிவிப்பு
16 Jun 2025டெஹ்ரான் : இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு முழுமையான பதிலடி கொடுத்த பிறகே, பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகைக்கு ஜூலை 15 முதல் விண்ணப்பிக்கலாம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
16 Jun 2025தஞ்சை : வருகிற ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
ஈரான் தாக்குதலில் இஸ்ரேல் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரக கிளை சேதம்
16 Jun 2025டெல் அவிவ் : இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் உள்ள அமெரிக்கத் தூதரகக் கிளை அருகே ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.
-
ஜூன் 20ல் வெளியாகும் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்
16 Jun 2025பிடிஜி யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் முதலாவது திரைப்படம் ’சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’.
-
இஸ்ரோ விஞ்ஞானி நெல்லை சு.முத்து மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
16 Jun 2025சென்னை : இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஆள் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி., ஜெயராம் கைது
16 Jun 2025சென்னை : ஆள் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி., (ஆயுதப்படை பிரிவு) ஜெயராமை போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
-
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து காலமானார்
16 Jun 2025திருவனந்தபுரம் : இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து காலமானார்.
-
அடுத்த ஆண்டு 2 கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு தேதிகளை அறிவித்தது மத்திய அரசு
16 Jun 2025புதுடெல்லி : இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2027-ம் ஆண்டு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் சாதி பற்றிய விவரங்களும் சேர்க்கப்படும்.
-
முதல் டெஸ்ட்டில் ஆடப்போவது யார்? - ஷர்துல் - நிதிஷ் இடையே கடும் போட்டி
16 Jun 2025பெக்கேன்ஹாம் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம் பெறப்போவது நிதிஷ் குமாரா அல்லது ஷர்துல் தாக்கூரா என்ற புதிய சிக்கல் எழுந
-
அருண் பாண்டியன் நடிக்கும் அஃகேனம்
16 Jun 2025அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன், சீதா, ஷிவ் பிங்க் , ஆதித்யா, ரமேஷ் திலக், பிரவீண் ராஜா, கல்கி உள்ளிட்ட பலர் நடிப்பில், அறிமுக இயக்குநர் உதய்.
-
சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதி பதவியேற்பு
16 Jun 2025சென்னை : தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி கே.சுரேந்தர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார்.
-
ஐதராபாத் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
16 Jun 2025பெர்லின் : ஜெர்மனியில் இருந்து புறப்பட்ட ஐதராபாத் விமானத்திற்கு திடீர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
கடத்தல் வழக்கு: பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்
16 Jun 2025சென்னை : கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
-
அதிபர் ட்ரம்பை கொல்ல ஈரான் திட்டம் : நெதன்யாகு தகவலால் பரபரப்பு
16 Jun 2025ஜெருசலேம் : அமெரிக்க அதிபரை கொல்ல ஈரான் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் தகவல் தெரிவித்துள்ளார்.
-
சற்றே குறைந்த தங்கம் விலை
16 Jun 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூன் 16) பவுனுக்கு ரூ.120 என குறைந்து விற்பனையானது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ.74,440-க்கு விற்பனையானது.
-
'தமிழ் மொழி' நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
16 Jun 2025தஞ்சை : சுப்ரீம் கோர்ட்டிலும், ஐகோர்ட்டிலும் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
ஊக்கமளித்தார் சுந்தர்: சுதர்சன்
16 Jun 2025இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரான சாய் சுதர்சனும் இடம்பெற்றுள்ளார். இந்த நிலையில், இந்திய அணிக்காக விள
-
டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது: ஐகோர்ட்
16 Jun 2025சென்னை : டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பினர் மீதான வழக்கை ரத்து செய்து
-
நா முத்துக்குமார் நினைவை போற்றும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி
16 Jun 2025மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமாரின் 5௦வது பிறந்தநாளை பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியாக கொண்டாட திரையுலகினர் முடிவு செய்துள்ளனர்.
-
தேனியில் அனைத்து துறைகள் ஆய்வு கூட்டம்: துணை முதல்வர் பங்கேற்பு
16 Jun 2025தேனி : தேனியில் நடைபெற்று வரும் அனைத்து துறைகள் சார்பிலான ஆய்வுக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு செய்தார்.