எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிவகங்கை : தடைகளையெல்லாம் உடைத்தெறிந்து வெற்றிச் சின்னமாம் இரட்டை இலையை நிச்சயம் பெறுவோம் என்று சிவகங்கை விழாவில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
சிலகங்கையில் நேற்று எம்.ஜி.ஆர் .நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் திரளாக கலந்துகொண்டனர். விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர் திருவுருவப் படத்தை திறந்து வைத்தார். பிறகு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்த அவர், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் ரு.39 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர்.
முன்னதாக இந்த விழாவில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
வீரம் செறிந்த மண்
இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் முதல் முதலாக வெள்ளையரை எதிர்த்து, வீரப் போர் புரிந்து, வெற்றி கண்டு, வீரமங்கை என்று பெயரெடுத்த ராணி வேலு நாச்சியார் ஆண்ட மண் சிவகங்கை. தியாகத்திற்கும், விசுவாசத்திற்கும், இலக்கணமாய் வாழ்ந்த மருது சகோதரர்கள் வாழ்ந்த பூமி, சிவகங்கை பூமி. தனது இன்னுயிரை கொடுத்து,வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை வெடிக்கச் செய்த,தியாக மங்கை, வீரத்தாய் குயிலிவளர்ந்த பூமி இந்த சிவகங்கை.வீரம் செறிந்த மண், தியாகம் நிறைந்த மண், வெற்றி திகழ்ந்த மண்,என்று தமிழகமே பெருமை கொள்ளும் இந்த சிவகங்கை சீமையில், புரட்சித் தலைவருக்கு நூற்றாண்டு விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
அ.தி.மு.க மாபெரும் இயக்கம்
எம்.ஜி. ஆர் நூற்றாண்டு விழா, மக்கள் நடத்துகிற மகத்தான விழாவாக, உலகமே வியக்கும் வகையில் நடந்து கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆரின் மங்காத மக்கள் செல்வாக்கைப் பார்த்து, நமது எதிரிகள் மலைத்துப் போயிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். உருவாக்கிய மாபெரும் இயக்கத்தை அசைக்க முடியாமல், சில உதிரிகள் களைத்துப் போயிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் மட்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் இயக்கத்தை தொடங்காமல் இருந்திருந்தால், சில சுயநலவாதிகள் கச்சத் தீவை தாரை வார்த்தது போல, தமிழ் நாட்டையே தாரை வார்த்திருப்பார்கள்.
புகழுக்காக ஏங்கியவர் அல்ல
மக்கள், தங்களது தேவைகளை கடவுளிடம் வேண்டுகிறார்கள். எங்களுக்கு நல்ல வாழ்க்கையை கொடு, மகிழ்ச்சியைக் கொடு, நிம்மதியைக் கொடு, பாதுகாப்பைக் கொடு என்று தங்களுக்கு வேண்டியதை ஆண்டவனிடம் கேட்பார்கள். தமிழக மக்களின் இந்த வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற, நூறு ஆண்டுகளுக்கு முன்பு தனது தவப் புதல்வனை இந்த பூமிக்கு அனுப்பி வைத்தான் ஆண்டவன். அவர்தான் கொடை வள்ளல் நமது எம்.ஜி.ஆர். சிலரைப் போல, சொத்து சேர்க்க ஆசைப்பட்ட தலைவர் அல்ல நமது எம்.ஜி.ஆர். ! மக்களின் அன்பை சேர்த்தவர் நமது எம்.ஜி.ஆர் ! சிலரைப் போல, புகழுக்காக ஏங்கிய தலைவர் அல்ல நமது எம்.ஜி.ஆர்! ஏழைகளின் துன்பங்களை நீக்கி புகழின் உச்சிக்கு சென்ற தலைவர் நமது எம்.ஜி.ஆர் !சிலரைப் போல, குடும்பத்திற்காக ஆட்சி நடத்தியவர் அல்ல நமது எம்.ஜி.ஆர் !ஆட்சிக்குள்ளே குடும்பத்தின் தலையீடே இருக்கக் கூடாது என்று ஆணையிட்டவர் நமது எம்.ஜி.ஆர் ! மக்களின் பசியாற்றி, அவர்களின் வயிறும், மனமும் நிறைவதைப் பார்த்து நிம்மதி அடைந்தவர் எம்.ஜி.ஆர் ! எதிர்காலத்தை தமிழக மக்களுக்கு உருவாக்கி தந்த உன்னத தலைவர் எம்.ஜி.ஆர் ! பிறருக்கு கொடுத்து வாழ்வதையே கொள்கையாக கொண்டு வாழ்ந்த எம்.ஜி.ஆர் ! கொடுப்பதற்கு நல்ல மனம் வேண்டும். அதுவும் பிறவி குணமாக இருக்க வேண்டும்.
அம்மாவின் ஆட்சி...
ஏழைகள் இன்ப வாழ்வு பெற வேண்டும் என்பதையே தனது லட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்..அந்த அன்பு மழைதான்,இன்றும்தமிழ் நாட்டையே வளப்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ் நாட்டிலே ஜாதிச் சண்டைகள் இல்லை. மதச் சண்டைகள் இல்லை. அதற்கு காரணம் அம்மாவின் ஆட்சி. தமிழ் நாட்டில் அடுப்பெரியாத வீடுகள் இல்லை. விளக்கெரியாத வீதிகள் இல்லை. அதற்குத் காரணம் அம்மாவின் ஆட்சி. பிள்ளைகளைப் படிக்க வைக்க வசதி இல்லையே, என்று மனம் உடையும் பெற்றோர்கள் தமிழ் நாட்டில் இல்லை. அதற்குத் காரணம் அம்மாவின் ஆட்சி.
இரட்டை இலை சின்னம்
மக்கள் பணத்தை தனக்காக சுருட்டுவது அராஜக ஆட்சி. மக்கள் பணத்தை மக்களுக்கே கொடுப்பது ஜனநாயக ஆட்சி. அந்த ஜனநாயக ஆட்சிக்குப் பெயர்தான் அம்மாவின் ஆட்சி. எம்.ஜி.ஆரை போலவே,கொடுக்கின்ற குணமும், ஏழைகளின் பசியாற்றுகின்ற குணமும், பிறவிக் குணமாய் பெற்று வந்தவர் அம்மா. எம்.ஜி.ஆர். மற்றும் அம்மா, தமிழக மக்களின் இதயத்தில் இருக்கிறார்கள். விசுவாசத் தொண்டர்களின் உள்ளத்தில் இருக்கிறார்கள். அந்த இரண்டு தெய்வங்களின் ஆசிகளோடு,தற்காலிகமாக போடப்படும் தடைகளையெல்லாம் உடைத்து, நமது வெற்றிச் சின்னமாம் இரட்டை இலையை நிச்சயம் பெறுவோம். சின்னம் நமக்குத்தான் கிடைக்கும் என்பது நன்றாகத் தெரிந்திருந்தும், மக்களை ஏமாற்ற சிலர் மனசாட்சியின்றி பொய் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
தக்காளி உருளைக்கிழங்கு![]() 39 sec ago |
மீல்மேக்கர் கிரேவி![]() 3 days 22 min ago |
மட்டர் பன்னீர் மசாலா1 week 48 min ago |
-
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாநில திட்டக்குழு கூட்டம்
09 Jun 2023சென்னை : முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாநில திட்டக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
-
பிரமுகர்கள் யாரும் பங்கேற்கவில்லை: மிக எளிமையாக நடந்த மத்திய நிதி அமைச்சர் இல்ல திருமணம்
09 Jun 2023பெங்களூரு, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது மகளின் திருமணத்தை பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் வைத்து எளிமையான முறையில் நடத்தினார்.
-
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஏஐ ஆணை மணந்தார் அமெரிக்க பெண்..!
09 Jun 2023நியூயார்க் : செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ஏஐ ஆணை நியூயார்க்கை சேர்ந்த பெண் திருமணம் செய்திருப்பது இணையத்தில் பேசும்பொருளாகியுள்ளது.
-
செயற்கை நுண்ணறிவால் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை: மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சர் தகவல்
09 Jun 2023புதுடெல்லி, தற்போதைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு ஏற்படாது என்றும் செயற்கை நுண்ணறிவால் பாதிப்பு ஏற்படாத வகையில் ஒழங்குமறை நடவடிக்கைகளை அரசு எடுக்கும்
-
தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன்: ஓ.பன்னீர்செல்வம் தகவல்
09 Jun 2023சென்னை, தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் செய்து கட்சியினரை சந்திக்க உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய விஜயபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்
09 Jun 2023சென்னை, தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம்
-
ரஹானே-ஷர்துல் ஆட்டத்தால் பாலோ-ஆன் தவிர்ப்பு: ஆஸ்திரேலியாவின் பிடியில் இருந்து தப்புமா இந்தியா..?
09 Jun 2023லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாம் நாள் ஆட்டத்தில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
-
கடந்த ஒரு மாதமாக தேனி,மேகமலைக்கு சுற்றுலா செல்வதற்கான தடை நீக்கம்
09 Jun 2023தேனி : தேனி, மேகமலைக்கு சுற்றுலா செல்வதற்கு கடந்த ஒரு மாதமாக விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
-
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்க விபத்தில் 3 பேர் பலி - பலர் மாயம்
09 Jun 2023ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத்தின், பவ்ரா கோலியரி பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த நிலக்கரி சுரங்கம் சரிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர்.
-
27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவில் உலக அழகிகள் போட்டி
09 Jun 2023புதுதில்லி, 27 ஆண்டுகளுக்குப் பிறகு உலக அழகிகள் போட்டி மீண்டும் இந்தியாவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரூ.2,000 நோட்டுகள் தொடர்பான வழக்கு: அவசர வழக்காக விசாரிப்பதற்கு சுப்ரீம் கோர்ட் மீண்டும் மறுப்பு
09 Jun 2023புதுடெல்லி : ரூ.2,000 நோட்டுகளை ஆவணங்கள் இல்லாமல், மாற்றுவதற்கு எதிரான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
கேரளாவில் துவங்கியது பருவமழை: திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு 'மஞ்சள் அலர்ட்'
09 Jun 2023திருவனந்தபுரம் : கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியதை அடுத்து திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப
-
அகதிகள் மசோதா திருத்த சட்டம் குறித்து ஜப்பான் பாராளுமன்றத்தில் கடும் அமளி : எம்.பி.க்கள் இடையே கைகலப்பு
10 Jun 2023டோக்கியோ : ஜப்பான் பாராளுமன்றத்தில் கடந்த வியாழன் அன்று, அகதிகள் மசோதா திருத்த சட்டம் நிறைவேற்றபட்ட போது எம்.பி.க்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
-
மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆலோசனை
09 Jun 2023புதுடெல்லி, அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.
-
சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்: ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை பாராட்டிய விராட் கோலி..!
09 Jun 2023லண்டன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடி வருகின்றன.
-
லபுசேன் தூக்கத்தை கலைத்த முகமது சிராஜ்
09 Jun 2023இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இந்தியாலண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
-
சமீபகாலமாக சிறப்பான பேட்டிங் இல்லை: ரோகித் சர்மா அவுட் பற்றி சுனில் கவாஸ்கர் கருத்து
09 Jun 2023லண்டன் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆட்டமிழந்த விதம் குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்
-
தமிழகம் உள்பட நாடு முழுவதும் 50 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி
09 Jun 2023புதுடெல்லி : நாடு முழுவதும் 50 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இதில் தமிழகத்துக்கு புதிதாக 3 மருத்துவ கல்லூரிகள் அமைய உள்ளன.
-
சென்னையில் பயன்படுத்தப்பட்ட மின்சாரம் 9.16 கோடி யூனிட்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி டுவிட்
09 Jun 2023சென்னை, சென்னையில் முதல் முறையாக இதுவரை இல்லாத அளவாக 9.16 கோடி யூனிட்கள் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 10-06-2023.
10 Jun 2023 -
அதிபர் ஜோபைடனை சந்தித்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் : உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர உறுதி
10 Jun 2023வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோபைடனை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
பெலாரஸ் நாட்டிற்கு அணு ஆயுதங்கள் ஜூலை மாதத்திற்குள் வழங்கப்படும் : ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு
10 Jun 2023மாஸ்கோ : பெலாரஸ் நாட்டிற்கு அணு ஆயுதங்கள் ஜூலை மாதத்திற்குள் வழங்கப்படும் என ரஷ்ய அதிபர் புடின் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த சிறுவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிரான்ஸ் அதிபர்
10 Jun 2023பாரீஸ் : கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களை நேரில் சந்தித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தனது மனைவி ப
-
புதுப்பிக்கப்பட்ட தி.மு.க. இணையதளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
10 Jun 2023சென்னை : புதுப்பிக்கப்பட்ட தி.மு.க. இணையதளத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
தாமதமாக திறக்கப்படுவதால் சனிக்கிழமைகள்தோறும் பள்ளிகள் நடத்தப்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
10 Jun 2023சென்னை : கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வி ஆண்டில், சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்