எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வெஸ்ட் இண்டீசை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் 25 வயதான ஹெட்மயர், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 11 ஆட்டங்களில் 291 ரன்கள் (சராசரி 72.75) சேர்த்துள்ள அவர் அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றியுள்ளார். இதில் 7 ஆட்டங்களில் நாட்-அவுட்டாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக உள்ள அவரது மனைவி நிவானிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் ஹெட்மயர் நேற்று காலை தாயகம் புறப்பட்டு சென்றார். இது அவருக்கு முதல் குழந்தையாகும். கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறியுள்ள அவர் விரைவில் அணியுடன் இணைவதை எதிர்நோக்கி உள்ளதாக ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது. என்றாலும் சில ஆட்டங்களை அவர் தவற விடுவது அந்த அணிக்கு பெரும் பின்னடைவு என்பதில் சந்தேகமில்லை.
_____________
டோனி பேட்டை கடிக்க காரணம்: விளக்கம் கொடுத்த அமித் மிஸ்ரா
டோனி ஏன் பேட்டை அடிக்கடி கடிக்கிறார் என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முன்னதாக டோனி களமிறங்குவதற்கு முன்பு பெவிலியனில் காத்திருந்தபோது தனது பேட்டை பல்லால் கடித்துக் கொண்டிருந்தார். இது தொடர்பான காட்சிகள் கேமராவில் பதிவாகின. டோனி ஏன் பேட்டை கடிக்கிறார் என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அமித் மிஸ்ரா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ''டோனி ஏன் அடிக்கடி தனது பேட்டை கடிக்கிறார்'என்று நீங்கள் யோசித்திருப்பீர்கள். அவர் தனது பேட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதற்காக, பேட்டில் உள்ள டேப்பை கடித்து அகற்றுகிறார். டோனியின் பேட்டில் டேப் அல்லது நூல் இருப்பதை நீங்கள் எப்போதுமே பார்த்திருக்க மாட்டீர்கள்'' என்று அவர் பதிவிட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனுக்கான ஏலத்தில் எந்தவொரு அணியும் அமித் மிஸ்ராவை வாங்கவில்லை. அதன் காரணமாக ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக விளையாடாமல் போட்டிகளை வெளியிலிருந்து கவனித்து வருகிறார் அவர்.
_____________
பொல்லார்டை நீக்க வேண்டும்: முன்னாள் வீரர் வலியுறுத்தல்
நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை ஆதிகாரபூர்வகமாக பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஒரே அணியாக மும்பை உள்ளது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக முன்னணி வீரர்கள் ரோகித் சர்மா, பொல்லார்ட் ஆகியோரின் மோசமான பேட்டிங் கருதப்படுகிறது. அவ்வப்போது ரோகித் சர்மா சோபித்தாலும் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் பொல்லார்ட் தொடர்ந்து மோசமாக பேட்டிங் செய்துவருகிறார்.
இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 129 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த நிலையில் பொல்லார்ட் குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். பொல்லார்ட் குறித்து அவர் கூறுகையில், " திடீரென்று இப்போது பார்க்கையில் மும்பை ஒரு நல்ல அணியாக தெரிகிறது. ஆனால் அந்த அணியில் ஒரு உடனடி மாற்றம் தேவை. பொல்லார்ட்-க்கு பதில் டெவால்ட் ப்ரீவிஸ் வர வேண்டும். தொடர்ச்சியாக ரன்கள் எடுக்க திணறிவரும் பொல்லார்டுக்கு எத்தனை வாய்ப்புகள் கொடுப்பீர்கள்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
____________
டெவன் கான்வே குறித்து முகமது கைஃப் கருத்து
இந்த சீசனில் சென்னை அணியின் தொடக்க போட்டியில் கான்வே-விற்கு ஒருமுறை வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் அவர் சோபிக்காத காரணத்தால் அதன்பின் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பின்னர் கடைசி 3 போட்டிகளில் அவரை அணி நிர்வாகம் களமிறக்கியது. அவரும் தன்னை நிரூபித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது அவர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் முஹமது கைப் பாராட்டு தெரிவித்துள்ளார். டெவன் கான்வே குறித்து அவர் கூறுகையில், " கான்வே ஒரே ஒரு தோல்விக்குப் பிறகு பிளேயிங் 11-ல் இருந்து கைவிடப்பட்டார். ஆனால் அவர் தற்போது பேட்டிங் செய்யும் விதத்தை பார்த்து சென்னை அணி அவரை முன்பே இறக்காமல் இருந்ததற்காக வருத்தப்படுவார்கள். அணியின் சிறந்த வீரரை அவர்கள் சரியாக பயன்படுத்தவில்லை என கைப் தெரிவித்தார்.
______________
தாமஸ் கோப்பை பேட்மிண்டன்: இந்திய குழு காலிறுதிக்கு தகுதி
தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் தாமஸ் கோப்பை 2022 பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இந்திய அணி 2வது குழு போட்டியில் தொடக்கத்தில் இருந்தே வெற்றியை நோக்கி பயணித்தது. முதல் போட்டியில் உலக தர வரிசையில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஸ்ரீகாந்த் கிதம்பி, கினடாவின் பிரையான் யாங்கை வீழ்த்தினார். இதன்பின் சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி ஜோடி, ஜேசன் அந்தோணி ஹோ-ஷு மற்றும் கெவின் லீ ஜோடியை எதிர்கொண்டது. இதில் 21-12, 21-11 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி எளிதில் வெற்றி பெற்றது.
அடுத்த போட்டியில் இந்தியாவின் எச்.எஸ். பிரணாய் மற்றும் பி.ஆர். சங்கீர்த் ஆகியோர் விளையாடினர். இதில் இந்திய ஜோடி 21-15, 21-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் பின்பு 5வது போட்டியில், இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத் மற்றும் விக்டர் லாய் ஜோடி 21-14 என்ற கணக்கில் வெற்றி பெற்று போட்டியையும் தன்வசப்படுத்தினார். இதனால், இந்திய அணி 5-0 என்ற புள்ளி கணக்கில் கனடாவை வீழ்த்தியது. இந்திய அணி ஜெர்மனியுடனான குழு போட்டியில் 5-0 என வெற்றி பெற்று இருந்தது. இதனால், காலிறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றிருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஜூசி சிக்கன்கட்லட்1 day 18 hours ago |
ஜூசி க்ரீன் சிக்கன்4 days 14 hours ago |
கத்திரிக்காய் ரோஸ்ட்1 week 1 day ago |
-
பிரதமர் மோடியின் சென்னை வருகை திடீர் ஒத்திவைப்பு : ரயில்வே தரப்பில் தகவல்
16 Jun 2024சென்னை : சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை உள்பட பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்க, பிரதமர் மோடி சென்னைக்கு வரும் 20-ம் தேதி வரவிருந்த நிலையில், அவரின்
-
சனிக்கிழமை அட்டவணையின்படி இன்று மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
16 Jun 2024சென்னை : பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
-
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தந்தையர் தின வாழ்த்து
16 Jun 2024சென்னை : தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை என்று தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வ
-
குறுவை சாகுபடி திட்டத்தால் விவசாயிகளுக்கு பயனில்லை : ஓ.பன்னீர்செல்வம் கருத்து
16 Jun 2024சென்னை : டெல்டா குறுவை சாகுபடி சிறப்புத் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் விளையப் போவதில்லை என்பதுதான் உண்மை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெ
-
இன்று பக்ரீத் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து
16 Jun 2024சென்னை : பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
ஜப்பானில் அரிய வகை நோய் பரவல்: 2 நாளில் மரணம் நிச்சயம்
16 Jun 2024டோக்கியோ : ஜப்பான் நாட்டில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோய் விரைவாக பரவி வருகிறது. கடந்த 2-ம் தேதி இந்த மர்ம நோய், ஜப்பானை தாக்கிய விவரம் தெரிய வந்துள்ளது.
-
உலகில் சிறந்த 100 தொழில் நுட்ப நிறுவனங்கள்: 3 இந்திய நிறுவனங்கள் இடம்பிடிப்பு
16 Jun 2024புதுடில்லி; உலகளவிலான 100 தொழில் நுட்ப நிறுவனங்கள் பட்டியலில் 3 இந்திய நிறுவனங்கள் இடம் பிடித்து உள்ளது.
-
கோலி குறித்து பயிற்சியாளர்
16 Jun 2024விராட் கோலியின் ஃபார்ம் குறித்து எந்தவொரு கவலையும் இல்லை என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-06-2024
16 Jun 2024 -
தந்தையர் தினத்தையொட்டி நடிகை நயன்தாராவின் வீடியோ பதிவு வைரல்
16 Jun 2024சென்னை : தந்தையர் தினத்தையொட்டி கணவர் விக்னேஷ் சிவன் தனது இரண்டு குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நடிகை நயன்தாரா வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
-
செல்போன் மூலம் இ.வி.எம்.களில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை மும்பை தேர்தல் அதிகாரி விளக்கம்
16 Jun 2024புதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டுக்கு ஓடிபி எண் எதுவும் தேவையில்லை என மும்பை தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
16 Jun 2024நெல்லை: திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
திருப்பதி தொகுப்பு சுற்றுலா திட்டம்: நாளொன்றுக்கு 400 பேர் வரை செல்லலாம்: அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்
16 Jun 2024சென்னை : தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் ஒரு நாள் சுற்றுலா திட்டமான, திருப்பதி தொகுப்பு சுற்றுலா திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 400 நபர்கள் வரை சுற்றுலா செல்லலாம
-
கடைசி ஓவரில் திரில் வெற்றி: ஸ்காட்லாந்தை வீழ்த்தியது ஆஸி.,
16 Jun 2024நியூயார்க்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற 35-வது போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
-
கூட்டுறவு நிறுவனங்களில் விவசாய எந்திரங்கள் வாடகைக்கு கிடைக்கும் : உழவர் செயலி மூலம் பதிவு செய்யலாம்: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்
16 Jun 2024சென்னை : கூட்டுறவுத்துறை நிறுவனங்கள் மூலம் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக விவசாய எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு தரப்படுவதாக அமைச்சர் கேஆர்.
-
ஆனி மாத பவுர்ணமி: தி.மலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
16 Jun 2024தி.மலை : திருவண்ணாமலையில் ஆனி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
தென்சீன கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த சீனாவின் புதிய சட்டம் அமல்
16 Jun 2024பெய்ஜிங் : தென் சீனக் கடல் பகுதியில் சீனா புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
-
பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் ரிஷி சுனக்கின் கட்சி படுதோல்வி : கருத்துக்கணிப்பு தகவலால் அதிர்ச்சி
16 Jun 2024லண்டன் : பிரிட்டனில் ஜூலை 4 -ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியடைந்து தேர்தலிலிருந்து முற்றி
-
நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
16 Jun 2024நெல்லை: திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
அமெரிக்காவில் 81 வயதில் ரயில் ஓட்டும் மூதாட்டி
16 Jun 2024வாஷிங்டன் : அமெரிக்காவைச் சேர்ந்த 81 வயது மூதாட்டி ஹெலன் ஆண்டனுச்சி, உலகின் மிக வயதான ரயில் ஓட்டுநர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
-
மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த வழிகாட்டி கையேடு : பள்ளி கல்வித்துறை வடிவமைப்பு
16 Jun 2024சென்னை : அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக புதிய வழிகாட்டி கையேட்டை பள்ளி கல்வித்துறை வடிவமைத்துள்ளது.
-
ம.பி.யில் மதுபான ஆலையில் இருந்து தீ காயங்களுடன் 58 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
16 Jun 2024போபால் : மத்தியப்பிரதேசம் மாநிலம் ரைசென் மாவட்டத்தில் உள்ள மதுபான தொழிற்சாலையில் இருந்து 39 சிறுவர்கள் மற்றும் 19 சிறுமிகள் மீட்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளா
-
சீருடை மற்றும் பேட்ஜ் அணிய ஓட்டுநர், நடத்துனர்களுக்கு மாநகர போக்குவரத்துக்கழகம் உத்தரவு
16 Jun 2024சென்னை : ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியின்போது சீருடை மற்றும் பேட்ஜ் அணிந்து பணிபுரிய வேண்டும் என்று மாநகர போக்குவரத்துக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும்: எலான் மஸ்க் கருத்து
16 Jun 2024வாஷிங்டன் : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
-
மழையால் போட்டி ரத்து: இந்தியா, கனடாவுக்கு தலா ஒரு புள்ளிகள்
16 Jun 2024புளோரிடா: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா – கனடா அணிகள் இடையேயான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.