எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க சார்பில் போட்டியிடும் விஜயபிரபாகரனை ஆதரித்து சிவகாசி பாவாடிதோப்பு திடலில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு முரசு சின்னத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் , ஆர்.பி உதயகுமார் மற்றும் கூட்டணி கட்சியினர், அ.தி.மு.க. ஆதரவு அமைப்பு தலைவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக வரவேற்று பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எந்த சேனலை திறந்து பார்த்தாலும் எடப்பாடியை பற்றி தான் பேச்சு. கன்னியாகுமரி முதல் டெல்லி வரை எடப்பாடி பழனிச்சாமியை பற்றிதான் பேசுகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி பின்னால் 2 கோடி தொண்டர்கள் உள்ளனர். உள்ளதை பேசுபவர் நல்லதை செய்பவர். எளிமையானவர் , வலிமையானவர். எது வந்தாலும் சந்திக்கும் திறன் உள்ளவர். எடப்பாடியார் கூட்டத்திற்கு எழுச்சியாக தொண்டர்கள், பொதுமக்கள் வருகிறார்கள். எல்லோருக்கும் எதையும் செய்பவர் அள்ளி அள்ளி கொடுப்பவர் எடப்பாடி பழனிச்சாமி என பேசினார்.
பின்னர் உரை நிகழ்த்திய விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகர், எனக்காக பிரச்சாரம் செய்ய வந்த வருக்கால முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி . நான் அரசியலுக்கு வருவேன் என்று தெரியும். ஆனால் இவ்ளோ சீக்கிரமாக வருவேனு தெரியாது. நான் சென்னைக்காரன் என விமர்சனம் செய்கிறார்கள். நான் இந்த மண்ணுக்கு சொந்துக்காரன். இந்த கூட்டணி வெற்றிக் கூட்டணி. அ.தி.மு.க. தேமுதிக கூட்டணி தொடரும். 2018 எனது அப்பா பேசிய இடத்தில் நான் இப்போது பேசுகிறேன். முரசு சின்னத்தில் எனக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற்றால் உங்களது குரலாக டெல்லியில் ஒலிப்பேன் - என பேசினார்.
பின்னர் சிறப்புரையாற்றி, முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தனது வாழ்நாளை மக்களுக்காக அற்பனித்தவர் புரட்சி தலைவி அம்மா. நாட்டு மக்களுக்கு நல்லது செய்பவர்கள் தான் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும் - நாட்டு மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள் நமது தலைவர்கள். வீட்டு மக்களுக்காத வாழ்ந்த தலைவர் கருணாநிதி. நமது வேட்பாளர்களை விட கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். தி.மு.க. சீட் கொடுத்து கூட்டணி கட்சி வேட்பாளர்களை அழ வைக்கிறார்கள். தி.மு.க. வில் கூட்டணி வைப்பவர்களை தி.மு.க. வளர விடாது. நம்மிடம் கூட்டணி வைத்தால் நாம் கை தூக்கி வளத்து விடுவோம்.
ஸ்டாலினுக்கு தூக்கம் போச்சு. எங்கு பார்த்தாலும் என்னை பற்றியே பேசுகிறார். தி.மு.க. கட்சி காரர்கள் என்ன என்ன அட்டூலியம் செய்கிறார்கள் என ஸ்டாலினே கூறுகிறார். அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு தேவையானதை செய்யும். தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை - தி.மு.க. வின் 38 எம்பி க்கள் பாராளுமன்றத்தில் எந்த குரலும் கொடுக்க வில்லை - 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் பட்டாசு தொழிலுக்கு அழுத்தம் கொடுப்போம் - சட்டதிருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - பட்டாசு தொழில் நசுங்கி போச்சு இந்த நிலையில் ஸ்டாலின் நலமா என கேட்கிறார் . தி.மு.க. ஆட்சியில் இருந்தால் யாராக நலமாக இருக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.
விருதுநகரில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் என்னை பற்றி பேசியுள்ளர். இரட்டை வேடும் போடும் கட்சி தி.மு.க.தான். நாங்கள் கொடுத்த புகாரை ஆளுநர் விசாரித்து இருந்திருந்தால் பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வந்திருக்கும் - 2026 வரை நாம் காத்திருக்க தேவையில்லை. தி.மு.க. அவ்ளோ ஊழல் செய்திருக்கிறது.
எனக்கு முதுகெலும்பு இல்லை என ஸ்டாலின் கூறுகிறார். எனக்கா முதலெலும்பு இல்லை வந்து பாருங்கள் மோதி பார்க்கலாம். ஸ்டாலின் அவர்களே பேச்சுக்கு ஒரு எல்லை உண்டு. அ.தி.மு.க. தொண்டர்கள் பதிலடி கொடுத்தால் அவ்ளோதான். நான் எதையும் செய்ய தயார். எனது ஆட்சியில் மக்கள் பணி செய்ய வேண்டும் என்று இருந்தேன் நான் வழக்கு போட்டிருந்தால் எத்தனையோ வழக்கு போட்டிருக்கலாம். மக்கள் பணி செய்ய வேண்டும் என ஆட்சி செய்தேன். தி.மு.க. வோ அ.தி.மு.க. தொண்டர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போடுகிறது. தி.மு.க. - வில் பல அமைச்சர்கள் நீதிமன்றம் ஏறி இறங்கி வருகிறார்கள் வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. மாவட்ட தி.மு.க. கூட்டணி கட்சியினர் தோல்வி சந்திப்பர் என்று பேசினார்.
கூட்டத்தில் அண்ணா தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, நிர்வாகிகள் தேமுதிக மாவட்டம், நகர, ஒன்றிய நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 22 hours ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை3 days 18 hours ago |
ஆனியன்ப்ரை6 days 17 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 3 days ago |
-
தேர்தல் நன்கொடை நிதி பத்திர விவகாரம்: சிறப்பு விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
14 May 2024புதுடெல்லி : தேர்தல் நன்கொடை நிதிப் பத்திர விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக் கோரி நேற்று மனு அளிக்கப்பட்டுள்ளது.
-
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு மற்றொரு டாக்டர் பட்டம்
14 May 2024வேலூர் : வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் மாநில பல்கலைக்கழகம் (பிங்ஹாம்டன் பல்கலைக்கழகம்)
-
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் 91.17 சதவீதம் : கோவை மாவட்டம் முதலிடம்
14 May 2024சென்னை : தமிழகத்தில் பிளஸ் -1 தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் தமிழகத்தில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.
-
அரசு மருத்துவமனையில் செலுத்தும் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்
14 May 2024சென்னை : மஞ்சள் காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் செலுத்தும் தடுப்பூசிக்கான சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.&nb
-
மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமல்
14 May 2024சென்னை : சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமலுக்கு வரவுள்ளது.
-
தயாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி ஆஜர் : விசாரணை ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
14 May 2024சென்னை : தயாநிதி மாறன் தொடர்ந்து அவதூறு வழக்கில் சென்னை எழும்பூர் கோர்ட்டில் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் ஆஜரானார்.
-
நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது..
-
அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
14 May 2024சென்னை : அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
நடப்பு கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 17-க்குள் விண்ணப்பிக்கலாம் : பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
14 May 2024சென்னை : நடப்பு கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கு மே 71 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
-
மும்பையில் விளம்பர பதாகை விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
14 May 2024மும்பை : மும்பையில் விளம்பர பதாகை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
-
நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
14 May 2024சென்னை : நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
சிங்கப்பூரில் சட்டத்துறை துணை அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த முரளி பிள்ளை நியமனம்
14 May 2024சிங்கப்பூர் : சிங்கப்பூரில் சட்டம் மற்றும் போக்குவரத்து துறை துணை அமைச்சராக இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரான முரளி பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்.
-
உலகக்கோப்பை தொடருக்கு பிறகு டி-20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார் கேப்டன் ரோகித்?
14 May 2024மும்பை : 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்? - என்.ஐ.ஏ. தீவிர விசாரணை
14 May 2024சென்னை : பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
வார விடுமுறை நாட்கள்: சிறப்பு பஸ்கள் இயக்கம்
14 May 2024சென்னை : முகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாள்களை முன்னிட்டு மே 17-ம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
-
தமிழ்நாட்டில் திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
14 May 2024சென்னை : தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு கன மழை வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குமரி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
-
சுவாதி மாலிவால் விவகாரம்: டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
14 May 2024புதுடெல்லி : டெல்லி மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ஆம் ஆத்மி எம்.பி.
-
சவுக்கு சங்கருக்கு மே 28-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
14 May 2024கோவை : பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மே 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
நேபாள துணை பிரதமர் உபேந்திர யாதவ் ராஜினாமா
14 May 2024காத்மண்டு : நேபாளத்தில், நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி.-என்.) தலைவரும், துணை பிரதமருமான உபேந்திர யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
-
சிவப்பு நிற உதட்டுச்சாயம் பூசும் பெண்களுக்கு அபராதம்: அதிபர் கிம்
14 May 2024பியாங்கியாங் : தங்கள் நாட்டு பெண்கள் சிவப்பு நிற உதட்டு சாயத்தை பூசிக்கொள்ள கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ள வடகொரிய அரசு இந்த தடையை மீறினால் கடும் நடவடிக்கை எ
-
காங்கிரஸ் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜ் நியமனம்
14 May 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜை நியமனம் செய்து அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
கோழிக்கோட்டில் மோசமான வானிலை: துபாய் விமானங்கள் கோவைக்கு திருப்பி விடப்பட்டன
14 May 2024கோழிக்கோடு : கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மோசமான வானிலை நிலவியதால், துபாயிலிருந்து வந்து இரண்டு விமானங்கள் கோவை விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-05-2024.
14 May 2024 -
தேர்தலில் போட்டியிட தடைகோரி மனு: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு : சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
-
கவிதாவின் காவல் நீட்டிப்பு
14 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 20-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.