எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் அண்மையில் காலியான விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை, மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து ஜூன் 1-ம் தேதி நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான அறிவிப்பு அடுத்த ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு இது சரியான நேரம் அல்ல. ஜூன் 1-ம் தேதி விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றால், அதற்கான மனுத்தாக்கல் மே 7-ம் தேதி தொடங்கப்பட வேண்டும். தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் அதற்கு முன்பாகவே தொடங்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக கடுமையான வெப்ப அலை வீசுகிறது. ஒட்டுமொத்த இந்தியாவில் மூன்றாவது அதிக வெப்பநிலை ஒடிசா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தப்படியாக தமிழகத்தில்தான் பதிவாகி வருகிறது.
ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் கூட கடுமையான வெப்பம் தகிக்கிறது. தமிழகத்தில் மே 4-ம் தேதி முதல் கத்திரி வெயில் தொடங்குவதாகவும், அப்போது 116 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இத்தகைய சூழலில் பரப்புரை மேற்கொண்டால் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் வெப்ப சொறி, வேனல் கட்டி, வெப்ப பிடிப்பு, வெப்ப தசை வலிப்பு, தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
இவற்றை விட கொடிய வெப்ப மயக்க நோய் ஏற்பட்டால் உயிரிழப்பு கூட ஏற்பட வாய்ப்பிருக்கிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு இப்போது எந்த அவசரமும் இல்லை. தி.மு.க. சட்டசபை உறுப்பினர் புகழேந்தி காலமானதை அடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக கடந்த 8-ம் தேதி தான் அறிவிக்கப்பட்டது. அந்தத் தொகுதிக்கு அக்டோபர் 7-ம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தினால் போதுமானது.
செப்டம்பர் 30-ம் தேதிக்கு முன்பாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கும், அக்டோபர் மாதத்தில் அரியானா சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் அவற்றுடன் இணைந்து விக்கிரவாண்டி தொகுதிக்கும் இடைத்தேர்தலை நடத்தலாம்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக தீர்மானிக்கக் கூடாது. தமிழக அரசு மற்றும் கட்சிகளுடன் கலந்து பேசிதான் தேர்தல் தேதியை தீர்மானிக்க வேண்டும்.
ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 3 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 3 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 3 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 days ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆப்பிள் ரோஸ்ட்2 days 12 hours ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்5 days 8 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 week 2 days ago |
-
சிறுமி காணாமல் போன புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
20 May 2024மதுரை : 15 வயது சிறுமி காணாமல்போன புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்
20 May 2024டெஹ்ரான், ஈரான் அதிபர் இப்ராஹிம் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
-
தொடர் கனமழையால் டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி கடும் பாதிப்பு
20 May 2024நாகை : நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை சிறப்பு ரயில் 8 மணி நேரம் தாமதம் : பயணிகள் பெரும் தவிப்பு
20 May 2024நாகர்கோவில் : சென்னை சிறப்பு ரயில் 8 மணி நேரம் தாமதத்தால் பயணிகள் பெரும் தவிப்புக்குள்ளாகினர்.
-
ஆருத்ரா பண மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த இயக்குநர் ஒருவர் கைது
20 May 2024சென்னை : ஆருத்ரா நிறுவன பண மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த நிறுவன இயக்குநர்களில் ஒருவரை தமிழக பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
-
அயோத்திதாசப் பண்டிதர் பிறந்த தினம் முற்போக்கு இந்தியாவைப் படைப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
20 May 2024சென்னை, அயோத்திதாசப் பண்டிதர் பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
-
தடுப்பணை திட்டங்களை கிடப்பில் போட்ட தி.மு.க. : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
20 May 2024சென்னை : அ.தி.மு.க. கொண்டு வந்த தடுப்பணை திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டதாக அ.தி.மு.க. பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-05-2024.
20 May 2024 -
திருவள்ளூர் அருகே சோகம்: மின்வேலியில் சிக்கி 2 இளைஞர்கள் பலி
20 May 2024திருவள்ளூர் : திருவள்ளூர், பள்ளிப்பட்டு அருகே மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தடைக்காலம் எதிரொலி: மீன்கள் விலை கடும் உயர்வு
20 May 2024கோவை : மீன்பிடி தடைக்காலம் என்பதால் கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்ந்துள்ளது. வஞ்சிரம் கிலோ ரூ.1,200க்கு விற்பனை செய்யப்பட்டது.
-
புதுக்கோட்டை அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலி : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
20 May 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உரிமையாளர் பலியானார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
3 நாள் பயணமாக டெல்லி சென்றார் கவர்னர்
20 May 2024சென்னை : சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து நேற்று காலை 11.25 மணியளவில் தனியார் விமானம் புதுடெல்லி செல்வதற்கு தயார்நிலையில் இருந்தது.
-
பா.ஜ.க. சிறுபான்மையினருக்கு எதிராக ஒருபோதும் இருக்காது : பிரதமர் நரேந்திரமோடி திட்டவட்டம்
20 May 2024புதுடெல்லி : சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசியதில்லை என்று தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க.
-
கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு 2 நாட்கள் போலீஸ் காவல் : மதுரை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
20 May 2024மதுரை : கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
-
மிரட்டுவதை நிறுத்துங்கள்: சீனாவுக்கு தைவானின் புதிய அதிபர் எச்சரிக்கை
20 May 2024தைபெய், தைவானின் புதிய அதிபராக வில்லியம் லாய் இன்று பதவியேற்றார். தைபெய் நகரத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அவருக்கான பதவியேற்பு விழா நடைபெற்றது.
-
பட்டப்படிப்பில் சேர பழங்குடி மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்: முதல்வருக்கு மலைவாழ் மக்கள் சங்கம் கடிதம்
20 May 2024சென்னை, பட்டப்படிப்பில் சேர பழங்குடி மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மலைவாழ் மக்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
-
மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்: ராஜஸ்தானுக்கு பின்னடைவு
20 May 2024கவுகாத்தி : மழை காரணமாக ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் மோதும் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
-
தென்மேற்கு வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் நாளை உருவாகிறது : தமிழகத்தில் 2 நாட்கள் மிக கனமழை தொடரும்
20 May 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு மிக கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் நாளை உரு
-
பகலறியான். இசை வெளியீடு
20 May 2024ரிஷிகேஷ் எண்டர்டெயிண்ட்மெண்ட்ஸ் சார்பில் லதா முருகனின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் முருகன் இயக்கத்தில், எட்டுத்தோட்டக்கள் புகழ் வெற்றி நாயகனாக நடிக்க சஸ்பென்ஸ் கலந்த
-
கனமழையால் படகு போக்குவரத்து நிறுத்தம்: கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
20 May 2024குமரி, கன்னியாகுமரி பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு வேளைகளில் விட்டு விட்டு மழை பெய்து வந்தது.
-
பெண் போலீஸ் அவமதிப்பு வழக்கு: பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஒரு நாள் போலீஸ் காவல்: திருச்சி கோர்ட்
20 May 2024திருச்சி : யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழக கடலோர பாதுகாப்பை மேம்படுத்த ‘சாகர் கவாச்’ ஒத்திகை நிகழ்ச்சி: தலைமைச்செயலர் ஆலோசனை
20 May 2024சென்னை : தமிழக கடலோர பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக, ‘சாகர் கவாச்’ எனப்படும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி தொடர்பாக, தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் தலைமைச் செய
-
புதிய உச்சம் தொட்டது: ஒரு பவுன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது : வெள்ளி விலையும் கடும் உயர்வு - பெண்கள், நகை பிரியர்கள் அதிர்ச்சி
20 May 2024சென்னை : தங்கம் விலை இதுவரை இல்லாத அளவு புதிய உச்சம் தொட்டுள்ளது. ஒரு பவுன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்ததால் பெண்கள் - நகைபிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
இலங்கையில் இருந்து அகமதாபாத் வந்த நான்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது
20 May 2024அகமதாபாத் : இலங்கையில் இருந்து அகமதாபாத் விமான நிலையம் வந்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
5-வது கட்ட தேர்தல்: 49 பார்லி., தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு : ராஜ்நாத் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் வாக்களிப்பு
20 May 2024புதுடெல்லி : 5-வது கட்ட பாராளுமன்ற தேர்தலில் நேற்று 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இதில் ராஜ்நாத் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் வாக்களித்தனர்.