முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் செல்வதற்கான இ-பாஸ் பதிவுமுறை துவங்கியது

ஞாயிற்றுக்கிழமை, 5 மே 2024      தமிழகம்
Kodai 2024-05-04

Source: provided

கொடைக்கானல் : சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெறுவதற்கான பதிவு முறை நேற்று இரவு முதல் தொடங்கியது.

கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள், வரும் 7-ஆம் தேதி முதல் இ-பாஸ் பெற்றுச் செல்ல வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இணையதளம் வாயிலாக நேற்று இரவு (மே. 5) முதல் பதிவு செய்து, இ-பாஸ் பெற்று கொள்ளலாம் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்திருந்தார். இ-பாஸ் வழங்குவதற்கான நடைமுறைகள் 90 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டதாகவும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் கொடைக்கானலில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் போல, கடும் விதிமுறைகள் அமல்படுத்தப்படாது என்றும் அவர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில்  சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் செல்வதற்கான இ-பாஸ் பெற பதிவு நேற்று இரவு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து