முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஹல்காம் தாக்குதலுக்கு சரியான பதிலடி: ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து உமர் அப்துல்லா பெருமிதம்

புதன்கிழமை, 7 மே 2025      இந்தியா
Operation-Sindhoor-2

புதுடெல்லி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். லஷ்கர் இ தொய்பா நடத்திய இந்த தாக்குதலின் பின்னணியை உறுதிப்படுத்திய இந்திய அரசு, பாகிஸ்தானில் இயங்கி வரும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களை குறிவைத்து நடவடிக்கை எடுக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, இந்திய ராணுவம் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி அழித்தது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரிலான இந்திய ராணுவத்தின் இந்த துல்லிய தாக்குதல்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த தாக்குதலின் மூலம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா, “பஹல்காமில் 26 அப்பாவி பொதுமக்கள் மனிதாபிமானமற்ற முறையிலும், காட்டுமிராண்டித்தனமாகவும் கொல்லப்பட்ட பிறகு, இந்தியா தனது பதிலடி உரிமையை பொருத்தமான மற்றும் விகிதாசார முறையில் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பாகிஸ்தானின் எந்தவொரு ராணுவ இலக்கும் தாக்கப்படவில்லை. அதேபோல், பொதுமக்களும் தாக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய இந்திய அரசும் இந்திய பாதுகாப்புப் படைகளும் கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன என்று நான் நினைக்கிறேன். அவர்கள் பயங்கரவாத தளங்களை மட்டுமே தாக்கியுள்ளனர்.

ஆனால், பாகிஸ்தான் இந்திய எல்லையின் சில பகுதிகளில் குண்டுவீசித் தாக்கியுள்ளது. அதில் பொதுமக்கள் குறிவைக்கப்பட்டனர். அவர்கள்தான் தாக்குதலைத் தொடங்கினர், நாம் அல்ல. நாம் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தோம். நம்மில் யாரும் போரை விரும்பவில்லை. நிலைமை மீண்டும் மேம்பட வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். அதற்கு முதலில் பாகிஸ்தான் தனது துப்பாக்கிகளைக் கீழே இறக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து