எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ 25 நிமிடங்களில் நடத்தி முடிக்கப்பட்டதாகவும், 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட 24 ஏவுகணைத் தாக்குதல்களில் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப்பயணிகள்...
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். லஷ்கர்-இ-தொய்பா நடத்திய இந்த தாக்குதலின் பின்னணியை உறுதிப்படுத்திய இந்திய அரசு, பாகிஸ்தானில் இயங்கி வரும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களை குறிவைத்து தாக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டது.
‘ஆபரேஷன் சிந்தூர்’...
இதையடுத்து, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் தனது தாக்குதல்களை திட்டமிட்டது. இந்தத் தாக்குதல் நேற்று (மே 7) அதிகாலை 1.05 மணிக்குத் தொடங்கி 1.30 மணிக்குள் நிறைவடைந்தது. 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன. இவற்றின் மீது தாக்குதல் நடத்த 24 ஏவுகணைகள் ஏவப்பட்டன. இதில், 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதோடு, 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
துல்லிய தாக்குதல்...
ராணுவத்தின் 24 ஏவுகணைகளும் துல்லிய தாக்குதல்களை நடத்தியதாகவும், பயங்கரவாத கட்டமைப்பின் பகுதிகளாக இருந்த கட்டளை மையங்கள், பயிற்சி முகாம்கள், ஆயுதக் கிடங்குகள், நிலை வசதிகள் ஆகியவை அழிக்கப்பட்டதை உளவுத் துறை உறுதிப்படுத்தியதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவின் ராணுவ நடவடிக்கை விரிவானதாக இருந்தபோதிலும், பாகிஸ்தானின் எந்த ராணுவ கட்டமைப்புகளும் குறிவைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில்...
ஏவுகணைகள் தரையிலிருந்தும், வான்வழியாகவும் ஏவப்பட்டன. கண்காணிப்பு ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நேரலையாக கண்காணிக்கப்பட்டன. இதன்மூலம், குறைந்தபட்ச பொதுமக்கள் உயிரிழப்புகளுடன் இலக்குகள் குறிவைக்கப்பட்டன. பயங்கரவாத முகாம்களை அழித்தொழிக்க பல போர்முனைகள் ஒரே நேரத்தில் தாக்கின. ஆபரேஷன் சித்தூரில் தாக்குதல் நடத்திய இலக்குகள் குறித்து மத்திய அரசு பகிர்ந்துள்ள தகவலின்படி கீழ்கண்ட 9 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்பட்ட ஐந்து முகாம்களின் விபரம்:
தாக்குதல் நடந்த 9 இடங்கள்:
1. முசாஃபர்பாத்தில் உள்ள சாவய் நாலா முகாம்: இது லஷ்கர்-இ-தொய்பாவின் பயிற்சி முகாமாக இருந்தது. கடந்த 2024, அக்.20-ல் சோன்மார்க்கில் நடந்த தாக்குதல், 2024, அக்.24 குல்மார்க்கில் நடந்த தாக்குதல், 2025. ஏப்.22 பஹல்காமில் நடந்த தாக்குதல் ஆகியவற்றில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு இங்குதான் பயிற்சி அளிக்கப்பட்டது.
2. முசாஃபர்பாத்தில் உள்ள சைத்னா பிலால் முகாம்: இது லஷ்கர்-இ-முகம்மதுவின் ஒரு நிலையாகும். இது ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் மற்றும் பதுங்குகுழிகள் கொண்ட தளமாகும்.
3. கோட்லியில் உள்ள குல்பூர் முகாம்: இது ஜம்முவின் ராஜோரி மற்றும் பூஞ்ச் பகுதிகளில் இருந்த லஷ்கர்-இ-தொய்பாவின் பேஸ் கேம்ப்களாகும். பூஞ்ச் பகுதியில் 2023, ஏப்.20 மற்றும் 2024, ஜூன் 9-ல் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் இங்கு பயிற்சி பெற்றவர்கள்.
4. பிம்பாரில் உள்ள பா்னாலா முகாம்: இங்கும் ஆயுதங்கள், வெடிப் பொருட்களைக் கையாளுதல் மற்றும் பதுங்கி வாழ்தலுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
5. கோட்லியில் உள்ள அப்பாஸ் முகாம்: லஷ்கர் இ தொய்பாவின் பையாதீன் இங்கு உருவாக்கப்பட்டது. இது 15 பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் திறன் கொண்டது.
பாகிஸ்தானில் உள்ள முகாம்கள்:
6. சியால்கோட்டில் உள்ள சர்சால் முகாம்: இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜம்மு காஷ்மீரில் நான்கு போலீஸார் கொல்லப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் இந்த முகாமில் தான் பயிற்சி பெற்றனர்.
7. மெஹ்மூனா ஜோயா முகாம்: பதன்கோட் விமான படைத்தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இந்த முகாமில் இருந்து தான் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது.
8. முரித்கேயில் உள்ள மார்காஸ் தைபா முகாம்: கடந்த 2008-ல் நடந்த மும்பை தாக்குதல் தீவிரவாதிகள் இந்த முகாமில் பயிற்சி பெற்றனர். அஜ்மல் கசாப் மற்றும் டேவிட் ஹெட்லி இந்த முகாமில் பயற்சி பெற்றவர்கள்.
9. பஹவல்புரில் உள்ள மார்கஸ் சுபனல்லா: இது லஷ்கர்-இ-முகம்மதுவின் தலைமையகம். ஆட்கள் சேர்ப்பு, பயிற்சி மற்றும் போதனைகள் இங்கு மேற்கொள்ளப்பட்டன.
ஆபரேஷன் சிந்தூர் பெயர்
திருமணம் ஆன பெண்கள் நெற்றி வடுகில் வைக்கும் குங்குமம் 'சிந்தூர்' என அழைக்கப்படும். பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்களுக்காக பழிதீர்க்கவே 'ஆபரேஷன் சிந்தூர்' என்று வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமத்தை குறிக்கவே, இந்த ராணுவ நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பங்கரவாத முகாம் மீதான தாக்குதலுக்கு "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரை பிரதமர் மோடி தேர்வு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய ராணுவத்துடன் தமிழ்நாடு துணை நிற்கிறது. நமது தேசத்திற்காக நமது ராணுவத்துடன் தமிழ்நாடு உறுதியாக நிற்கிறது.
- முதல்வர் மு.க.ஸ்டாலின்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
பூமியே அதிரும் அறிவிப்பை வெளியிடப்போகிறேன்: சமூக ஊடகங்களில் வைரலான அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு
07 May 2025அமெரிக்கா : பூமியை அதிர வைக்கும் வகையிலான ஒரு அறிவிப்பை ஒரு சில நாள்களில் வெளியிடவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
-
எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: 15 பேர் உயிரிழப்பு - 30 பேர் காயம்
07 May 2025புதுடெல்லி : இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை தொடர்ந்து, எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய குடிமக்கள் 15 பேர் உயிரிழந்தனர்; 30-க்கும் மேற்
-
அங்கன்வாடி மையங்களுக்கு 15 நாட்கள் கோடை விடுமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
07 May 2025சென்னை, அங்கன்வாடி மையங்களுக்கு 15 நாட்கள் கோடை விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது: பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். பாராட்டு
07 May 2025சென்னை, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்திய ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்திய ந
-
ஆபரேஷன் சிந்தூர்: 5 நாடுகளுக்கு இந்தியா விளக்கம்
07 May 2025புதுடெல்லி, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமெரிக்கா, சவூதி அரேபியா, ரஷ்யா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு இந்தியா விளக்க
-
'ஆபரேஷன் சிந்தூர்': இந்தியாவுக்கு இஸ்ரேல் ஆதரவு
07 May 2025புதுடெல்லி : பயங்கரவாதிகள் மீதான இந்திய ராணுவ தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆதரவு அளித்துள்ளது.
-
சென்னையி்ல் புதிதாக 214 புதிய பேருந்துகள் இயக்கத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்
07 May 2025சென்னை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில்,214 புதிய பேருந்துகள் - தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்
-
ஆபரேஷன் சிந்தூர்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பாராட்டு
07 May 2025புதுச்சேரி : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிரதமர் மற்றும் இந்திய ராணுவத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புதிய போர்க்கப்பல் மே 28-ல் இந்தியாவிடம் ஒப்படைப்பு
07 May 2025புதுடெல்லி : ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புதிய போர்க்கப்பல் வரும் 28-ம் தேதி இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
-
தி.மு.க. ஆட்சியில் வறுமையில்லை: பட்டினிச்சாவு இல்லை மதக்கலவரங்கள் இல்லை: முதல்வர் ஸ்டாலி்ன் பெருமிதம்
07 May 2025சென்னை, தி.மு.க. ஆட்சியில் வறுமை இல்லை: பட்டினிச்சாவு இல்லை லன்முறைகள் இல்லை மதக்கலவரங்கள் இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்
-
தீவிரவாதத்திற்கு எதிரான போரி்ல் தமிழகம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி
07 May 2025சென்னை, தீவிரவாதத்திற்கு எதிரான போரில் தமிழ்நாடு இந்திய ராணுவத்துடன் உறுதியாக நிற்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
-
ஊட்டி மலர் கண்காட்சி 10 நாட்களுக்கு நீடிப்பு
07 May 2025ஊட்டி : ஊட்டியில் உள்ள பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா ஆய்வு செய்தார்.
-
மகளிர் விடியல் பேருந்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
07 May 2025சென்னை, மகளிர் விடியல் பேருந்தில் முதல்வர் ஸ்டாலின் திடீரென ஆய்வு நடத்தினார், அப்போது பேருந்தில் பயணம் செய்த முதல்வர் ஸ்டாலினுக்கு பெண்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
-
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி: ‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயரில் நள்ளிரவில் இந்திய ராணுவம் நடத்திய 'துல்லிய தாக்குதல்' : 9 பயங்கரவாதிகள் முகாம்கள் அழிப்பு - 70 பேர் பலி
07 May 2025புதுடெல்லி : இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ 25 நிமிடங்களில் நடத்தி முடிக்கப்பட்டதாகவும், 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட 24 ஏவுகணைத் தாக்குதல்
-
அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணத்தை உயர்த்தி வழங்க தமிழக அரசாணை வெளியீடு
07 May 2025சென்னை, அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் அதற்கான தமிழக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
வடமேற்கு பிராந்தியத்தில் 165 இண்டிகோ விமானங்கள் ரத்து
07 May 2025புதுடெல்லி, : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து வடமேற்கு பிராந்தியத்தில் 165 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
-
சென்னை ஐகோர்ட் நீதிபதி காலமானார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
07 May 2025சென்னை : சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
எல்லையில் தொடரும் பதற்றம்: எட்டு மாநில முதல்வர்களுடன் அமித்ஷா அவசர ஆலோசனை
07 May 2025புதுடெல்லி, எல்லையோர ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட எட்டு மாநில முதல்வர்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார்.
-
தஞ்சாவூரில் பெரியகோவில் தேரோட்டம் கோலாகலம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
07 May 2025தஞ்சாவூர் : தஞ்சாவூரில் பெரியகோவில்சித்திரைப் பெருவிழாவையொட்டி, திருத்தேரோட்டம் புதன்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
-
நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி: ராஜஸ்தான், கேரளா, பீகாரில் 9 பேர் கைது
07 May 2025ஜெய்ப்பூர், நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி தொடர்பாக ராஜஸ்தான் மற்றும் பீகாரில் 7 பேரும் நுழைவுச் சீட்டு மோசடி தொடர்பாக கேரளாவில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
-
இந்திய ராணுவத்தின் ஆபரேசன் சிந்தூர்: ஜனாதிபதியை சந்தித்து பிரதமர் மோடி விளக்கம்
07 May 2025புதுடெல்லி : ஆபரேசன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை குறித்து ஜனாதிபதி திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து பிரதமர் மோடி விளக்கமளித்தார்.
-
சென்னையில் 2 இடங்களில் நடந்த பாதுகாப்பு ஒத்திகை
07 May 2025சென்னை : சென்னையில் நேற்று 2 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.
-
இந்திய ராணுவ நடவடிக்கையால் கவலை: ஆபரேஷன் சிந்தூர் குறித்து சீனா
07 May 2025புதுடெல்லி : பாக்கிஸ்தான் மீதான இந்திய ராணுவ நடவடிக்கை கவலை அளிப்பதாக சீனா கருத்து தெரிவித்துள்ளது.
-
இது போர் நடவடிக்கையே: இந்திய ராணுவ தாக்குதலுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு
07 May 2025இஸ்லாமாபாத் : ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலை கடுமையாக விமர்சித்துள்ள பாகிஸ்தான், ‘இந்தியாவின் தாக்குதல் என்பது அப்பட்டமான போர் நடவடிக்
-
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல்: பாக்.கிற்கு ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம்
07 May 2025நியூயார்க் : பஹல்காமில் நடந்த தீவிரவாதிகளின் கொடூரமான தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்தது.