எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, அதிக கனமழை – புயலை ஆகியவற்றை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்றும் உதவி கேட்டு வரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை ஆயத்த நிலை மற்றும் மேட்டூர்அணையிலிருந்து நீர் திறப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் - முதல்வர்.மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது முதல்வர்மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர்மாளிகையின் 10-வது தள கூட்ட அரங்கில் தென்மேற்கு பருவமழை ஆயத்தநிலைமற்றும் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தின் தொடக்கத்தில், அரசு தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், வரவேற்புரை ஆற்றினார். பின்னர், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-
இயற்கைச்சீற்றங்களிலிருந்து மக்களைக் காக்க வேண்டிய பெரும் கடமை அரசுக்கும்,அரசு அதிகாரிகளான உங்களுக்கும்தான் இருக்கிறது.இப்போது, நாம் தென்மேற்குப் பருவமழையைஎதிர்கொள்ளவிருக்கிறோம். இதில் இயல்பான மழைப்பொழிவுதான்இருக்குமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.என்னதான் நிலத்தடி நீர்ப் பெருக்கம், காவிரி டெல்டா வேளாண்மைஉள்ளிட்டவற்றுக்கு இந்த மழை துணையாக இருந்தாலும், மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஏற்படக்கூடிய கனமழை, திடீர்வெள்ளம், நீலகிரி மலைப் பகுதிகளில் ஏற்படுகிற நிலச்சரிவு போன்றபாதிப்புகளையும் இதனால் நாம் எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.அதுமட்டுமல்ல, அதிக கனமழை, புயல் ஆகியவற்றை எதிர்கொள்ளகடலோர மாவட்டங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.தென்மேற்குப் பருவமழை காலத்தைத் திறம்பட எதிர்கொள்ள,அனைத்து மாவட்ட கலக்டர்களும் , மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படுவதையும், தகவல்தொடர்பு சாதனங்களின் பயன்பாட்டையும், மீட்பு உபகரணங்கள் மற்றும்வாகனங்களின் தயார் நிலையையும் உறுதி செய்திடவேண்டும். பேரிடர்மீட்பு மையங்கள் தூய்மையாகவும், மின்சாரம், உணவு, குடிநீர் போன்றவசதிகளோடும் தயார் நிலையில் இருக்கவேண்டும். அதுமட்டுமல்ல;பேரிடர் மேலாண்மைத் திட்டம் - தகவல் தொடர்புத் திட்டம் - முதல்நிலைமீட்பாளர்களின் பட்டியல் மற்றும் அ தொலைபேசி எண்கள்அனைத்தையும் சரிபார்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.\வழக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடந்து, நாம்ப்ரோ-ஆக்டிவாகச் செயல்பட்டால் பேரிடர் காலங்களில் ஏற்படுகின்ற பலபாதிப்புகளைத் தவிர்க்கலாம். அதற்காக நான் சில ஆலோசனைகளைச்சொல்ல விரும்புகிறேன்.
பேரிடர் காலங்களில் மக்கள் தங்களுக்குத் தேவையானவற்றைக்கேட்டும், தங்களுடைய குறைகளைச் சொல்லியும் குரல் எழுப்புவதுஊடகங்களிலேயும், சமூக வலைதளங்களிலேயும்தான். எனவே, சோஷியல்மீடியாக்களில், செய்திகளில் வருகிற புகார்களை விசாரித்து உரியநடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், அப்படிஎடுக்கப்படுகிற நடவடிக்கைகள் அனைத்து மக்களுக்கும் சென்றுசேருகிறதா என்பதைத் திரும்பவும் நீங்கள் ஃபாலோ-அப் செய்யவேண்டும். குறைகளைச் சொல்கின்ற மக்களிடையேயும், உதவி கேட்கின்றமக்களிடையேயும் கனிவாக நடந்து கொள்ளுங்கள். அவர்கள் நம்மைநம்பிதான் உதவி கேட்கின்றார்கள் என்ற பொறுப்போடு நீங்கள் நடந்துகொள்ளுங்கள். பேரிடர் காலங்களில் ஏற்படுகிற திடீர் மின்வெட்டு மற்றும்அறிவிக்கப்பட்ட மின்வெட்டு மற்றும் மின் பராமரிப்புப் பணிகள் குறித்ததகவல்கள் நுகர்வோருடைய செல்போனுக்கு SMS-ஆ அனுப்ப வேண்டும்.அதுமட்டுமல்ல, அவர்கள் பகுதியில் எப்போது மறுபடியும் மின்சாரம் வரும்என்று சேர்த்தே மெசேஜ் அனுப்ப வேண்டும்.அடுத்து, சாலைப் பணிகள் நடைபெறுகிற காரணங்களினால், சிலஅசம்பாவிதச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, தமிழ்நாடு\முழுவதும் அப்படி இருக்கின்ற ஆபத்தான பகுதிகளைக் கண்டறிந்து,அங்கே தகுந்த தடுப்புச் சுவர்கள், தடுப்பு வேலிகள், போதிய வெளிச்சம்,ஒளிரும் டைவெர்ஷன் போர்டுகள் போன்றவற்றை வைத்து விபத்துகளைத்தடுக்க வேண்டும்.
அடுத்து, மழைக்காலங்களில், நெல் மூட்டைகள் மற்றும் உணவு\தானியங்கள் மழையால் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், சேமிப்புகிடங்குகள் மற்றும் கூடங்களில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், நீர்நிலைகளில் ஆகாயத்தாமரைகளை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும், கொசுத்தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.அடுத்து,\ சென்னை மாநகராட்சியைப்பொறுத்தவரைக்கும், இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடியமழைநீர் வடிகால், நீர் வழிகால்வாய்கள் மற்றும் குளங்கள் மேம்பாட்டுப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பருவமழை காலத்துக்குத்தேவையான எல்லா ஆயத்த நடவடிக்கைகளையும் உடனடியாகமேற்கொள்ளவேண்டும். அடுத்து, நீர்வள ஆதாரத் துறையைப் பொறுத்தவரைக்கும்17.05.2025 தேதி நிலவரப்படி, மேட்டூர் அணையில் 108.33 அடிஉயரத்தில், 76.06 டி.எம்.சி தண்ணீர் இருக்கிறது. எனவே, வரும் ஜூன் 12-ம் நாள் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பதற்குப் போதுமான நீர்இருக்கிறது. காவிரியின் கிளையாறுகள், வாய்க்கால்கள் ஆகியவற்றைத்தூர்வாரி, கடைமடைக்கும் தண்ணீர் கொண்டு சென்று, குறுவைசாகுபடியை செம்மையாகச் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.அடுத்து, வேளாண்மை–உழவர் நலத்துறையைப்பொறுத்தவரையில், தென்மேற்குப் பருவமழையை எதிர்பார்த்து கார்,குறுவை, சொர்ணவாரி பருவங்களில் பயிர் சாகுபடி மேற்கொள்ளபல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் செய்யப்பட்டிருக்கின்றன.எனவே, தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தென்மேற்குபருவமழை மற்றும் மேட்டூர் அணையின் நீர் திறப்பு ஆகியவற்றால்குறுவை சாகுபடி அதிகளவில் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுவதால்,வேளாண் பெருமக்களுக்கு தேவையான விதைகள், உரங்கள் உள்ளிட்டஎல்லா இடு பொருட்களும் உரிய காலத்தில் கிடைப்பதையும், குறுவைசிறப்புத் தொகுப்பு திட்டத்தினுடைய பயன்கள் முழுமையாக விவசாயிகளைச் சென்றடைவதையும் உறுதி செய்திட, வேளாண்களஅலுவலர்கள் முழு முனைப்போடு பணியாற்ற வேண்டுமென்று கேட்டு\கொள்கிறேன். அதுமட்டுமல்ல, மேட்டூர் அணையிலிருந்து நீர்திறக்கப்படுவதற்கு முன்பாகவே, கடைமடைப் பகுதிக்கும் தண்ணீர்சென்று கிடைப்பதற்கு ஏதுவாக கால்வாய்கள் தூர்வாரப்பட வேண்டும்.எதிர்வரும் தென்மேற்கு பருவமழை காலத்தில் உயிரிழப்பு, பொருள்மற்றும் உட்கட்டமைப்பு சேதம் எதுவும் இல்லாமல், நல்ல முறையில் பருவமழை காலத்தைக் கடந்து செல்ல அனைத்துத் துறைகளும்ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அனைத்து அரசு ஊழியர்களும் முழு முனைப்போடு பணியாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
முதல்வர் ஸ்டாலின் உரையாற்றியதற்கு பிறகு, தென்மேற்குபருவமழை ஆயத்த நிலை மற்றும் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு குறித்துவிளக்கப் படத்தின் மூலம், வருவாய்த்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்,வி ளக்கினார்.பின்னர், நகராட்சி நிருவாகத் துறை, வருவாய்த் துறை, வேளாண்மை மற்றும்உழவர் நலத் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை,நீர்வளஆதாரத் துறைகளைச் சார்ந்த செயலாளர்கள், காவல் துறை தலைமை இயக்குநர்ஆகியோர், தங்களது துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள்குறித்து கூட்டத்தில் எடுத்துரைத்தனர். முதல்வர், துணை முதல்வர் மற்றும்அமைச்சர்கள் துறை அதிகாரிகளுக்கு தங்களதுஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினர்.கூட்டத்தின் இறுதியில், வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்நன்றியுரை ஆற்றினார்.இக்கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன் கே.என்.நேரு.எ.வ.வேலு,.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், எஸ்.எஸ். சிவசங்கர், பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால்காவல் துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 3 weeks ago |
-
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த அரியானா பெண் யூடியூபர் கைது
18 May 2025சண்டிகர் : அரியானா மாநிலத்தை சேர்ந்த பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா. இவருக்கு யூடியூபில் 3 லட்சத்து 77 ஆயிரம் பாலோவர்கள் உள்ளனர்.
-
சாத்தான்குளம் விபத்து: கிணற்றில் இருந்து 45 சவரன் நகைகள் மீட்பு
18 May 2025தூத்துக்குடி சாத்தான்குளம் விபத்து நடந்த கிணற்றில் இருந்து 45 சவரன் நகைகள்மற்றும் பொருட்களை மீனவர்கள் மீட்டனர்
-
8,350 கோடி ரூபாய் நிதியுதவி: பாக்.கிற்கு புதிய நிபந்தனைகள்: சர்வதேச நாணய நிதியம் அதிரடி
18 May 2025புதுடில்லி : பாகிஸ்தானுக்கு 11 புதிய நிபந்தனைகளை விதித்து சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்.,) அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
-
முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: மா.செ.க்களுக்கு த.வெ.க. உத்தரவு
18 May 2025சென்னை : முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி மாவட்டச் செயலாளர்களுக்கு த.வெ.க. உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
-
மருமகனுக்கு மீண்டும் கட்சி பொறுப்பு வழங்கிய மாயாவதி
18 May 2025லக்னோ : தமது மருமகன் ஆகாஷ் ஆனந்திற்கு பகுஜன் சமாஜ் முதன்மை தேசிய ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை வழங்கி உள்ளார் மாயாவதி.
-
வார விடுமுறை: திருச்செந்தூரில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
18 May 2025திருச்செந்தூர் : விடுமுறை தினமான நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
-
முள்ளிவாய்க்கால் நினைவுதினம் மண்ணில் புதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கு வீரவணக்கம்: விஜய்
18 May 2025சென்னை : மண்ணில் புதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கு வீரவணக்கம் என த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.
-
ஓமன் நாட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து கேரள தம்பதி பலி
18 May 2025மஸ்கட் : ஓமன் நாட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து கேரள தம்பதி பலிகினர்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவு
18 May 2025தர்மபுரி : தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
-
ஆபரேஷன் சிந்தூர் பற்றி சர்ச்சைப் பதிவு; அசோகா பல்கலை., பேராசிரியர் கைது
18 May 2025சண்டிகர் : ஆபரேசன் சிந்தூர் குறித்து சர்ச்சை கருத்துக்களை கூறியதாக அசோகா பல்கலை பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.
-
தெலுங்கானாவில் நக்சலைட்டுகள் 20 பேர் கைது; ஆயுதங்கள் மீட்பு
18 May 2025ஐதராபாத் : தெலுங்கானாவில் நக்சலைட்டுகள் 20 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து வெடி மருந்துகள், ஆயுதங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
தஞ்சாவூரில் நாட்டு வெடி குடோனில் தீ விபத்து; இருவர் பலி
18 May 2025தஞ்சாவூர் : தஞ்சாவூரில் நாட்டு வெடி குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கு ஜெய்சங்கர் சுற்றுப்பயணம்
18 May 2025புதுடெல்லி : நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் ஜெர்மனி ஆகிய 3 நாடுகளுக்கு மத்திய வெளிவிவகார துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
-
பாராளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பு: 17 எம்.பி.க்களுக்கு விருது
18 May 2025புதுடில்லி : பாராளுமன்றத்தில் சிறந்த பங்களிப்புக்காக 17 எம்.பி.க்களுக்கு சன்சத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் : காஷ்மீர் முதல்வர் உறுதி
18 May 2025ஸ்ரீநகர் : பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகளின் வருகை மிகவும் குறைந்து விட்டதாக முதல்வர் ஓமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-05-2025
19 May 2025 -
மீண்டும் 70 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை
19 May 2025சென்னை, சென்னையில் நேற்று (மே 19) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்ந்து ரூ.70,040க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.
-
இந்தியாவின் அரசமைப்பே உச்சபட்ச அதிகாரம் கொண்டது: தலைமை நீதிபதி
19 May 2025மும்பை : இந்தியாவின் அரசமைப்பே உச்சபட்ச அதிகாரம் கொண்டது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்துள்ளார்.
-
கூகுள் குரோம் பயனர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
19 May 2025புதுடில்லி : விண்டோஸ் மற்றும் மேக் கம்யூட்டர்களில் கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களுக்கு மத்திய அரசின் கணினி அவசரநிலை கண்காணிப்புக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
வி.என்.ஜானகி தியாகங்கள் போற்றத்தக்கது: ஓ.பன்னீர்செல்வன் புகழாரம்
19 May 2025சென்னை, எம்.ஜி.ஆரின் மனைவியும் முன்னாள் முதலமைச்சருமான வி.என்.ஜானகியின் தியாகங்கள் போற்றத்தக்கது என்று ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார் இது குறித்து அ.த
-
கோவை, நீலகிரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
19 May 2025சென்னை, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வரும் 22ம் தேதி காற்றழுத்த தாழ்வு உருவாகிறது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கனமழை- புயலை எதிர்கொள்ள தயாராக இருக்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
19 May 2025சென்னை, அதிக கனமழை – புயலை ஆகியவற்றை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்றும் உதவி கேட்டு வரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்
-
ஈரோடு, பல்லடம் இரட்டைக்கொலை: கைது செய்யப்பட்ட 4 பேருக்கு ஜூன் 2 வரை நீதிமன்ற காவல்
19 May 2025ஈரோடு, ஈரோடு மற்றும் பல்லடத்தில் இரு வேறு இடங்களில் நடந்த வயது முதிர்ந்த தம்பதிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஞானசேகரன், ரமேஷ், மாதேஸ்வரன், ஆச்சியப்பன் ஆகிய 4 பேர் கைது
-
இந்த வாரம் வெளியாகும் ' ஏஸ் '
19 May 20257CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஆறுமுக குமார் எழுதி, தயாரித்து, இயக்கியுள்ள படம் ‘ஏஸ்' ( ACE).
-
மே 29-ல் சிக்கிம் செல்கிறார் பிரதமர் மோடி?
19 May 2025ஷில்லாங் : சிக்கிம் மாநில அந்தஸ்து பெற்றதன் 50வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மே 29 அன்று சிக்கிம் செல்ல வாய்ப்புள்ளதாக முதல்வர் பி