முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில் நிலையத்தில் எச்சில் துப்பியவர்களிடம் ரூ. 32 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது

திங்கட்கிழமை, 19 மே 2025      இந்தியா
Tairn 2023-05-25

Source: provided

கொல்கத்தா : ரயில் நிலையங்களில் எச்சில் துப்பிய குற்றத்துக்காக மூன்று மாதங்களில் ரூ. 32 லட்சம் அபராதம் வசூலித்துள்ளதாக கிழக்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கிழக்கு ரயில்வே நிர்வாகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் தூய்மையை உறுதி செய்வதற்கும், கழிவுகள் இல்லாத ரயில் பாதைகளை உருவாக்கவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், இந்தாண்டு தொடக்கம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில், கிழக்கு ரயில்வே நிர்வாகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் எச்சில் துப்பியவர்கள் மற்றும் அசுத்தம் செய்தவர்கள் என மொத்தம் 31,576 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து மொத்தம் ரூ. 32,31,740 வசூலிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அபராத நடவடிக்கைகள் மூலம் நீண்டகால மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளதாக ரயில்வே அதிகாரி தெரிவித்தார். மேலும், ரயில் பயணிகளிடம் தூய்மையை வலியுறுத்தி சுகாதாரத் துறை ஊழியர்கள், ரயில்வே ஊழியர்கள் இணைந்து விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து