முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளி திறப்புக்கு முன்பாகவே பாட புத்தகங்கள் விநியோகிக்கப்படும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 20 மே 2025      தமிழகம்
School-Education 2022 02 11

Source: provided

சென்னை : பள்ளி திறப்புக்கு முன்பாகவே பாட புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த மாதம் 25-ந்தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பின் தமிழகத்தில் ஜூன் 2 -ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பள்ளி திறப்புக்கு முன்பாகவே பாட புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் பள்ளி திறப்புக்கு முன்பாகவே அனைத்து பாட புத்தகங்களும் விநியோகிக்கப்படும்.

விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பதற்கு முன் புத்தகங்கள் வழங்கப்படும். 2025-26-ம் கல்வியாண்டிற்கு தேவையான 99% புத்தகம் அச்சடிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் முழுமையாக வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து