எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடில்லி : டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக 200 ரன்கள் என்ற வெற்றி இலக்கை விரட்டிய குஜராத் டைட்டன்ஸ் 205/0 என்று விக்கெட் இழப்பின்றி வென்ற இரண்டாவது அணி என்ற சாதனையை நிகழ்த்தியது.
குஜராத் சாதனை...
டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் தனது பார்மின் உச்சத்தில் இருக்கும் கே.எல்.ராகுல் 65 பந்துகளில் 112 ரன்கள் விளாசிய இன்னிங்சை சாய் சுதர்சன் 61 பந்துகளில் 108 என்று பின்னுக்குத் தள்ளினார். கேப்டன் ஷுப்மன் கில் 53 பந்துகளில் 3 பவுண்டரி 7 சிக்சர்களுடன் 93 நாட் அவுட். 19 ஓவர்களில் 205 ரன்களுக்கு நோ லாஸ் என்று குஜராத் சாதனை வெற்றி பெற்றது. இந்த அபார வெற்றி குஜராத் டைட்டன்சின் முதலிடத்தை உறுதி செய்ததோடு, பஞ்சாப் கிங்ஸ், ஆர்.சி.பி. அணிகள் பிளே ஆப் சுற்றில் நுழைந்ததும் உறுதி செய்தது. பிளே ஆப் சுற்றின் 4-வது இடத்துக்காக டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதவிருக்கின்றன.
கட்டுப்படுத்திய டெல்லி...
சிக்கன பவுலர் டி.நடராஜனைப் பதம் பார்த்த சாய் சுதர்சன்: சாய் சுதர்சன் இறங்கியது முதலே சோர்வில்லாத அதிரடியைக் காட்டினார். அக்சர் படேலை பவுண்டரியுடன் தொடங்கிய சாய் சுதர்சன், டி.நடராஜன் வீசிய ஓவரில் 3 பவுண்டரிகள் ஒரு சிக்சர் என்று 20 ரன்களை ஒரே ஓவரில் விளாசினார். 3வது ஓவர் முடிவில் சாய் சுதர்சன் 13 பந்துகளில் 35 ரன்களை விளாசியிருந்தார். பிறகு துஷ்மந்த சமீரா, முஸ்தபிசுர் அருமையாக வீசி கட்டுப்படுத்தினர். இதனால் பவர் ப்ளே முடிவில் குஜராத் 59 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
சாய் சுதர்சன் சதம்...
சாய் சுதர்சன் தன் 50 ரன்களை 30 பந்துகளில் எட்ட ஷுப்மன் கில் 19 பந்துகளில் 21 என்று நிதானமாக ஆடிவந்தார்.. ஆனால் 8வது ஓவருக்குப் பிறகு ஷுப்மன் கில் 3 சிக்சர்களை விளாசி 33 பந்துகளில் அரைசதம் எட்டினார். துஷ்மந்த சமீராவை தன் முதல் பவுண்டரி அடித்த கில் அடுத்த பந்தையே எகிறும் சிக்சருக்குத் தூக்கினார். 15 ஓவர்களில் குஜராத் 154 ரன்களை எட்டியது, கடைசி முயற்சியாக அக்சர் படேல் முஸ்தபிசுர்ரை கொண்டு வந்தார். ஆனால் ஒன்றும் பயனில்லை 2 பவுண்டரிகளை சுதர்சன் விளாசினார். பிறகு குல்தீப் யாதவ்வை ஸ்ட்ரெய்ட் சிக்ஸ் அடித்துத் தன் 2வது ஐ.பி.எல். சதத்தை பூர்த்தி செய்தார். சுதர்சன்தான் இன்னொரு சிக்ஸ் மூலம் குஜராத் வெற்றியை உறுதி செய்தார்.
ராகுல் அரைசதம்...
முன்னதாக கே.எல்.ராகுல் டெல்லி மைதானத்தில் தன் அற்புதமான ஷாட்கள் மூலம் பல தீபங்களை ஏற்றினார். முதலில் சிராஜை அடித்த பேக் ஃபுட் கவர் ட்ரைவ் பிறகு ரபாடாவை ஒரே ஓவரில் 2 சிக்சர்கள் ஒரு பவுண்டரி என்று தடம் பதித்தார். ரஷீத் கான் ஓவரையும் விளாசிய ராகுல் அவரை பௌண்டரி அடித்து அரைசதம் பூர்த்தி செய்தார். 2-வது விக்கெட்டுக்காக ராகுல் பங்களிப்பில் 8 ஓவர்களில் 90 ரன்கள் சேர்க்கப்பட்டது. ஆனால் ராகுல் இன்னிங்சில் அதிர்ஷ்டமும் விளையாடியது, சாய் கிஷோரின் ஒரே ஓவரில் 2 வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் குஜராத் கோட்டை விட்டது. ராகுல் 65 பந்துகளில் 14 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 112 ரன்கள் விளாசினார்.
கூடுதல் ரன்கள்...
அபிஷேக் போரெல் 30, அக்சர் படேல் 25, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 21 என்று கடைசியில் அதிரடி காட்ட டெல்லி 199/3 என்று முடிந்தது. டெல்லி 37 டாட் பால்களை அனுமதித்தது இதனால் தான் ஸ்கோர் 199ல் தேங்கியது. 37 டாட்பால்கள் 25 டாட்பால்களாகக் குறைந்து 12 பந்துகளில் 20-25 ரன்கள் எடுத்திருந்தால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றிருக்கலாம்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 3 weeks ago |
-
பாக்., ஏவியது ஷாஹீன் ஏவுகணை: இந்திய ராணுவம் ஆய்வில் தகவல்
19 May 2025புதுடில்லி : ஷாஹீன் ஏவுகணை பாகிஸ்தான் ஏவியது இந்திய ராணுவம் ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
-
மீண்டும் 70 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை
19 May 2025சென்னை, சென்னையில் நேற்று (மே 19) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்ந்து ரூ.70,040க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.
-
'லெவன்' திரை விமர்சனம்
19 May 2025சென்னையில் மர்மமான முறையில் தொடர் கொலைகள் நடக்கிறது. இறந்தவர்கள் யார்?
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-05-2025
19 May 2025 -
கனமழை- புயலை எதிர்கொள்ள தயாராக இருக்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
19 May 2025சென்னை, அதிக கனமழை – புயலை ஆகியவற்றை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்றும் உதவி கேட்டு வரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்
-
குமரி கண்ணாடி பாலத்தை 1.25 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்
19 May 2025கன்னியாகுமரி : கன்னியாகுமரியில் கண்ணாடி பாலத்தை 11 நாட்களில் 1.25 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.
-
பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்: நைஜீரியாவில் 57 பேர் பலி
19 May 2025அபுஜா : நைஜீரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
வி.என்.ஜானகி தியாகங்கள் போற்றத்தக்கது: ஓ.பன்னீர்செல்வன் புகழாரம்
19 May 2025சென்னை, எம்.ஜி.ஆரின் மனைவியும் முன்னாள் முதலமைச்சருமான வி.என்.ஜானகியின் தியாகங்கள் போற்றத்தக்கது என்று ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார் இது குறித்து அ.த
-
இந்தியாவின் அரசமைப்பே உச்சபட்ச அதிகாரம் கொண்டது: தலைமை நீதிபதி
19 May 2025மும்பை : இந்தியாவின் அரசமைப்பே உச்சபட்ச அதிகாரம் கொண்டது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்துள்ளார்.
-
நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: வேகமாக நிரம்பும் ஓசூர் கெலவரப்பள்ளி அணை
19 May 2025ஓசூர் : தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து 904 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
ரூ.211.57 கோடியில் கோவை மத்திய சிறைச்சாலைக்கு புதிய கட்டடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
19 May 2025சென்னை, 457 கோடியே 14 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 1,118 காவலர் குடியிருப்புகள் மற்றும் 211 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கோயம்புத்தூர் மத்
-
கூகுள் குரோம் பயனர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
19 May 2025புதுடில்லி : விண்டோஸ் மற்றும் மேக் கம்யூட்டர்களில் கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களுக்கு மத்திய அரசின் கணினி அவசரநிலை கண்காணிப்புக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஜோ பைடன் விரைவில் குணமடைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்து
19 May 2025வாஷிங்டன் : ஜோ பைடனுக்கு புற்றுநோய் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது விரைவில் குணமடைய வேண்டும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
-
இந்த வாரம் வெளியாகும் ' ஏஸ் '
19 May 20257CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஆறுமுக குமார் எழுதி, தயாரித்து, இயக்கியுள்ள படம் ‘ஏஸ்' ( ACE).
-
ஆந்திரப்பிரதேசத்தில் சோகம்: கார் கதவுகள் மூடியதால் மூச்சு திணறி 4 குழந்தைகள் உயிரிழப்பு
19 May 2025அமராவதி : ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயநகரத்தில் கார் கதவுகள் மூடியதால் மூச்சுத் திணறி 4 குழந்தைகள் உயிரிழந்தனர்.
-
மே 29-ல் சிக்கிம் செல்கிறார் பிரதமர் மோடி?
19 May 2025ஷில்லாங் : சிக்கிம் மாநில அந்தஸ்து பெற்றதன் 50வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மே 29 அன்று சிக்கிம் செல்ல வாய்ப்புள்ளதாக முதல்வர் பி
-
தமிழ்நாட்டில் கொலை வழக்குகள் குறைந்துள்ளன: டி.ஜி.பி. அறிக்கை
19 May 2025சென்னை : தமிழ்நாட்டில் கொலை வழக்குகள் குறைந்துள்ளதாக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
-
அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி காப்பீட்டு சலுகை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் வங்கிகள் ஒப்பந்தம்
19 May 2025சென்னை, முதல்வர். மு.க.
-
ஜோரா கைய தட்டுங்க திரை விமர்சனம்
19 May 2025மேஜிக் கலைஞரின் மகனான யோகி பாபு, தந்தை இறப்புக்குப் பிறகு மேஜிக் கலைஞராகி விடுகிறார். ஆனால், அவரது மேஜிக் பிடிக்காமல் மக்கள் விமர்சிக்கிறார்கள்.
-
'படைத்தலைவன்' இசை வெளியீடு
19 May 2025இயக்குநர் யு அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்தின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், “படை தலைவன்”. இப்படம் வரும் மே 23 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
-
டிடி நெக்ஸ்ட் லெவல் திரை விமர்சனம்
19 May 2025யூடியுப் மூலம் திரைப்படங்களை விமர்சனம் செய்யும் சந்தானத்திற்கு ஒரு திரைப்படத்தின் சிறப்பு திறையிடல் நிகழ்ச்சிக்கான அழைப்பு வருகிறது.
-
கோவை, நீலகிரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
19 May 2025சென்னை, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வரும் 22ம் தேதி காற்றழுத்த தாழ்வு உருவாகிறது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
’மாமன்’ திரை விமர்சனம்
19 May 2025சூரி, தனது அக்கா சுவாஷிகா மீது அன்பாக இருக்கிறார். திருமணமாகி 10 வருடங்களுக்குப் பிறகு அவரது அக்காவுக்கு குழந்தை பிறக்கிறது.
-
சர்வதேச பிரச்சாரம்: அனைத்துக் கட்சி குழுவிலிருந்து திரிணமூல் விலகல்
19 May 2025புதுடெல்லி, பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்காக பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் பல கட்சிக் குழுவில் இருந்து விலகுவதாக திரிணமூல் கா
-
வணிகவரித்துறைக்கு 23 புதிய வாகனங்கள் அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
19 May 2025சென்னை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத்துறை வளாகக் கூட்டரங்கில் 2025-ஆம் ஆண்டு ஏப்ரல்