எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
27 வயதாகும் ரிங்கு சிங் ஐ.பி.எல். தொடரில் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து புகழ்பெற்றார். பின்னர், இந்திய அணிக்கும் தேர்வானார். சமீபத்தில், சமாஜவாதி கட்சியின் இளம் மக்களவை உறுப்பினரான பிரியா சரோஜாவுக்கும் இவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்தமாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. பின்னர், கிரிக்கெட் தேதிகளால் அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெறுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், உ.பி. அரசாங்கள் ரிங்கு சிங்கை கௌரவிக்கும் பொருட்டு 2022 விதியின்படி அவரை மாவட்ட கல்வி அதிகாரியாக நியமித்துள்ளதாகக் கூறப்படுகிறது. எதிர்க்கட்சி மக்களவை உறுப்பினரை திருமணம் செய்தாலும் பா.ஜ.க. அரசு அவருக்கு பதவி வழங்குவது பாராட்டைப் பெற்று வருகிறது. ரிங்கு சிங் 9-ஆவது வகுப்பின் பாதியிலேயே பள்ளிப் படிப்பை கைவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் பதவிக்காக சிலர் அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? என ரிங்குவை விமர்சித்தும் வருகிறார்கள். சிலர், அவரது கடின உழைப்புக்குக் கிடைத்த வென்றும் கூறி வருகிறார்கள்.
ரிஷப் பண்டுக்கு புகழாரம்
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 20-ந் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த டெஸ்டில் ரிஷப் பண்டின் ஆட்டத்தை குறித்து பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
அந்த வகையில் ரிஷப் பண்டின் ஆட்டத்தை விட சிறந்த, ஜாலியான ஆட்டத்தை நான் பார்த்ததில்லை என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பிராட் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- ரிஷப் பண்டின் ஆட்டத்தை விட சிறந்த, ஜாலியான ஆட்டத்தை நான் பார்த்ததில்லை. அவர் செய்வதெல்லாம் உங்களை கவர்ந்து இழுக்கும். சிலர் களத்திற்குள் வருகிறார்கள் என தெரிந்தால், நாம் டிவியை ஆன் செய்து அங்கேயே அமர்ந்து விடுமோ அவர்களுள் இவரும் ஒருவர். என ஸ்டூவர்ட் பிராட் கூறினார்.
ஜோ ரூட் புதிய சாதனை
ஜோ ரூட் (34 வயது) 2012 முதல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். இதுவரை, 154 போட்டிகளில் விளையாடி 13, 087 ரன்கள் குவித்துள்ளார். சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 28, 53* ரன்கள் எடுத்து அசத்தினார். இத்துடன் டெஸ்ட்டில் 66 அரைசதங்களை நிறைவு செய்து 2-ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். முதலிடத்தில் இந்தியாவைச் சேர்ந்த சச்சின் டெண்டுல்கர் 68 அரைசதங்களுடன் இருக்கிறார்.
குறைவான போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியிருக்கும் ஜோ ரூட் விரைவிலேயே சச்சினின் இந்த சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட்டில் அதிக அரைசதங்கள் அடித்தவர்கள் சச்சின் டெண்டுல்கர் - 68, ஜோ ரூட் - 66, ஷிவ்நரைன் சந்திரபால் - 66, ஆலன் பார்டர் - 63, ராகுல் திராவிட் - 63, ரிக்கி பாண்டிங் - 62, ஜாக் காலிஸ் - 58, அலைஸ்டர் குக் - 57, விவிஎஸ் லக்ஷ்மணன் - 56, குமார் சங்ககாரா - 52
இன்டர் மிலன் அணி வெற்றி
கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறும்.
இந்த நிலையில், இந்திய நேரப்படி நேற்று 'இ' பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் இன்டர் மிலன் (இத்தாலி ) - ரிவர் பிளேட் (அர்ஜென்டினா) அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இன்டர் மிலன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
சதமடித்த பதும் நிசாங்கா
பதும் நிசாங்கா (27 வயது) கடந்த 2021 முதல் இலங்கை அணியில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். 18 டெஸ்ட் போட்டிகளில் 1,247 ரன்களை குவித்துள்ளார். டெஸ்ட்டில் 7 அரைசதங்கள், 4 சதங்கள் அடித்து அசத்தியுள்ளார். இலங்கை மண்ணில் 2-ஆவது முறையாக சதம் அடித்துள்ளார். வங்கதேசம் அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் 247-க்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 203/1 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் பதும் நிசாங்கா 101, தினேஷ் சண்டிமால் 59 ரன்களும் எடுத்து விளையாடி வருகிறார்கள். டெஸ்ட்டில் மொத்தம் 4-ஆவது சதத்தை நிறைவு செய்துள்ள பதும் நிசாங்கா சொந்த மண்ணில் அடித்த 2-ஆவது சதமாகும். இந்த இரண்டுமே வங்கதேசத்துக்கு எதிராக அடித்துள்ளார்.
180 ரன்னுக்கு சுருண்ட ஆஸி.,
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 5 இருபது ஓவர் போட்டிகளில் ஆடுகிறது. இதன்படி ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிட்ஜ்டவுனில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீசின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து முதல் இன்னிங்சில் 180 ரங்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக டிராவில் ஹெட் 59 ரன்களும் கவாஜா 47 ரன்களும் அடித்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டுகளும் ஷமர் ஜோசப் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதல் நாள் முடியவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் அடித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 4 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-06-2025.
26 Jun 2025 -
3-வது நாளாக வெள்ளப்பெருக்கு: குற்றாலத்தில் குளிக்க தடை
26 Jun 2025தென்காசி: குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால், 3-வது நாளாக நேற்று சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
தர்மபுரியில் திடீர் பரபரப்பு: தாழ்வான உயரத்தில் பறந்த விமானப்படை விமானங்கள்
26 Jun 2025தர்மபுரி, தர்மபுரியில் தாழ்வான உயரத்தில் விமானப்படை விமானங்கள் பறந்தது.
-
கட்சி பொறுப்புகளை ராஜினாமா செய்த குஜராத் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.
26 Jun 2025குஜராத்: குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற விசவதார் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்ற நிலையில், அக்கட்சியின் மற்றொரு எம்.எல்.ஏ.-வான உமேஷ் மக்வானா, தனது கட்சி பொறுப
-
கலைஞர் பாணியை கையில் எடுத்த ராமதாஸ்: மூச்சிருக்கும் வரை தானே தலைவர் என்கிறார்
26 Jun 2025விழுப்புரம், கலைஞர் பாணியில் தான் தலைவராக இருப்பேன். ஸ்டாலின் போன்று அன்புமணி ராமதாஸ் இருக்க வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
காவிரியில் 31. 24 டி.எம்.சி. நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு
26 Jun 2025புதுடெல்லி, தமிழகத்திற்கு ஜூலை மாதம் வழங்க வேண்டிய 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா வழங்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டது.
-
ரேஷன் பொருட்கள் வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
26 Jun 2025சென்னை, ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யும் பொருட்களை கடைகளில் வைத்து எடை போட்டு விற்பனை முனைய கருவியில் பதிவு செய்ய உத்தரவிட கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க
-
மூதாட்டி கொலை வழக்கு: அ.தி.மு.க. நிர்வாகியை கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவு
26 Jun 2025சென்னை, கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
26 Jun 2025நாகப்பட்டினம், நாகை மீனர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் மீன்பிடி சாதணங்கள் சேதம் அடைந்தன.
-
அ.தி.மு.க. நிர்வாகி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை: இ.பி.எஸ். வலியுறுத்தல்
26 Jun 2025சென்னை, அ.தி.மு.க. நிர்வாகி கொலை வழக்கில் தொடர்புள்ளவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து தரவுகளை மீட்கும் பணி தீவிரம்
26 Jun 2025புதுடெல்லி, அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டிகளிலிருந்து தரவுகள் எடுக்கப்பட்டு வருவதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவ
-
சிறுவன் கடத்தல் விவகாரம்: பூவை ஜெகன்மூர்த்தி மீது சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு
26 Jun 2025சென்னை, இளைஞரை கடத்தியதாக எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தி, கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமன் மீது சி.பி.சி.ஐ.டி.
-
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்த டிராகன் விண்கலம்
26 Jun 2025வாஷிங்டன், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்தது டிராகன் விண்கலம்.
-
தெலுங்கானாவில் பரபரப்பு: தண்டவாளத்தில் காரை ஓட்டிய இளம் பெண்..!
26 Jun 2025ஐதராபாத், ரயில் பாதையில் காரை ஓட்டிய இளம்பெண்ணால், பெங்களூரு மற்றும் ஐதராபாத் இடையே ரயில் சேவையில் தற்காலிக பாதிப்பு ஏற்பட்டது
-
இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன்: மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
26 Jun 2025டெல்லி, இந்திய மொழிகளுக்கும் நண்பன் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
இலங்கை தூதரக அதிகாரிகளை சந்திக்க அனுமதி கோரி கைதி மனு சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு
26 Jun 2025சென்னை: இலங்கை தூதரக அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்யக்கோரி அந்நாட்டு கைதி தாக்கல் செய்த மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட
-
'ஆபரேஷன் சிந்து' மூலம் மேலும் 272 இந்தியர்கள் ஈரானில் இருந்து மீட்பு
26 Jun 2025புதுடெல்லி, ஈரானின் மஷாத் நகரில் இருந்து டெல்லிக்கு 272 இந்தியர்கள் மற்றும் 3 நேபாள நாட்டினர் கொண்ட சிறப்பு விமானம் வந்திறங்கியது.
-
வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தை சிக்கியது
26 Jun 2025கோவை: வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தையை வனததுறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.
-
நடிகர் கிருஷ்ணா கைது ஏன்..? சென்னை காவல்துறை விளக்கம்
26 Jun 2025சென்னை, நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டது தொடர்பாக சென்னை பெருநகர் காவல்துறை விளக்கமளித்துள்ளது.
-
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டறிக்கை: இந்தியா கையெழுத்திட மறுப்பு
26 Jun 2025குயிங்டாவோ, பஹல்காம் தாக்குதல் குறித்த கண்டன அறிக்கை இல்லாததால் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிய
-
அரசியலமைப்பு தான் உயர்ந்தது: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
26 Jun 2025மும்பை: '' ஜனநாயகத்தில் அரசியலமைப்பு தான் உயர்ந்தது,'' என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பிஆர் கவாய் கூறியுள்ளார்.
-
வக்கீல்களுக்கு போலீஸ் சம்மன்: சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
26 Jun 2025புதுடெல்லி, வக்கீலுக்கு நேரடியாக சம்மன் அனுப்ப போலீசை அனுமதிப்பது, வக்கீல் தொழிலின் தன்னாட்சியை சிறுமைப்படுத்தி விடும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் 21 பேர் உயிரிழப்பு
26 Jun 2025காசா: காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வான்வழித் தாக்குதல்களில் 21 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
-
அ.தி.மு.க.வை விழுங்குவது தான் பா.ஜ.க.வின் திட்டம்: திருமாவளவன்
26 Jun 2025சென்னை, அ.தி.மு.க.வை விழுங்குவது தான் பா.ஜ.க.வின் திட்டம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
இந்தியர்கள் என் இதயத்தில் உள்ளனர்: விண்கலத்தில் இருந்து சுபான்சு சுக்லா பேச்சு
26 Jun 2025புதுடில்லி, ஒவ்வொரு இந்தியரும் தன் இதயத்தில் இருப்பதாக சுபான்ஷு சுக்லா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.