எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஊட்டி, ஏப்.15 - `தாளிக்க' வெங்காயம் கொடுக்காத அரசு முந்தைய தி.மு.க.,அரசு, ஆனால் `தாலிக்கு' இலவசமாக தங்கம் வழங்குவது அ.தி.மு.க.,அரசு என செய்தி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சிறப்பு திட்டத்தின் கீழ் இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்காந்த அடுப்பு மற்றும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா ஊட்டியில் நேற்று நடைபெற்றது. அண்ணா கலைஅரங்கில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர் புத்தி சந்திரன் முன்னிலை வகித்து பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செய்தி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி பயனாளிகளுக்கு மிக்சி, கிரைண்டர், மின்காந்த அடுப்பு மற்றும் மடிக்கணினி வழங்கி பேசியதாவது:
தமிழகத்தின் 3-வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா ஏழை, எளிய பட்டாளி மக்கள் பயன்பெற வேண்டுமென்ற நோக்கில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறார்.
கடந்த தி.மு.க.,ஆட்சியில் ஏற்பட்ட நிர்வாக சீர்கேட்டை சரிசெய்து, ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் முதன்முதலாக 7 திட்டங்களுக்கு கையெழுத்திட்டார். இல்லத்தரசிகளுக்கு வழங்கப்படும் விலையில்லா மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டத்தில் வெயில் அடிக்கும் சமவெளிப்பகுதி மக்களுக்கு மின் விசிறியும், குளிர் பிரதேச மக்களுக்கு மின்காந்த அடுப்பும் வழங்கியுள்ளார்.
மின்விசிறியை விட மின்காந்த அடுப்பின் விலை அதிகம்தான். இருந்தாலும் நீலகிரி மக்கள் கோரிக்கை வைத்ததற்கிணங்க இல்லை என்று கூறாமல் மின்காந்த அடுப்பு வழங்க உத்தரவிட்டார்.
நீலகிரி மக்கள் அதிர்ஷ்டசாலிகள். இங்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்காந்த அடுப்பு பெறவந்துள்ள தூனேரி கிராம மக்களின் முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது. ஏனெனில் முந்தைய காலத்தில் இட்லிக்கு மாவு அரைக்க வேண்டுமானால் பக்கத்து வீட்டிற்குச் சென்று தான் அரைக்க வேண்டும். அந்த நிலையை மாற்றி இல்லத்தரசிகள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக சிறப்பு திட்டங்களை தீட்டி அதன் மூலம் அவரவர் வீட்டிலேயே இட்லிக்கு மாவு அரைக்க கிரைண்டர், சட்னி அரைக்க மிக்ஸி, அதனை சுட்டெடுக்க மின்காந்த அடுப்பு ஆகியவற்றை வழங்கியுள்ளார்.
கருணாநிதி ஆட்சியில் மாணவர்களுக்கு ஒரு பென்சில் கூட வாங்கித்தரவில்லை. அவரது மகன் அழகிரிக்கும், ஸ்டாலினிக்கு மட்டுமே கருணாநிதி வாங்கித்தந்துள்ளார். ஆனால் தாயுள்ளம் கொண்ட முதல்வர் ஜெயலலிதா பணக்காரன் வீட்டு பிள்ளைகள் மட்டுமே பயன்படுத்தி வந்த மடிக்கணினியை ஏழை மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் விலையில்லா மடிக்கணினியை வழங்கியுள்ளார். மாடிவீட்டு மாணவர்கள் மட்டுமே பயன்படுத்திய மடிக்கணினி, இன்று ஓட்டு வீட்டு மாணவர்களும் பயன்படுத்தி உலகத்தையை வேப்பமரத்திடியில் நின்று காணுகின்றனர். இத்திட்டமானது ஏழை மாணவர்களும் உயர்ந்த கல்வி பெறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும்.
காசு கொடுத்தாலும் `தாளிக்க' வெங்காயம் கொடுக்காத அரசு முந்தைய தி.மு.க.,அரசு. ஆனால் இன்று தாய்மார்களின் குழந்தைகளுக்கு திருமணத்திற்கு `தாலிக்கு' தங்கத்துடன் ரூ.25 ஆயிரம், படித்த குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வழங்குவது அ.தி.மு.க.,அரசு.
தமிழக முதல்வர் திறம்பட செயல்படுவதை பார்த்து டெல்லி தலைவர்கள் எல்லாம் இந்திய திருநாட்டை ஆட்சி செய்ய வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளனர். ஜெயலலிதா பிரதமரானால் தான் நாட்டில் முல்லைப்பெரியாறு, காவேரி, கார்கில் போன்ற பிரச்சனைகள் தீரும். நமது தமிழகத்தில் நேர்மையான, தைரியமான முதல்வரை பெற்றுள்ளோம். தமிழக முதல்வர் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களையும் பெற்று பயனடைய வேண்டும். மாணவர்கள் தங்களது கல்வித்தரத்தை உயர்த்திக் கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து தூனேரி கிராமத்தைச் சேர்ந்த 329 இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்காந்த அடுப்பு மற்றும் 240 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி ஆகியவற்றை வழங்கினார்.
விழாவில் வேளாண்பல்கலைக்கழக நிர்வாக்குழு உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூணன், முன்னாள் அமைச்சர் அ.மில்லர், மாவட்ட ஊராட்சி தலைவர் மேனகா, ஊட்டி நகர்மன்ற தலைவர் சத்தியபாமா ஆகியோர் தமிழக முதல்வரின் சிறப்பு திட்டங்கள் குறித்து பேசினர்.
விழாவிற்கு சிறப்பு செயலாக்கத்திட்ட துணை கலெக்டர் மனோகரன் வரவேற்று பேசினார். முடிவில் குன்னூர் கோட்டாட்சியர் காந்திமதி நன்றி கூறினார். மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மல்ராஜ், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சாந்தி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பலராமன், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் மோகன், தூனேரி ஊராட்சி தலைவர் மகேஷ் மற்றும் அ.தி.மு.க.,நிர்வாகிகள், பயனாளிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 16 hours ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை3 days 18 hours ago |
ஆனியன்ப்ரை6 days 17 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 3 days ago |
-
தேர்தல் நன்கொடை நிதி பத்திர விவகாரம்: சிறப்பு விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
14 May 2024புதுடெல்லி : தேர்தல் நன்கொடை நிதிப் பத்திர விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக் கோரி நேற்று மனு அளிக்கப்பட்டுள்ளது.
-
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு மற்றொரு டாக்டர் பட்டம்
14 May 2024வேலூர் : வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் மாநில பல்கலைக்கழகம் (பிங்ஹாம்டன் பல்கலைக்கழகம்)
-
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் 91.17 சதவீதம் : கோவை மாவட்டம் முதலிடம்
14 May 2024சென்னை : தமிழகத்தில் பிளஸ் -1 தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் தமிழகத்தில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.
-
மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமல்
14 May 2024சென்னை : சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமலுக்கு வரவுள்ளது.
-
தயாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி ஆஜர் : விசாரணை ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
14 May 2024சென்னை : தயாநிதி மாறன் தொடர்ந்து அவதூறு வழக்கில் சென்னை எழும்பூர் கோர்ட்டில் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் ஆஜரானார்.
-
நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது..
-
அரசு மருத்துவமனையில் செலுத்தும் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்
14 May 2024சென்னை : மஞ்சள் காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் செலுத்தும் தடுப்பூசிக்கான சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.&nb
-
அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
14 May 2024சென்னை : அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
மும்பையில் விளம்பர பதாகை விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
14 May 2024மும்பை : மும்பையில் விளம்பர பதாகை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
-
பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்? - என்.ஐ.ஏ. தீவிர விசாரணை
14 May 2024சென்னை : பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
சிங்கப்பூரில் சட்டத்துறை துணை அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த முரளி பிள்ளை நியமனம்
14 May 2024சிங்கப்பூர் : சிங்கப்பூரில் சட்டம் மற்றும் போக்குவரத்து துறை துணை அமைச்சராக இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரான முரளி பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்.
-
நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
14 May 2024சென்னை : நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
நடப்பு கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 17-க்குள் விண்ணப்பிக்கலாம் : பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
14 May 2024சென்னை : நடப்பு கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கு மே 71 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
-
சுவாதி மாலிவால் விவகாரம்: டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
14 May 2024புதுடெல்லி : டெல்லி மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ஆம் ஆத்மி எம்.பி.
-
உலகக்கோப்பை தொடருக்கு பிறகு டி-20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார் கேப்டன் ரோகித்?
14 May 2024மும்பை : 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
தமிழ்நாட்டில் திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
14 May 2024சென்னை : தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு கன மழை வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குமரி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-05-2024.
14 May 2024 -
வார விடுமுறை நாட்கள்: சிறப்பு பஸ்கள் இயக்கம்
14 May 2024சென்னை : முகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாள்களை முன்னிட்டு மே 17-ம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
-
சிவப்பு நிற உதட்டுச்சாயம் பூசும் பெண்களுக்கு அபராதம்: அதிபர் கிம்
14 May 2024பியாங்கியாங் : தங்கள் நாட்டு பெண்கள் சிவப்பு நிற உதட்டு சாயத்தை பூசிக்கொள்ள கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ள வடகொரிய அரசு இந்த தடையை மீறினால் கடும் நடவடிக்கை எ
-
காங்கிரஸ் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜ் நியமனம்
14 May 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜை நியமனம் செய்து அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
நேபாள துணை பிரதமர் உபேந்திர யாதவ் ராஜினாமா
14 May 2024காத்மண்டு : நேபாளத்தில், நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி.-என்.) தலைவரும், துணை பிரதமருமான உபேந்திர யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
-
கோழிக்கோட்டில் மோசமான வானிலை: துபாய் விமானங்கள் கோவைக்கு திருப்பி விடப்பட்டன
14 May 2024கோழிக்கோடு : கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மோசமான வானிலை நிலவியதால், துபாயிலிருந்து வந்து இரண்டு விமானங்கள் கோவை விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன.
-
தேர்தலில் போட்டியிட தடைகோரி மனு: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு : சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடரும் போராட்டம்: பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி
14 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடரும் போராட்டத்தின் விளைவாக பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
சவுக்கு சங்கருக்கு மே 28-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
14 May 2024கோவை : பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மே 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.