எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜூலை.6 - தர்மபுரி காதல் மனமகன் இளவரசன் மரணத்தை அடுத்து அவர் காதலித்த திவ்யாவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் விரும்பினால் மனநல மருத்துவர் முலம் அவருக்கு கவுன்சிலிங் அளிக்கலாம் என்றும் ஐகோர்ட் வெவ்வேறு வழக்குகளில் உத்தரவிட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன், செல்லன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த திவ்யா இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது.
இவ்வளவு பிரச்சினைகளுக்கும் மத்தியில் பல மாதங்கள் சேர்ந்து வாழ்ந்த நிலையில், திவ்யா தனது கணவனுடன் சேர்ந்து வாழப்போவதில்லை என்று கூறினார். அவர் இவ்வாறு கூறிய மறுநாளே இளவரசன் இறந்துவிட்டார். திவ்யா தன்னுடன் வாழ மறுத்ததால் மனமுடைந்து இளவரசன் ரெயில் முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தர்மபுரி இளவசரன் மரணமடைந்ததை அடுத்து சென்னை ஐகோர்ட்டில் பல தரப்பு வழக்கறிஞர்கள் வெவ்வேறு பெஞ்ச் முன் மனு தாக்கல் செய்தனர். இதில் ஒரு மனுவை ஐகோர்ட்டு மூத்த வக்கீல் வைகை நேற்று தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஸ்குமார் அகர்வால், நீதிபதி சத்திய நாராயணன் ஆகியோர் முன்பு ஆஜராகி கூறியதாவது:-
தர்மபுரியில் வாலிபர் இளவரசனும், திவ்யாவும் காதல் திருமணம் செய்ததை தொடர்ந்து நடந்த பல்வேறு சம்பவங்கள் குறித்து தமிழக போலீஸ் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. போலீசார் இந்த விவகாரத்தை சரியாக கையாளவில்லை. எனவேதான் ஒரு இளம் வாலிபர் உயிர் பறிபோய் உள்ளது.
இளம்பெண் திவ்யாவும் பாதுகாப்பற்ற சூழ்நிலையிலேயே இருக்கிறார். எனவே இந்த சம்பவங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதுதொடர்பாக பொதுநல வழக்கு தொடர அனுமதியளிக்க வேண்டும் என்றார்.
இதுபற்றி நீதிபதிகள் கூறும்போது, இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணையில் இருக்கிறது. எனவே உங்கள் கோரிக்கைகளை அங்கு வையுங்கள் என்றனர்.
இதை தொடர்ந்து வக்கீல் வைகை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தரேஷ் ஆகியோர் முன்பு ஆஜரானார். அப்போது அவர் கூறியதாவது:-
வாலிபர் இளவரசன் இறந்த பிறகு பல மாவட்டங்களில் பதட்டமான சுழ்ைநிலை நிலவுகிறது. தமிழக போலீசார் சரியான நட வடிக்கை எடுக்காததால் உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டுள்ளது. இளவரசன் தற்கொலையில் இப்போது மேலும் பல பிரச்சினைகள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தர்மபுரி கலவரம் முதல் நடந்த ஒட்டு மொத்த சம்பவங்களுக்கும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். திவ்யாவுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். இளவரசன் இறுதிச் சடங்கில் திவ்யா கலந்துகொள்ள விரும்பினால் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார்.
அதை கேட்ட நீதிபதிகள் தனியாக மனுதாக்கல் செய்யுங்கள். நேறறு பிற்பகலில் விசாரணைக்கு எடுத்து கொள்கிறோம் என்றனர்.
இதன் பின் இம்மனு பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது அப்போது நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தரேஷ் ஆகியோர் இந்த மனு மீது திங்கட்கிழமை அன்று விரிவாக விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கின்றனர்.
மேலும் நீதிபதிகள் கூறுகையில் இளவசரன் மரணத்தால் பாதிக்கப்பட்ட திவ்யாவுக்கு அவர் விரும்பினால் மனநல மருத்துவர், மற்றும் அரசு அதிகாரி முன் கவுன்சிலிங் அளிக்கலாம். அவர் விரும்பவில்லை என்றால் அது தேவையில்லை என்றும் இது குறித்து அவரிடம் அரசு அதிகாரிகள் கலந்து பேசி உரிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
திவ்யாவுக்கு பாதுகாப்பு:
இளவரசன் மரணத்தை தொடர்ந்து தர்மபுரியில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இளவரசன் இறந்ததையடுத்து, திவ்யாவுக்கு அச்சுறுத்தல் இருக்கலாம் என்பதால், அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் மில்டன் மனுத் தாக்கல் செய்தார். அவரது மனுவை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்து, திவ்யாவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
சர்வதேச அளவில் ஒரே நாளில் தங்கம் -வெள்ளி விலை வீழ்ச்சி
22 Oct 2025மும்பை : தங்கம் விலை நேற்று ஒரே நாளில் 6.3% சரிந்தது. இதேபோல் ஏற்கெனவே சரிந்து கொண்டிருக்கும் வெள்ளி விலையும் நேற்று 8.7% சரிவை சந்தித்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-10-2025.
22 Oct 2025 -
ஒரே நாளில் 3 ஆயிரத்துக்கு மேல் சரிந்த தங்கம் விலை
22 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலை கிராமுக்கு 300 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,700-க்கும் சவரனுக்கு 2400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.93,600-க்கும் விற்பனையான ந
-
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள புயல் சின்னம் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக கரையை கடக்கும் 5 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
22 Oct 2025சென்னை, வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெறாது என்றும் இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே வடதமிழ்நாடு – புத
-
காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று புயலாக மாற வாய்ப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம் தகவல்
22 Oct 2025சென்னை, காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புயலாகவோ, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ மாற வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பம்பையில் இருந்து இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஜனாதிபதி முர்மு சாமி தரிசனம்
22 Oct 2025திருவனந்தபுரம், 4 நாட்கள் சுற்றுப்பயணமாக கேரளா வந்துள்ள ஜனாதிபதி திரெளபதி முர்மு பம்பையில் இருந்து இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
-
தங்க நகைகளை வீட்டில் எவ்வளவு வைக்கலாம்..? வெளியானது புதிய தகவல்கள்
22 Oct 2025புதுடெல்லி, வீட்டில் எவ்வளவு தங்க நகைகள் வைத்திருக்கலாம் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது.
-
சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட 1.47 லட்சம் பேருக்கு காலை உணவு
22 Oct 2025சென்னை : சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட 1.47 லட்சம் பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது.
-
அடையாறு, கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் திறப்பு
22 Oct 2025சென்னை : அடையாறு கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்து இந்திய அணி ஒருநாள் தொடரை சமன் செய்யுமா? - அடிலெய்டில் இன்று 2-வது போட்டியில் மோதல்
22 Oct 2025அடிலெய்டு : ஆஸி.,க்கு பதிலடி கொடுத்து இந்திய அணி ஒருநாள் தொடரை சமன் செய்யுமா?
-
ஜனாதிபதி திரெளபதி முர்மு பயணித்த ஹெலிகாப்டர் சக்கரங்கள் கான்கிரீட் தளத்தில் சிக்கியதால் திடீர் பரபரப்பு
22 Oct 2025பத்தனம்திட்டா : ஜனாதிபதி பயணித்த ஹெலிகாப்டரின் சக்கரங்கள் கான்கிரீட் தளத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
22 Oct 2025சென்னை : வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கரூர் கூட்டநெரிசல் சம்பவம்: சி.பி.ஐ. விசாரணைக்கு உதவ ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனம்
22 Oct 2025கரூர் : கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உதவ 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
22 Oct 2025தர்மபுரி : ஒகேனக்கல் அருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
திருவாரூரில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை நேரில் ஆய்வு செய்த இ.பி.எஸ்
22 Oct 2025திருவாரூர், திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதித்த நெற்பயிர்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
-
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு: அனைத்து மாவட்டங்களிலும் எச்சரிக்கையாக இருக்கிறோம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
22 Oct 2025சென்னை, பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் தயார் நிலையில் உள்ளனர் என்று தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி, அனைத்து மாவட்டங்கள
-
குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு
22 Oct 2025சென்னை : டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது.
-
கடலூரில் வீடு இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் பலி: அமைச்சர் ஆறுதல்
22 Oct 2025கடலூர் : கடலூர் அடுத்த ஆண்டார் முள்ளி பள்ளத்தை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி அசோதை. இவர்களது மகள் ஜெயா.
-
நெல் மூட்டைகள் தேங்க மத்திய அரசே காரணம்: அமைச்சர் சக்கரபாணி விளக்கம்
22 Oct 2025தஞ்சாவூர், விவசாயிகளிடம் பெறப்பட்ட நெல்லில், அரிசி அரவையின் போது கலக்கப்பட வேண்டிய செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு அனுமதி அளிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் தான் நெல்
-
புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு
22 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழையால் புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரித்துள்ளது.
-
சோனி, எக்கோ ரெக்கார்டிங் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா ஐகோர்ட்டில் மனு
22 Oct 2025சென்னை : சோனி மியூசிக் நிறுவனம், எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் பிரபல இசையமைப்பாள
-
லோக்பால் உறுப்பினர்களுக்கு ரூ. 5 கோடியில் சொகுசு கார்கள் வாங்க டெண்டர்
22 Oct 2025மும்பை : ஊழலை ஒழிக்கும் லோக்பால் உறுப்பினர்களுக்கு சொகுசு கார் வாங்கி கொடுப்பதா என சரத்பவார் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
-
போர்க்கால அடிப்படையில் நெல் கொள்முதல் செய்ய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
22 Oct 2025தஞ்சாவூர் : போர்க்கால அடிப்படையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
-
பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் 2-வது நாளாக ஆய்வு
22 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று 2-வது நாளாக அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
-
உங்களது உழைப்பு ஆச்சரியப்படுத்துகிறது: மாரி செல்வராஜை பாராட்டிய ரஜினி
22 Oct 2025சென்னை : உங்களது உழைப்பும், ஆளுமையும் ஆச்சரியப்படுத்துகிறது என ரஜினி தெரிவித்ததாக மாரி செல்வராஜ் குறிப்பிட்டுள்ளார்.