எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.6 - தர்மபுரி காதல் மனமகன் இளவரசன் மரணத்தை அடுத்து அவர் காதலித்த திவ்யாவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் விரும்பினால் மனநல மருத்துவர் முலம் அவருக்கு கவுன்சிலிங் அளிக்கலாம் என்றும் ஐகோர்ட் வெவ்வேறு வழக்குகளில் உத்தரவிட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன், செல்லன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த திவ்யா இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது.
இவ்வளவு பிரச்சினைகளுக்கும் மத்தியில் பல மாதங்கள் சேர்ந்து வாழ்ந்த நிலையில், திவ்யா தனது கணவனுடன் சேர்ந்து வாழப்போவதில்லை என்று கூறினார். அவர் இவ்வாறு கூறிய மறுநாளே இளவரசன் இறந்துவிட்டார். திவ்யா தன்னுடன் வாழ மறுத்ததால் மனமுடைந்து இளவரசன் ரெயில் முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தர்மபுரி இளவசரன் மரணமடைந்ததை அடுத்து சென்னை ஐகோர்ட்டில் பல தரப்பு வழக்கறிஞர்கள் வெவ்வேறு பெஞ்ச் முன் மனு தாக்கல் செய்தனர். இதில் ஒரு மனுவை ஐகோர்ட்டு மூத்த வக்கீல் வைகை நேற்று தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஸ்குமார் அகர்வால், நீதிபதி சத்திய நாராயணன் ஆகியோர் முன்பு ஆஜராகி கூறியதாவது:-
தர்மபுரியில் வாலிபர் இளவரசனும், திவ்யாவும் காதல் திருமணம் செய்ததை தொடர்ந்து நடந்த பல்வேறு சம்பவங்கள் குறித்து தமிழக போலீஸ் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. போலீசார் இந்த விவகாரத்தை சரியாக கையாளவில்லை. எனவேதான் ஒரு இளம் வாலிபர் உயிர் பறிபோய் உள்ளது.
இளம்பெண் திவ்யாவும் பாதுகாப்பற்ற சூழ்நிலையிலேயே இருக்கிறார். எனவே இந்த சம்பவங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதுதொடர்பாக பொதுநல வழக்கு தொடர அனுமதியளிக்க வேண்டும் என்றார்.
இதுபற்றி நீதிபதிகள் கூறும்போது, இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணையில் இருக்கிறது. எனவே உங்கள் கோரிக்கைகளை அங்கு வையுங்கள் என்றனர்.
இதை தொடர்ந்து வக்கீல் வைகை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தரேஷ் ஆகியோர் முன்பு ஆஜரானார். அப்போது அவர் கூறியதாவது:-
வாலிபர் இளவரசன் இறந்த பிறகு பல மாவட்டங்களில் பதட்டமான சுழ்ைநிலை நிலவுகிறது. தமிழக போலீசார் சரியான நட வடிக்கை எடுக்காததால் உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டுள்ளது. இளவரசன் தற்கொலையில் இப்போது மேலும் பல பிரச்சினைகள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தர்மபுரி கலவரம் முதல் நடந்த ஒட்டு மொத்த சம்பவங்களுக்கும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். திவ்யாவுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். இளவரசன் இறுதிச் சடங்கில் திவ்யா கலந்துகொள்ள விரும்பினால் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார்.
அதை கேட்ட நீதிபதிகள் தனியாக மனுதாக்கல் செய்யுங்கள். நேறறு பிற்பகலில் விசாரணைக்கு எடுத்து கொள்கிறோம் என்றனர்.
இதன் பின் இம்மனு பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது அப்போது நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தரேஷ் ஆகியோர் இந்த மனு மீது திங்கட்கிழமை அன்று விரிவாக விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கின்றனர்.
மேலும் நீதிபதிகள் கூறுகையில் இளவசரன் மரணத்தால் பாதிக்கப்பட்ட திவ்யாவுக்கு அவர் விரும்பினால் மனநல மருத்துவர், மற்றும் அரசு அதிகாரி முன் கவுன்சிலிங் அளிக்கலாம். அவர் விரும்பவில்லை என்றால் அது தேவையில்லை என்றும் இது குறித்து அவரிடம் அரசு அதிகாரிகள் கலந்து பேசி உரிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
திவ்யாவுக்கு பாதுகாப்பு:
இளவரசன் மரணத்தை தொடர்ந்து தர்மபுரியில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இளவரசன் இறந்ததையடுத்து, திவ்யாவுக்கு அச்சுறுத்தல் இருக்கலாம் என்பதால், அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் மில்டன் மனுத் தாக்கல் செய்தார். அவரது மனுவை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்து, திவ்யாவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –10-01-2026
10 Jan 2026 -
த.வெ.க. உடன் கூட்டணியா? ஓ.பன்னீர் செல்வம் பேட்டி
10 Jan 2026சென்னை, த.வெ.க. உடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு தை பிறந்தால் வழி பிறக்கும் என ஓ.பி.எஸ். தெரிவித்தார்.
-
அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது: மம்தா பானர்ஜி
10 Jan 2026கொல்கத்தா, நிலக்கரி ஊழல் பணம் தொடர்பாக அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்களை கொண்ட பென் டிரைவ் என்னிடம் உள்ளது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருப்பது பரபரப
-
நாளை விண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி சி-62: திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாமி தரிசனம்
10 Jan 2026ஸ்ரீஹரிகோட்டா, பி.எஸ்.எல்.வி சி-62 நாளை விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில் ராக்கெட் மாதிரியை வைத்து திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாமி தரிசனம் செய்தனர்.
-
தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை விதித்த ஐகோர்ட்
10 Jan 2026சென்னை, தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
வரும் சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி..? பிரேமலதா வைத்த 'சஸ்பென்ஸ்'
10 Jan 2026சென்னை, சட்டசபை தேர்தல் கூட்டணி அறிவிப்பை மாநாட்டில் தெரிவிப்பேன் என்று பிரேமலதா கூறியிருந்த நிலையில் கடலூர் மாநாட்டில் பேசிய பிரேமலதா, "தே.மு.தி.க.
-
ஜனநாயகன் பட விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்த தயாரிப்பு நிறுவனம்
10 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம் தொடர்பாக ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளத
-
குறள் வார விழாவுக்கான சிறப்பு காணொலி, பதாகை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
10 Jan 2026சென்னை, குறள் வார விழாவுக்கான சிறப்பு காணொலி மற்றும் பதாகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று கேரளா செல்கிறார்
10 Jan 2026கொச்சி, கேரளாவுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று செல்கிறார்.
-
இமாசல பிரதேச பேருந்து விபத்து: பலியானவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்தார் பிரதமர்
10 Jan 2026சிம்லா, இமாசல பிரதேசத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களு
-
வளர்ச்சியடைந்த இந்தியா: மூன்றாயிரம் இளைஞர்களுடன் பிரதமர் நாளை கலந்துரையாடல்
10 Jan 2026டெல்லி, டெல்லியில் நாளை (திங்கள்கிழமை) அன்று நடைபெறும் விக்சித் பாரத்(வளர்ச்சி அடைந்த இந்தியா) இளம் தலைவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச்
-
அமைச்சரவையில் இடம் கேட்டு அ.தி.மு.க.வுக்கு அழுத்தமா..? நயினார் நாகேந்திரன் விளக்கம்
10 Jan 2026கோவை, அமைச்சரவையில் இடம் கேட்டு அ.தி.மு.க.வுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரை
10 Jan 2026புதுடெல்லி, போக்சோ சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரை செய்துள்ளது.
-
மக்களுக்கு பணியாற்றும் கட்சிகள் அனைத்தும் தி.மு.க.வுடன் உள்ளது: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி
10 Jan 2026கடலூர், மக்களுக்கு பணியாற்றும் கட்சிகள் அனைத்தும் தி.மு.க.வுடன் உள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை: பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் விரைவில் தமிழகம் வருகிறார்
10 Jan 2026சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபின் ஏப்ரல் மாதம் தமிழகம் வருகிறார்.
-
3 அம்ரித் பாரத் ரயில்களை தமிழகம்-மேற்குவங்கம் இடையே இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்
10 Jan 2026சென்னை, தமிழகம்-மேற்கு வங்கம் இடையே 3 அம்ரித் பாரத் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
பியட் காரை ஓட்டி மகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
10 Jan 2026சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் பியட் கார் ஓட்டிய வீடியோவை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
-
விஜய் பிரச்சார பேருந்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை வாகன ஓட்டுனரிடமும் விசாரணை
10 Jan 2026சென்னை, விஜய் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் பேருந்தில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையிட்டனர். விஜய் பிரச்சார வாகன ஓட்டுனரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
-
நிதிஷ்க்கு பாரத ரத்னா விருது கொடுங்கள்; பிரதமர் மோடிக்கு ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தல்
10 Jan 2026பாட்னா, நிதிஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் வலியுத்தியுள்ளது.
-
வார ராசிபலன்
10 Jan 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
10 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் அஷ்டமி சப்பரம், சகல ஜீவகோடிகளுக்கும் படியளந்தருளிய காட்சி.
- மதுரை செல்லத்தம்மன் உற்சவாரம்பம்.
-
இன்றைய நாள் எப்படி?
10 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
10 Jan 2026


