எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜூலை.6 - தர்மபுரி காதல் மனமகன் இளவரசன் மரணத்தை அடுத்து அவர் காதலித்த திவ்யாவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் விரும்பினால் மனநல மருத்துவர் முலம் அவருக்கு கவுன்சிலிங் அளிக்கலாம் என்றும் ஐகோர்ட் வெவ்வேறு வழக்குகளில் உத்தரவிட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன், செல்லன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த திவ்யா இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது.
இவ்வளவு பிரச்சினைகளுக்கும் மத்தியில் பல மாதங்கள் சேர்ந்து வாழ்ந்த நிலையில், திவ்யா தனது கணவனுடன் சேர்ந்து வாழப்போவதில்லை என்று கூறினார். அவர் இவ்வாறு கூறிய மறுநாளே இளவரசன் இறந்துவிட்டார். திவ்யா தன்னுடன் வாழ மறுத்ததால் மனமுடைந்து இளவரசன் ரெயில் முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தர்மபுரி இளவசரன் மரணமடைந்ததை அடுத்து சென்னை ஐகோர்ட்டில் பல தரப்பு வழக்கறிஞர்கள் வெவ்வேறு பெஞ்ச் முன் மனு தாக்கல் செய்தனர். இதில் ஒரு மனுவை ஐகோர்ட்டு மூத்த வக்கீல் வைகை நேற்று தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஸ்குமார் அகர்வால், நீதிபதி சத்திய நாராயணன் ஆகியோர் முன்பு ஆஜராகி கூறியதாவது:-
தர்மபுரியில் வாலிபர் இளவரசனும், திவ்யாவும் காதல் திருமணம் செய்ததை தொடர்ந்து நடந்த பல்வேறு சம்பவங்கள் குறித்து தமிழக போலீஸ் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. போலீசார் இந்த விவகாரத்தை சரியாக கையாளவில்லை. எனவேதான் ஒரு இளம் வாலிபர் உயிர் பறிபோய் உள்ளது.
இளம்பெண் திவ்யாவும் பாதுகாப்பற்ற சூழ்நிலையிலேயே இருக்கிறார். எனவே இந்த சம்பவங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதுதொடர்பாக பொதுநல வழக்கு தொடர அனுமதியளிக்க வேண்டும் என்றார்.
இதுபற்றி நீதிபதிகள் கூறும்போது, இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணையில் இருக்கிறது. எனவே உங்கள் கோரிக்கைகளை அங்கு வையுங்கள் என்றனர்.
இதை தொடர்ந்து வக்கீல் வைகை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தரேஷ் ஆகியோர் முன்பு ஆஜரானார். அப்போது அவர் கூறியதாவது:-
வாலிபர் இளவரசன் இறந்த பிறகு பல மாவட்டங்களில் பதட்டமான சுழ்ைநிலை நிலவுகிறது. தமிழக போலீசார் சரியான நட வடிக்கை எடுக்காததால் உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டுள்ளது. இளவரசன் தற்கொலையில் இப்போது மேலும் பல பிரச்சினைகள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தர்மபுரி கலவரம் முதல் நடந்த ஒட்டு மொத்த சம்பவங்களுக்கும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். திவ்யாவுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். இளவரசன் இறுதிச் சடங்கில் திவ்யா கலந்துகொள்ள விரும்பினால் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார்.
அதை கேட்ட நீதிபதிகள் தனியாக மனுதாக்கல் செய்யுங்கள். நேறறு பிற்பகலில் விசாரணைக்கு எடுத்து கொள்கிறோம் என்றனர்.
இதன் பின் இம்மனு பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது அப்போது நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தரேஷ் ஆகியோர் இந்த மனு மீது திங்கட்கிழமை அன்று விரிவாக விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கின்றனர்.
மேலும் நீதிபதிகள் கூறுகையில் இளவசரன் மரணத்தால் பாதிக்கப்பட்ட திவ்யாவுக்கு அவர் விரும்பினால் மனநல மருத்துவர், மற்றும் அரசு அதிகாரி முன் கவுன்சிலிங் அளிக்கலாம். அவர் விரும்பவில்லை என்றால் அது தேவையில்லை என்றும் இது குறித்து அவரிடம் அரசு அதிகாரிகள் கலந்து பேசி உரிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
திவ்யாவுக்கு பாதுகாப்பு:
இளவரசன் மரணத்தை தொடர்ந்து தர்மபுரியில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இளவரசன் இறந்ததையடுத்து, திவ்யாவுக்கு அச்சுறுத்தல் இருக்கலாம் என்பதால், அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் மில்டன் மனுத் தாக்கல் செய்தார். அவரது மனுவை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்து, திவ்யாவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
வரும் 16, 17-ம் தேதிகளில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
13 Jul 2025சென்னை: தமிழகத்தில் வரும் 16, 17 தேதிகளில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
இன்று கோலாகலமாக நடக்கிறது திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம்
13 Jul 2025திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஜூலை 14) அதிகாலை 5:25 மணி முதல் காலை 6:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
-
புதுச்சேரி: புதிய அமைச்சராக ஜான்குமார் இன்று பதவியேற்பு
13 Jul 2025புதுச்சேரி : புதுச்சேரியில் புதிய அமைச்சராக பா.ஜ.க.வின் ஜான்குமார் இன்று பதவியேற்கிறார்.
-
ராணிப்பேட்டை அருகே சோகம்: குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
13 Jul 2025ராணிப்பேட்டை: குட்டையில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ராணிப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-07-2025.
13 Jul 2025 -
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 7 மீனவர்கள் கைது
13 Jul 2025ராமேசுவரம் : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
-
உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம்: மேட்டூர் அணையில் பாசனத்துக்கு நீர் திறப்பு
13 Jul 2025மேட்டூர்: மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம் நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
-
குற்றச்செயலில் ஈடுபட்டதாக அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் கைது
13 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் குற்றச்செயலில் ஈடுபட்ட காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 9-வது முறையாக 2 அணிகளும் ஒரே ஸ்கோர்: இந்தியா சாதனை
13 Jul 2025லண்டன்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான லார்ட்ஸ் டெஸ்டில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் 387 ரன் குவித்தது.
-
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 7 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
13 Jul 2025சென்னை: மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.;
-
விமானம் 10 மணிநேரம் தாமதம்; மும்பை விமான நிலையத்தில் பயணிகள் திடீர் போராட்டம்
13 Jul 2025மும்பை: துபாய்க்கு செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் 10 மணிநேரத்திற்கும் மேலாக தாமதமானதால் மும்பை விமன நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
-
இந்திய மாணவர் சேர்க்கை குறைவால் கனடா பல்கலை, கல்லுாரிகளில் வேலை இழந்த 10 ஆயிரம் பேர்..!
13 Jul 2025ஒன்டாரியோ: கனடா பல்கலை மற்றும் கல்லூரிகளில் இந்திய மாணவர்களின் சேர்க்கை வெகுவாக குறைந்ததால் நிதி நெருக்கடியில் சிக்கிய கல்வி நிறுவனங்கள் பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர
-
மாணவர்கள் போராட்டம்: ட்ரம்ப் மிரட்டலுக்கு அடிபணிந்த கொலம்பியா பல்கலைக்கழகம்..!
13 Jul 2025நியூயார்க்: பாலஸ்தீனத்தின் காசா முனை மீதான இஸ்ரேலின் போர் தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
-
'சாமி' பட வில்லன் கோட்டா சீனிவாச ராவ் காலமானார் பிரதமர் மோடி இரங்கல்
13 Jul 2025ஐதராபாத்: நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல் நலக்குறைவால் காலமானார். சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அதிகாலை உயிர் பிரிந்தது.
-
சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு திரும்புகிறார்..!
13 Jul 2025புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா.
-
மத்திய அமைச்சருக்கு கொலை மிரட்டல்
13 Jul 2025பாட்னா: மத்திய மந்திரி சிராக் பஸ்வானுக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
13 Jul 2025தென்காசி: வார விடுமுறை என்பதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர்.
-
உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து ஜூலை 17-ல் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
13 Jul 2025சென்னை : உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வரும் ஜூலை 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
-
சரக்கு ரெயிலில் தீ விபத்து: உயர்மட்ட விசாரணைக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
13 Jul 2025சென்னை: சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து: உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
அதிக சிக்சர்: விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை தகர்த்த ரிஷப் பண்ட்
13 Jul 2025லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 36 சிக்சர்கள் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற விவியன் ரிச்சர்
-
காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் த.வெ.க. ஆர்ப்பாட்டம் - விஜய் பங்கேற்பு
13 Jul 2025சென்னை : திருப்புவனம் காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்றார்
-
நியமன எம்.பி. உஜ்வால் நிகாமுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
13 Jul 2025புதுடெல்லி : மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள உஜ்வால் நிகாமின் பணி பாராட்டத்தக்கது என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தி உள்ளார் .
-
ஆஸி.யை 225 ரன்களில் சுருட்டிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி..!
13 Jul 2025கிங்ஸ்டன்: ஆஸ்திரேலிய அணி உடனான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அந்த அணியை 225 ரன்களில் ஆல் அவுட் செய்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
-
யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் தி.மு.க.: உதயநிதி பெருமிதம்
13 Jul 2025திருவண்ணாமலை : தேர்தல் ரேசில் யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் முதலிடத்தில் சென்று கொண்டு இருக்கிறோம் என்று துணை முதல்வர் உதயநிதி கூறி உள்ளார்.
-
2-ம் கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி
13 Jul 2025சென்னை : மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் பிரச்சார சுற்றுப்பயணத்தின் 2-ம் கட்ட சுற்றுப்பயண அட்டவணையை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.