எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Image Unavailable](/sites/all/themes/thinaboomi/images/photos/image-30.jpg)
கொழும்பு, நவ,18 - விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரின்போது ராணுவம் இழைத்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல், போர்க்குற்றங்கள் தொடர்பாக மார்ச் மாதத்துக்குள் சுயேச்சையான விசாரணைக்கு இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் கெடு விதித்துள்ளார்.
தவறினால், சர்வதேச விசாரணை நடத்த ஐநா மனித உரிமை ஆணையத்தை பிரிட்டன் அணுகும் என்றார். ஆனால், அவரது கோரிக்கையை உடனடியாக நிராகரித்தது இலங்கை அரசு.
காமன்வெல்த் உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த டேவிட் கேமரூன், இறுதிக்கட்டப் போரின்போது உருக்குலைந்த யாழ்ப்பாணம் நகருக்கு வெள்ளிக்கிழமை சென்று பார்வையிட்டார். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் கொழும்பு திரும்பிய டேவிட் கேமரூன், வெள்ளிக்கிழமை இரவு அதிபர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்தார். 1948ல் பிரிட்டனில் இருந்து இலங்கை விடுதலை பெற்ற பிறகு யாழ்ப்பாணம் சென்ற முதல் வெளிநாட்டு பிரதமர் டேவிட் கேமரூன்தான்.
டேவிட் கேமரூனும் ராஜபக்சே வும் இலங்கைத் தமிழர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள், சமரச முயற்சிகள் பற்றி மனம் திறந்து ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் நிருபர்களுக்கு கொழும்பில் சனிக்கிழமை டேவிட் கேமரூன் பேட்டி அளித்தார். (விடுதலைப்புலிகளுக்கு எதிரான) இறுதிக்கட்ட போரின் போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து தனியாக இலங்கைக்குள் வெளிப்படைத்தன்மை கொண்ட, நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணை நடத்த மார்ச் மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கெடு தவறினால் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தை அணுகி சுயேச்சையான விசாரணைக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன் என்று தெரிவித்தார் டேவிட் கேமரூன்.
'விசாரணைக்கு ஏன் மார்ச் மாதம் வரை காத்திருக்க வேண்டும்?' என்று நிருபர்கள் கேட்டதற்கு, 'போர் பாதிப்புகளிலிருந்து முழுமையாக நாடு மீளவில்லை என்பதால் கால அவகாசம் தேவை' என அதிபர் கேட்டுக்கொண்டதால் அதை புரிந்துகொண்டு இந்த அவகாசம் தரப்பட்டது என்றார் கேமரூன்.
போரின்போது தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம் என வரவழைத்து பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு முகாம்களில் என்ன நடந்தது என்பதை அறிய சர்வதேச விசாரணை அவசியம் என்றார்.
'கடினமான சில கேள்விகளை ராஜபக்சேயிடம் கேட்கப்போவதாக சொல்லியிருந்தீர்களே, அந்த கேள்விகளை எழுப்பினீர்களா?' என்று கேட்டதற்கு 'இருவரும் மனம் திறந்து பேசினோம், நான் சொன்ன அனைத்தையும் அவர் ஏற்றுக்கொண்டார் என்று சொல்ல முடியாது' என்றார் கேமரூன்.
தமிழர்கள் கண்ணியம், மரியாதையுடன் வாழ வழி செய்யுங்கள், பத்திரிகையாளர்களுக்கு சுதந்திரம் கொடுங்கள், மனித உரிமை மீறல் பிரச்சினையை தீர்த்து வையுங்கள் என நான் சொன்னதை அவர் ஏற்றுக்கொண்டார். தமிழர்களிடம் நிலவும் பகைமை உணர்வை நல்லுறவாக மாற்றி நல்லிணக்கம் ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக ராஜபக்சேவிடம் தெரிவித்தேன் என்றார் டேவிட் கேமரூன்.
யாழ்ப்பாணத்துக்கு சில சர்வதேச அமைப்புகளுடன் நான் சென்றதற்கு காரணம், அங்கு நடந்த மனதை உறைய வைக்கும் சம்பவங்களை வெளிச்சம் போட்டு உலகுக்கு காட்டுவதற்குத்தான். காமன்வெல்த் குடும்பத்தின் உறுப்பினர் என்ற முறையில் இதை செய்தேன், இந்த பயணத்துக்கு ஏற்பாடு செய்த இலங்கை அரசுக்கு நன்றி என்றார்.
உதயம் நாளேட்டின் அலுவலகத்துக்கு சென்றதையும் அவர் குறிப்பிட்டார். வடக்கு மாகாண முதல்வர் சி.எஸ்.விக்னேஸ்வரனுடன் நடத்திய சந்திப்பு திருப்தியாக இருந்தது. எனது இந்த பயணத்தின் நோக்கம் அந்த மக்களுக்கு உலகத்தின் ஆதரவு குரலை தெரிவிப்பதாகும். எனினும் விடுதலைப் புலிகள் திரும்புவதை யாரும் விரும்பவில்லை என்றார்.
'உங்களை சந்தித்த யாழ்ப்பாண மாகாண மக்கள் மீது இலங்கை வஞ்சகம் காட்டாது என்பது என்ன நிச்சயம்?' என்று கேட்டதற்கு 'இலங்கை அரசின் செயலை உலகம் கண்காணிக்கிறது' என்று குறிப்பிட்டார்.
கோரிக்கையை நிராகரித்தது இலங்கை...
இலங்கை அமைச்சர்கள் ஹிமல் சிரிபாலா டி சில்வா, கெகலியா ரம்புகவெல்லா, டக்ளஸ் தேவானந்தா ஆகிய மூவரும் சர்வதேச பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
'உலக நாடுகளின் காவலனாக (போலீஸ்) காமன்வெல்த் இருக்க முடியாது. கேமரூனின் பேட்டியை நாங்களும் கேட்டோம். தங்களது கருத்தை எந்த நாடும் எங்கள் மீது திணிக்கமுடியாது. ஏகாதிபத்தியத்தின் சுவடுகளை (பிரிட்டனை மறைமுகமாக குறிப்பிட்டு) துடைத்தெறிந்தவர்கள் நாங்கள். மீண்டும் அந்த நாடு இலங்கையை சீர்குலைக்க அனுமதிக்க மாட்டோம். சர்வதேச விசாரணையை எதிர்ப்போம்.
சர்வதேச விசாரணை கோர எந்தவித காரணமும் இல்லை. குறுகிய காலத்தில் நாங்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளோம். இலங்கைக்குள்ளேயே விசாரணை நடத்தி உரியவகையில் அதற்கான குற்றப்பத்திரிகை தாக்கல், பரிந்துரைகளை நடத்தி முடித்துள்ளோம். இவ்வாறு அமைச்சர்கள் கூறினர்.
டேவிட் கேமரூனை யாழ்ப்பாணம் மக்கள் சந்தித்ததால் அவர்கள் பத்திரமாக இருப்பார்களா என்று கேட்டதற்கு 'பத்திரமாக இருப்பார்கள், யாரையும் தண்டிக்க மாட்டோம், எங்கள் கலாச்சாரம் அதை அனுமதிக்காது' என்றார் ரம்புகவெல்லா.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஜூசி சிக்கன்கட்லட்![]() 2 days 48 sec ago |
ஜூசி க்ரீன் சிக்கன்![]() 4 days 20 hours ago |
கத்திரிக்காய் ரோஸ்ட்![]() 1 week 2 days ago |
-
கோலி குறித்து பயிற்சியாளர்
16 Jun 2024விராட் கோலியின் ஃபார்ம் குறித்து எந்தவொரு கவலையும் இல்லை என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
-
உலகில் சிறந்த 100 தொழில் நுட்ப நிறுவனங்கள்: 3 இந்திய நிறுவனங்கள் இடம்பிடிப்பு
16 Jun 2024புதுடில்லி; உலகளவிலான 100 தொழில் நுட்ப நிறுவனங்கள் பட்டியலில் 3 இந்திய நிறுவனங்கள் இடம் பிடித்து உள்ளது.
-
கடைசி ஓவரில் திரில் வெற்றி: ஸ்காட்லாந்தை வீழ்த்தியது ஆஸி.,
16 Jun 2024நியூயார்க்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற 35-வது போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
-
செல்போன் மூலம் இ.வி.எம்.களில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை மும்பை தேர்தல் அதிகாரி விளக்கம்
16 Jun 2024புதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டுக்கு ஓடிபி எண் எதுவும் தேவையில்லை என மும்பை தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
16 Jun 2024நெல்லை: திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
16 Jun 2024நெல்லை: திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
மழையால் போட்டி ரத்து: இந்தியா, கனடாவுக்கு தலா ஒரு புள்ளிகள்
16 Jun 2024புளோரிடா: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா – கனடா அணிகள் இடையேயான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
-
தலைநகரில் தண்ணீருக்காக சண்டை 3 பேர் காயம்
16 Jun 2024புதுடெல்லி: புதுடெல்லியில் காணப்படும் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சத்தால் சண்டை நிலவியது. இதில் 3 பேர் காயம் அடைந்தனர்.
-
டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள்
16 Jun 2024நியூயார்க்: நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் நேபாள அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில் இதற்கு முன் பல அணிகள் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளன
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: ஆஸி., வெற்றியால் சூப்பர் 8-க்கு முன்னேறிய இங்கிலாந்து அணி
16 Jun 2024நியூயார்க்: ஸ்காட்லாந்தை வெளியேற்றிய ஆஸ்திரேலியா வெற்றியால்
சூப்பர் 8-க்கு முன்னேறிய இங்கிலாந்து அணி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-06-2024.
17 Jun 2024 -
ஆட்டோ ஓட்டுனரின் கனவு ராக்கெட் டிரைவர்
17 Jun 2024ஸ்டோரீஸ் பை தி ஷோர் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அனிருத்வல்லப் தயாரிக்கும் புதிய படம் "ராக்கெட் டிரைவர்".
-
ஆகஸ்ட்டில் வெளியாகிறது டபுள் ஐஸ்மார்ட்
17 Jun 2024உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இருவரும் தங்களின் மாபெரும் வெற்றி படமான ’ஐஸ்மார்ட் ஷங்கர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் சீக்குவல் ‘டபுள் ஐஸ்மா
-
‘லாந்தர்’ இசை வெளியீடு
17 Jun 2024எம் சினிமா புரொடக்ஷன்ஸ் சார்பில் பத்ரி மற்றும் ஸ்ரீவிஷ்ணு இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘லாந்தர்’.
-
முன்னாள் ஜெனரல் விலகல் எதிரொலி: போர் கேபினட்டை கலைத்த இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு
17 Jun 2024டெல்அவீவ், காசா மீதான போர் திட்டத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக முக்கிய உறுப்பினர் விலகல் காரணமாக போர் கேபினட்டை கலைத்தார் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு.
-
காஷ்மீர் ரியாசி தீவிரவாத தாக்குதல்: விசாரணையை என்.ஐ.ஏ.விடம் ஒப்படைத்த மத்திய உள்துறை
17 Jun 2024புதுடெல்லி : ஜம்மு காஷ்மீரின் ரியாசியில் பேருந்து மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையை மத்திய உள்துறை அமைச்சகம் தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்
-
பிரம்மிக்கவைக்க வரும் பயமறியா பிரம்மை
17 Jun 202469 எம்எம் ஃபிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ராகுல் கபாலியின் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக்
-
மஹாராஜா விமர்சனம்
17 Jun 2024சலூன் கடை நடத்தி வரும் விஜய்சேதுபதி, தனது மகளுடன் சென்னையின் புறநகர் பகுதியில் வசித்து வருகிறார்.
-
விவாகரத்துக்கு காரணமான ஆப்பிள் நிறுவனம்: 53 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி தொழிலதிபர் வழக்கு
17 Jun 2024லண்டன், தம் மனைவி விவாகரத்து கோருவதற்கு ஆப்பிள் நிறுவனம்தான் காரணம் என்று கூறி வழக்கு தொடுத்துள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரிச்சர்ட்.
-
இலங்கை-இந்தியா இடையே பாலம்: இறுதிக்கட்டத்தில் ஆய்வுப் பணிகள்; அதிபர் ரணில் விக்ரமசிங்கே தகவல்
17 Jun 2024கொழும்பு, இலங்கை-இந்தியா இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்தும் திட்டத்துக்கான ஆய்வுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்
-
மலாவியில் பயங்கரம்: இறுதி ஊர்வலத்தில் வாகனம் மோதிய விபத்தில் 4 பேர் பலி
17 Jun 2024லிலாங்வே : மலாவியில் இறுதி ஊர்வலத்தில் வாகனம் மோதிய விபத்தில் 4 பேர் பலியான சோக நிகழ்வு நடந்துள்ளது.
-
தங்கம் விலை சற்று சரிவு
17 Jun 2024சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 அதிரடியாக அதிகரித்த நிலையில் நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
மேற்கு வங்க ரெயில் விபத்து எதிரொலி: 19 ரயில்கள் ரத்து
17 Jun 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தின், டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நியூ ஜல்பைகுரி அருகே கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் (வண்டி எண்: 13174) மீது பின்னால் வந்த சரக்கு ரயில் மோதி நேற்று
-
நடுவானில் விமான எஞ்சின் செயலிழப்பு: அவசர அவசரமாக ஆஸ்திரேலியா விமானம் தரையிறக்கம்
17 Jun 2024வெலிங்டன் : நியூசிலாந்தின் குயின்ஸ்டவுண் நகரில் இருந்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு வெர்ஜீன் ஆஸ்திரேலியா விமான நிறுவனத்தின் விமானம் நேற்று முன்தினம் இரவு புறப்ப
-
சவுதியில் கடும் வெப்ப அலை: ஜோர்டன், ஈரானை சேர்ந்த ஹஜ் பயணிகள் 19 பேர் பலி
17 Jun 2024சவுதி, கடும் வெப்ப அலையால் ஹஜ் புனிதப் பயணம் சென்ற ஜோர்டனைச் சேர்ந்த 14 பேர், ஈரானைச் சேர்ந்த 5 பேர் என 19 பேர் உயிரிழந்துள்ளனர்.