முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணாவின் புகழைநிலைநாட்டி ஆட்சியை நடத்தி வருபவர் ஜெயலலிதா- சீனிவாசன்பேச்சு

வெள்ளிக்கிழமை, 16 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

திண்டுக்கல், செப்.- 16 - பேரறிஞர் அண்ணாவின் புகழை நிலைநாட்டி அவர் விரும்பிய ஆட்சியை தமிழகத்தில் நடத்தி வருபவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா என்று திண்டுக்கல்லில் நடந்த பேரறிஞர் அண்ணாவின் 103வது பிறந்த தின விழாவில் மாவட்ட அவைத்தலைவர் சி.சீனிவாசன் பேசினார்.

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 103வது பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் அவரது சிலைக்கு அ.தி.மு.க.சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக கட்சி அலுவலகத்தில் இருந்து நகரச்செயலாளர் ராமுத்தேவர் தலைமையில் ஊர்வலமாக வந்து சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். மாவட்ட அவைத்தலைவர் சி.சீனிவாசன், நத்தம் தொகுதி செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினார்கள். மாவட்ட அவைத்தலைவர் சி.சீனிவாசன் சிறப்புரையாற்றி பேசுகையில்,

அண்ணாவின் புகழை நிலைநாட்டி இன்றளவும் அப்புகழைப் பரப்பிக் கொண்டிருப்பவர் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் படிப்படியாக நிறைவேற்றி வரும் வேளையில் இன்று கூட அகிலமே பாராட்டக் கூடிய அளவில் ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணிணிகள், பொதுமக்களுக்கு இலவச கறவை மாடு, ஆடுகள் ஆகியவை வழங்கி சாதனை படைத்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா செய்வதைத்தான் சொல்வார். செய்யாததை சொல்லி மக்களை ஏமாற்ற மாட்டார் என்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பேரவை செயலாளர் பாரதிமுருகன், தொகுதி செயலாளர் மருதராஜ், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜெயபாலன், வழக்கறிஞர் மனோகரன், தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் திவான்பாட்ஷா, கவுன்சிலர்கள் மோகன், பழக்கடை நாகராஜன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்