எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.16 - கடந்த சில ஆண்டுகளாக ஒரு சிலரின் ஆதிக்கத்திலிருந்த சினிமாவை மீட்டவர் முதல்வர் ஜெயலலிதா என்று சென்னையில் நடைபெற்ற திரைப்பட விழாவில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார். சென்னையில் 9-வது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. இந்த விழா டிசம்பர் 14-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை சென்னையில் உள்ள முக்கிய திரையரங்கில் சர்வதேச ரீதியாக வெற்றி பெற்ற படங்கள் திரையிடப்படவுள்ளது. இதன் துவக்க விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லாண்ட்ஸ் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட இயக்குநர் சேகர் கபூர் , டி.சிட்டிபாபு, இந்து பத்திரிகையின் ஆசிரியர் என்.ராம், செய்தித்துறையின் செயலாளர் டாக்டர் எம்.இராஜாராம், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ., தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் செயலாளர்கள் எல்.சுரேஷ், ரவி கொட்டாரக்காரா, திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் துணைத்தலைவர் டி.டி.ஜி.தியான், செய்தித்துறையின் இயக்குனர் டாக்டர் பொ.சங்கர் மற்றும் திரைப்படத்துறையைச் சேர்ந்த பிரமுகர்கள், திரைப்படக் கலையை பயிலும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகைகள் கார்த்திகா, தன்ஷிகா, ப்ரியா ஆனந்த் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து விழாவை துவக்கி வைத்தனர்.
விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ஜே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-
திரையுலக வரலாற்றில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. தமிழ் திரை உலகில் முடிசூடா மன்னராக வாழ்ந்து மறைந்த எம்.ஜி.ஆரை நினைவுகூராமல் திரைப்பட விழாவை தொடங்க முடியாது. தமிழ் துரைப்பட வரலாற்றில் குறிப்பிடத்தக்க இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், மிகச் சிறந்த கலைநுட்பம் வாய்ந்த திரைப்படங்களை வழங்கி இந்திய திரை உலகத்திற்கு தமது அளப்பரிய பங்களிப்பை அளித்துள்ளார்கள்.
தமிழ் திரையுலகம் புதுமையைப் படைப்பதிலும், மக்களுக்கு தேவையான உயர்ந்த கருத்துகளை கலை வடிவத்தில் கொண்டு சேர்ப்பதிலும், திறமையாக பணியாற்றி வருகிறது.
உலக திரைப்படங்களில் தமிழ் திரைப்படங்கள் தலை நிமிர்ந்து நிற்கின்றன. நவீன தொழில்நுட்பங்களை எடுத்துக் கொண்டு அயல்நாட்டு படங்களுக்கு இணையாக தமிழ் திரைப்பட துறையினர் தமிழ் படங்களை அளிப்பது தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பதாகும். இத்தகைய சூழலில் மென்மேலும் தமிழ் திரைப்படங்களின் தரத்தை உலகதரத்திற்கு உயர்த்தும் விதமாக இந்தோ சினி அப்ரிசியேஷன் அறக்கட்டளை இத்தகைய திரைப்பட விழாவை நடத்துவது பாராட்டுக்குரியது ஆகும்.
திரைப்பட கலையை பயிலும் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் தமிழக அரசின் செய்தித்துறை சார்பில் எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் என்ற கல்லூரியை நடத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த கல்லூரியிலிருந்து கலை பயின்று வெளியில் வரும் மாணவர்கள் தமிழ் திரையுலகத்திற்கு சிறந்த ப டங்களை வழங்கி இருக்கிறார்கள் என்பதை பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு திரைப்படத்துறையை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படங்களுக்கு, சிறந்த திரைக்கலைஞர்களுக்கு, விருதுகள் வழங்குவதோடு குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட சிறந்த படங்களுக்கு தலா 7 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கி வருகிறது என்பதையும் இந்தத் தருத்தணத்தில் நினைவு படுத்த வரும்புகிறேன். திரைப்படத்துறையை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு செய்துவரும் பல்வேறு நலப்பணிகளில் ஒன்றாகக்தான் இன்றைய தினம் தொடங்கியிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழக அரசின் சார்பில் 25 லட்சம் ரூபாயை தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கியிருக்கிறார்.
இந்தத் திரைப்பட விழாவிற்காக அரசின் நிதியை பெற வந்தபோது தமிழக முதல்வர் ஜெயலலிதா நிதியை உயர்த்தி தருமாறு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். தமிழக முதல்வர் ஜெயலலிதா நிச்சயமாக உங்களது கோரிக்கையை பரிசீலனை செய்து நல்ல முடிவை சொல்வார்கள். ஏனென்றால் திரைப்படத்துறைக்கு எல்லா விதங்களிலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இன்னும் தொடர்ந்து செய்வார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக ஒரு சிலரின் ஆதிக்கத்திலிருந்த நமது திரை உலகத்தை மீட்டெடுத்து இன்றைய தினம் யார் வேண்டுமானாலும் திரைப்படத் துறையில் சாதிக்கலாம் என்ற ஒரு சமத்துவ நிலையை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்படுத்தியிருக்கிறார் என்பதை நான் பெருமையோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
சர்வதேச திரைப்பட விழாக்களின் மூலமாக பல்வேறு மொழிகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களை தமிழ்நாட்டில் திரைக்கலை பயிலும் மாணவர்களுக்கு காட்டும் பணியை தமிழக அரசு செய்து வருகிறது. அண்மையில் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிற்கு எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள் சென்று வந்தார்கள். அந்த விழாவில் நமது மாணவர்கள் தாயாரித்த நான்கு குறும்படங்கள் திரையிடப்பட்டன. அந்த படங்களுக்கு அங்கு வந்திருந்த திரைப்படப் பார்வையாளர்கள் பெரும் வரவேற்பை அளித்துள்ளார்கள் என்கின்ற செய்தியை இங்கே தெரிவிப்பதில் பெருமையடைகிறேன். இதேபோல இனிவரும் ஆண்டுகளிலும் உலக அளவில் தமிழ் திரைப்படங்கள் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல பரிசுகளை வெல்ல வேண்டும். அதற்காக இந்த திரைப்பட விழா பயன்பெற வேண்டும் என்ற எனது விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் மென்மேலும் திரைப்பட ரசனையையும், திரைப்படக்கலையையும் வளர்ப்பதற்காக உங்களது அமைப்பு திரைப்பட விழாக்களை நடத்துவது மிகுந்த பாராட்டுக்குரியதாகும். 2003-ம் ஆண்டிலிருந்து இந்த திரைப்பட விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2003-ம் ஆண்டில் முதல் முறையாக இந்த திரைப்பட விழாவை தொடங்கியபோதே அப்போது ஆட்சியிலிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசு இந்த விழாவுக்கு ஒத்துழைப்பை நல்கியிருக்கிறார் என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
உலக அளவில் விருது பெற்ற 60 திரைப்படங்கள் உட்பட 154 திரைப்படங்கள் இங்கு திரையிடப்பட இருக்கிறது. ஏறத்தாழ 44 நாடுகளிலிருந்து திரைப்படங்கள் இந்த திரைப்பட விழாவில் பங்கேற்கின்றன என்கிற செய்தி திரைப்படத்தை கல்வியாக பயிலுகின்ற மாணவர்களுக்கும், விஷூவல் கம்யூகேஷன் கல்வி பயிலும் மாணவர்களுக்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் பெரும் ஆர்வமளிக்கும் செய்தியாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த சர்வதேச திரைப்பட விழாவை தொடங்கி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இவ்விழா சிறப்பாக நடைபெற தமிழக அரசின் செய்தித்துறையின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சேகர் கபூர், நடிகர் சரத்குமார், மற்றும் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்தி பேசினார்கள். நடிகர்கள் பார்த்திபன், வெங்கட்ராம் ஆகியோர் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள். விழாவின் முடிவில் படங்கள் திரையிடப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.