எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் மற்றும் 22 சட்டசபை தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என்றும் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு அறிவித்துள்ளார். மேலும் முகவர்கள் செல்போன் கொண்டுவர அனமதியில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மின்னணு பரிமாற்றம்...
இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-
நடந்து முடிந்த 38லோக்சபா தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல், 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றிற்குரிய வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. நாளை காலை 8 மணியளவில் தபால் வாக்குகளும், மின்னணு பரிமாற்றத்தின் மூலம் செலுத்தப்பட்ட தபால் வாக்குகளும் எண்ணும் பணி துவங்கப்படும். மின்னணு பரிமாற்றத்தின் மூலம் செலுத்தப்பட்ட வாக்குகளின் விரைவு மதிப்பீட்டுக் குறியீடு சரிபார்ப்பு (Qr-code) முடிந்தவுடன் அவை அஞ்சல் வாக்குகள் எண்ணும் மேசைக்கு அனுப்பப்படும்.
தபால் வாக்குகள்...
ஒவ்வொரு லோக்சபா தொகுதியும் 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய நிலையில், ஏதேனும் ஒரு சட்டசபை தொகுதிக்குரிய வாக்கு எண்ணும் கூடத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படும். தபால் வாக்குகளுக்கான எண்ணிக்கை முடிந்த 30 நிமிடங்களுக்குப் பின்னர் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் செலுத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை துவங்கும். மீதமுள்ள 5 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை கூடங்களில் வாக்கு எண்ணும் பணி காலை 8. மணியளவில் துவங்கும். இடைத் தேர்தல் நடைபெற்ற 22 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் எண்ணிக்கை முடிவுற்ற பின்னர் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் செலுத்தப்பட்ட வாக்குகள் எண்ணிக்கை காலை 8.30 மணிக்குப் பிறகு துவங்கும்.
ஒப்புகை சீட்டுகள்...
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்திலுள்ள வாக்கு எண்ணும் பணி முன்னரே திட்டமிட்டபடி, சுழற்சி முறையில் நடைபெறும். கட்டுப்பாட்டுக் கருவியிலுள்ள மின்கலம் இயங்காத நிலையில், மாற்று மின்கலம் பொருத்தப்பட்டு எண்ணிக்கை பணி தொடரும். கட்டுப்பாட்டுக் கருவியிலிருந்து முடிவுகளைப் பெற முடியாத நிலையில், அக்கருவி, தேர்தல் அலுவலரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு, மற்ற மின்னணு வாக்கு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கைப் பணி முடிவுற்ற பின்னர் அக்கட்டுப்பாட்டு கருவியின் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவியிலுள்ள ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படும்.
சரிபார்க்கும் பணி...
இந்தியத் தேர்தல் கமிஷனின் வழிகாட்டுதல்களின்படி, தபால் வாக்குகள் எண்ணும் பணி நிறைவுக்காக காத்திராமல் மின்னணு வாக்கு இயந்திரங்களின் எண்ணிக்கை தொடர்ந்து நடைபெறும். தேர்தல் முடிவு அறிவிப்பின் போது வெற்றி வாக்கு வித்தியாசம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தபால் வாக்குகளை விட குறைவாக இருந்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தபால் வாக்குகள் தேர்தல் அலுவலரின் மறு சரிபார்ப்புக்கு உட்படுத்தப்படும். வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவியிலுள்ள ஒப்புகைச் சீட்டு சரிபார்க்கும் பணி பின்வரும் முறையில் நடைபெறும்: மின்னணு வாக்குப் பதிவுக்குரிய கட்டுப்பாட்டுக் கருவியின் மின்கலம் மாற்றப்பட்ட நிலையிலும் முடிவுகளைப் பெறமுடியாத சூழல் ஏற்படும்போது;
மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றதை நீக்கம் செய்யாமல் தொடர்ந்து வாக்குப் பதிவு நடைபெற்றிருக்கும் நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் ஆணையிட்டிருந்தால்; கட்டுப்பாட்டுக் கருவியிலுள்ள வாக்கு எண்ணிக்கையும், படிவம் 17-சி யில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கையும் வேறுபடும் நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான வாக்குகள் பதிவான வாக்குகளை விட அதிகமாக இருக்கும் நிலையில், பாராளுமன்றத் தேர்தலாயின், கட்டுப்பாட்டுக் கருவி குறிப்பிட்ட ஒப்புகைச் சீட்டு எண்ணப்படும்.
குலுக்கல் முறையில்...
மாதிரி வாக்குப் பதிவின் போது பதிவான ஒப்புகைச் சீட்டுகளை வெளியில் எடுக்காமல் இருந்தால், வாக்காளர் வாரியாக சான்றொப்பமிட்ட மாதிரி வாக்குப் பதிவின் அனைத்து ஒப்புகைச் சீட்டுகளும் எண்ணப்பட்டு, சரிபார்க்கப்படும். தேர்தல் நடத்தை விதிகள், 1961-ன் விதி 56-க்கு உட்பட்டு தேர்தல் அலுவலரால் ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கை அனுமதிக்கப்பட்டால்; சரிபார்ப்புக்காக தோராயமாக தெரிந்தெடுக்கப்பட்ட 5 வாக்குச் சாவடி மையங்களின் ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு சட்டப்பேரவைக்கும் ஒப்புகைச்சீட்டு எண்ணுவதற்கான 5 வாக்குச் சாவடிகளைத் தேர்ந்தெடுப்பது குலுக்கல் முறையில் நடைபெறும்.
எழுத்து பூர்வமாக...
வாக்கு எண்ணிக்கையின் இறுதிச் சுற்றின் போது, மின்னணு வாக்கு இயந்திரம் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவியிலுள்ள ஒப்புகைச் சீட்டுகளை எண்ணும் பணிக்கான இயந்திரங்களைத் தேர்வு செய்வது குலுக்கல் முறையில், தேர்தல் நடத்தை விதிகள், 1961-ன் விதி 56க்குட்பட்டு நடைபெறும். குலுக்கல் முறையில் தெரிவு செய்வது குறித்து வேட்பாளர்களுக்கும், முகவர்களுக்கும் எழுத்து பூர்வமாகத் தெரிவிக்கப்படும்.
அஞ்சல் அட்டை அளவிலுள்ள வெள்ளை நிற காகித அட்டைகள் குலுக்கலுக்கான தேர்வுமுறைக்குப் பயன்படுத்தப்படும். சட்டசபை தொகுதியின் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வெள்ளை நிற காகித அட்டைகளின் எண்ணிக்கையும் இருக்கும். மேலே பத்தி 7-ல் (அ) முதல் (ஈ) வரையுள்ள காரணங்களுக்கான ஒப்புகைச் சீட்டுகள் எண்ணும் பணிக்குரிய இயந்திரங்கள் குறித்த விவரம் குலுக்கல் முறையில் நடத்தப்படும் அட்டைகளில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது.
காகித அட்டைகள்...
சட்டசபை தொகுதி / லோக்சபாதொகுதி எண் மற்றும் பெயர், வாக்கு நடைபெற்ற நாள், வாக்குச்சாவடி மைய எண் ஆகிய விவரங்கள் 1 அங்குல நீளம் அகலத்துடன் கூடிய அச்சிடப்பட்ட காகித அட்டைகள் குலுக்கலுக்குப் பயன்படுத்தப்படும். இந்த காகித அட்டைகள் நான்கு மடிப்புகளாக மடிக்கப்படுவதால் உள்ளே வாக்குச்சாவடி எண் வெளியில் தெரியாது. ஒவ்வொரு காகித அட்டையையும் மடித்து பெட்டிக்குள் செலுத்துவதற்கு முன் வேட்பாளர்களுக்கும், முகவர்களுக்கும் காண்பிக்கப்படும் தேர்தல் அலுவலரால் 5 காகித அட்டைகளைத் தெரிவு செய்வதற்கு முன் அதற்கான பெட்டி நன்கு குலுக்கப்படும்.
ஒப்புகைச் சீட்டு...
வாக்கு எண்ணிக்கை மையத்தில், அமைக்கப்பட்ட "வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவியிலுள்ள ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கைக்காக அமைக்கப்பட்ட குறிப்பிட்ட மையத்தில் நடைபெறும். தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்றுவதோடு மேலே பத்தி 8-ல் ஒப்புகைச் சீட்டு எண்ணும் பணிக்கான (அ) முதல் (ஈ) குறிக்கப்பட்டுள்ள பணிகள் முதலில் நடைபெறும். அதனையொட்டி மற்ற 5 வாக்குச் சாவடிகளுக்கான ஒப்புகைச் சீட்டு எண்ணும் பணி நடைபெறும். இவ்வாறுஅந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
திருப்பரங்குன்றம் வழக்கு: ராம ரவிக்குமார் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு
08 Jan 2026மதுரை, திருப்பரங்குன்றம் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் ராம ரவிக்குமார் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
-
பொங்கல் பரிசு தொகை டோக்கன் வாங்காதவர்கள் என்ன செய்யலாம்..?
08 Jan 2026சென்னை, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-01-2026
08 Jan 2026 -
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்பொழுது? அமைச்சர் சேகர்பாபு தகவல்
08 Jan 2026சென்னை, செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
கடலூரில் இன்று நடைபெறுகிறது தே.மு.தி.க. உரிமை மீட்பு மாநாடு: கூட்டணி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
08 Jan 2026கடலூர், கடலூரில் தே.மு.தி.க. உரிமை மீட்பு மாநாடு நடைபெறுகிறது. இதில் கூட்டணி குறிதது அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டம் நிச்சயம் வெற்றி பெறும்: அமைச்சர் ரகுபதி நம்பிக்கை
08 Jan 2026சென்னை, உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமி அலறுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் ரகுபதி, இந்த திட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அவ
-
ஜன நாயகன் திரைப்படத்தை திரையிட தி.மு.க. கூட்டணி கட்சிகள் எதிர்ப்பா..? மதுரையில் வைகோ பேட்டி
08 Jan 2026மதுரை, ஜன நாயகன் படத்தை திரையிட தி.மு.க. அரசு கூட்டணி கட்சிகள் எதிர்க்கவில்லை என்று வைகே கூறினார்.
-
பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி குறித்து அ.தி.மு.க. பேச்சுவரத்தை: டெல்லியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
08 Jan 2026புதுடெல்லி, பா.ம.க.வைத் தொடர்ந்து இன்னும் பல கட்சிகள் எங்களுடன் வந்து இணையவுள்ளார்கள்.
-
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கும் மசோதாவுக்கு அதிபர் ட்ரம்ப் ஒப்புதல்
08 Jan 2026வாஷிங்டன், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
-
சென்னையில் ஐ.டி.-டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் மாநாடு: ரூ.8,920 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
08 Jan 2026சென்னை, சென்னையில் ஐ.டி.-டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் நடைபெற்ற மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.8,920 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைய
-
நான் தலையிடாவிட்டால் ரஷ்யா உக்ரைனை கைப்பற்றியிருக்கும்: அதிபர் ட்ரம்ப் தகவல்
08 Jan 2026வாஷிங்டன், நான் தலையிடாவிட்டால் ரஷ்யா உக்ரைனை கைப்பற்றியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
சிவகங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி: அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு
08 Jan 2026மதுரை, சிவகங்கையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான இடம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
ஆஷஸ் தொடரில் அதிக விக்கெட்டுகள்: மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை
08 Jan 2026சிட்னி, ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆஷஸ் தொடரில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
-
தை பிறந்தால் வழிபிறக்கும்: கூட்டணி குறித்து ஓ.பி.எஸ். விளக்கம்
08 Jan 2026சென்னை, ஓ.பன்னீர் செல்வம் கூட்டணி குறிதது தைபிறந்தால் வழிபிறக்கு என்று கூறினார்.
-
3 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை சென்னை ஆலந்தூரில் துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
08 Jan 2026சென்னை, சென்னை ஆலந்தூரில் ரூ.3 ஆயிரம் ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
-
ஞாயிற்றுக்கிழமையான வரும் பிப்ரவரி 1-ல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய பார்லி. குழு பரிந்துரை
08 Jan 2026புதுடெல்லி, ஞாயிற்றுக்கிழமையான பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய பாராளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கணினிகள் உள்ளிட்ட தொழில்நுட்ப பொருட்களை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்ய சீனா திடீர் தடை
08 Jan 2026பீஜிங், சீனாவில் இருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதியாகும் ராணுவ தொழில்நுட்பங்களான அணுசக்தி உபகரணங்கள், மின்னணு பொருட்கள், கணினிகள், விமான பொருட்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப பொருட
-
மர்ம நபர்களால் வங்காளதேசம் தேசிய கட்சியின் இளைஞர் தலைவர் படுகொலை
08 Jan 2026டாக்கா, மர்ம நபர்களால் வங்காளதேசம் தேசிய கட்சியின் இளைஞர் தலைவர் படுகொலை செய்யப்பட்டார்.
-
மேலும் வலுப்பெற்ற தாழ்வு மண்டலம்: திருவாரூர், நாகப்பட்டினத்தில் இன்று மிக கனமழை பெய்யும்
08 Jan 2026சென்னை, தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒரு சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (ஜன.
-
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியா? ரிலையன்ஸ் விளக்கம்
08 Jan 2026புதுடெல்லி, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி கிடையாது என ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
-
ஆர்டர்லி முறையை ஒழிக்க கலெக்டர் தலைமையில் மாவட்டம்தோறும் குழு தமிழ்நாட அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
08 Jan 2026சென்னை, ஆர்டர்லி முறையை ஒழிக்க மாவட்டம் தோறும் கலெக்டர் தலைமையில் குழு அமைக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.
-
பா.ம.க. சார்பில் கூட்டணி பேச அன்புமணிக்கு தகுதியில்லை : ராமதாஸ் பேட்டி
08 Jan 2026விழுப்புரம், பா.ம.க.
-
முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் வரும் ஏப்ரல் 1-ம் தேதி தொடக்கம்
08 Jan 2026புதுடெல்லி, முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியான வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் கணக்கெடுக்கும் பணிகள் ஏப்ரல் 1-ந் தேதி தொடங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு
-
ராமேசுவரம்-தாம்பரம் சிறப்பு ரெயிலில் கூடுதல் பெட்டிகள்
08 Jan 2026திருச்சி, ராமேசுவரம் - தாம்பரம் சிறப்பு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணக்கப்பட்டுள்ளது.
-
மதுரையில் 3 ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், வீரர்களுக்கான இணையதள பதிவு நிறைவு
08 Jan 2026மதுரை, மதுரை மாவட்டத்தில் நடைபெறும் 3 ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான இணையதள பதிவு நேற்றுடன் முடிவடைந்தது.


