எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : ராமேஸ்வரத்தில் குருநானக் நினைவை போற்றும் வகையில் மையம் அமைக்க இடம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
மகான் குருநானக்கின் 550 - வது ஜெயந்தி விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-
சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவரும், 10 சீக்கிய மத குருக்களில், முதன்மையானவருமான குருநானக் தேவ் ஜி-யின் 550 - வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதில் நான் பெருமைப்படுகின்றேன். மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். குருநானக் அவர்களின் பிறந்தநாள், ஒவ்வொரு வருடமும் நவம்பர் 12ஆம் நாள் “குருநானக் ஜெயந்தி” மற்றும் குருநானக் தேவ் பிரகாஷ் திவஸ்’’ என விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை வழங்கிய சீக்கிய சகோதர சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உலகில் ஏறக்குறைய 270 லட்சம் சீக்கியர்கள் வாழ்கின்றனர். இது உலக மக்கள் தொகையில் 0.39 சதவீதம் ஆகும். இந்தியாவில் 190 லட்சம் சீக்கியர்கள் வாழ்கின்றனர். இது இந்திய மக்கள் தொகையில் 2 சதவீதம் ஆகும். சீக்கியர்கள் கொள்கை ரீதியாக, நம்பகமான, விசுவாசமான, தேசபக்தி மிகுந்த கடின உழைப்பாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சீக்கியர்களின் பங்கு மிக முக்கியமானது.சீக்கிய மதம் நாடு, மொழி மற்றும் இனப்பாகுபாடுகளைத் தாண்டி, மனித இனத்திற்கு சிறந்த நெறிமுறைகளை வழங்கியுள்ளது. மதசார்பற்ற வாழ்க்கையை ஆன்மீக வாழ்க்கையோடு இணைந்து வாழ வேண்டும் எனவும், இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை அறிந்து, இறைவனை அடைய முயல்வதே மனித வாழ்வின் குறிக்கோள் எனவும் சீக்கிய மதம் போதிக்கிறது.
மனித வாழ்க்கையில் எந்த ஒரு மனிதனையும் பொருளாதார ஏற்றத்தாழ்வு பார்க்காமல், சமமாகக் கருத வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது. இதனைப் போதிக்கும் வகையில் அனைத்து குருத்வாராக்களிலும் நடத்தப்படும் “லங்கார்’, அனைவருக்கும் ஒரே வகையான உணவு வழங்கும் நிகழ்ச்சியானது சிறப்புமிக்கது. குருநானக் தேவ்ஜி 1499 -ம் ஆண்டு தன்னுடைய 30 - வது வயதில் ஞானம் பெற்று தெய்வீக நிலையை அடைந்தார். தன்னுடைய போதனைகளால் மக்களை நல்வழிப்படுத்தி, அவர்களிடையே நிலவி வந்த மூடப் பழக்கவழக்கங்களைக் களைந்தார். பெண்கள் சமுதாயத்தின் கண்கள் எனவும், அவர்களைப் போற்றி மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார். சமத்துவம், சகோதரத்துவம், நற்குணம் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தனித்துவம் வாய்ந்த ஆன்மீக, சமூக, அரசியல் தளத்தை உருவாக்கி நேர்மையாக வாழவேண்டும் என குருநானக் போதித்துள்ளார். குருநானக்கின் வாழ்வியல் நெறிமுறைகளைப் பின்பற்றி நடப்போம் எனக் கூறி, குருநானக் ஜெயந்தி நாளான இன்று அவரை வணங்கி, நான் பங்கேற்பதற்கு வாய்ப்பு வழங்கிய அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை மற்றும் தமிழகத்தில் வாழும் சீக்கிய சகோதரர்கள், பல்வேறு கோரிக்கைகளை என்னிடம் வைத்துள்ளார்கள். அவற்றுள் ராமேஸ்வரத்தில், மகான் குருநானக் அவர்கள் ராமேஸ்வரத்திற்கு புனித யாத்திரை மேற்கொண்ட நினைவைப் போற்றும் வகையில் ‘மையம்’ ஒன்று அமைப்பதற்கு இடம் தேவை என்று கேட்டுள்ளீர்கள். அவர்களுடைய கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசால் மையம் ஒன்று அமைக்க இடம் வழங்கப்படும். மற்ற கோரிக்கைகள் அனைத்தும் அரசினுடைய பரிசீலினையில் இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் வாழ்கின்ற அனைத்து சீக்கிய சகோதர, சகோதரிகளுக்கும் தமிழக மக்கள் என்றைக்கும் துணை நிற்பார்கள், தமிழ்நாடு அரசும் அவர்களுக்குத் துணை நிற்கும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தமிழக சட்டசபை இன்று கூடுகிறது
19 Jan 2026சென்னை, பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்ட சபை இன்று கூடுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி.
-
வரும் 22-ம் தேதி அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
19 Jan 2026சென்னை, மத்திய அமைச்சரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பா.ஜ.க. பொறுப்பாளருமான பியூஸ் கோயல் நாளை (புதன்கிழமை) சென்னைக்கு வருகை தரவுள்ளார்.
-
டெல்லியில் லேசான நிலநடுக்கம்
19 Jan 2026புதுடெல்லி, டெல்லியில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
தொடர்ந்து 4-வது ஆண்டாக சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவு
19 Jan 2026பெய்ஜிங், சீனாவில் தொடர்ந்து 4-வது ஆண்டாக குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவை கண்டுள்ளது. இது தொடர்பாக அரசு அறிவித்த பல்வேறு திட்டங்கள் பலனற்று போயின.
-
லடாக்கில் நிலநடுக்கம்
19 Jan 2026புதுடெல்லி, லே லடாக் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
நெம்மேலியில் ரூ.342.6 கோடியில் புதிதாக அமைகிறது நீர்த்தேக்கம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
19 Jan 2026செங்கல்பட்டு, 1.6 டி.எம்.சி.
-
குடியரசு தினவிழா அணிவகுப்பு ஒத்திகை: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
19 Jan 2026சென்னை, குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –19-01-2026
19 Jan 2026 -
பாகிஸ்தானில் பயங்கரம்: வணிக வளாக திடீர் தீ விபத்தில் 14 பேர் பலி
19 Jan 2026கராச்சி, பாகிஸ்தானில் நாட்டில் வணிக வளாக ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 14 பேர் பலியான சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30 வரை அவகாசம் நீட்டிப்பு
19 Jan 2026சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான காலஅவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
நெம்மேலியில் புதிதாக அமையவுள்ள 'மாமல்லன்' ஏரி மூலம் 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
19 Jan 2026மாமல்லபுரம், 69 ஏரிகளில் இருந்து வரும் உபரிநீரை சேமித்து மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் புதிதாக அமையவுள்ள மாமல்லன் ஏரி மூலம் 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியும
-
ஸ்பெயின் ரயில் விபத்தில் உயிரிழப்பு 21 ஆக உயர்வு
19 Jan 2026மாட்ரிட், ஸ்பெயின் நாட்டில் நடந்த ரயில் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
-
அமெரிக்காவின் நலனுக்கு எது தேவையோ அதை செய்வேன்: அதிபர் டெனால்ட் ட்ரம்ப் அதிரடி முடிவு
19 Jan 2026நியூயார்க், இனி அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவின் நலனுக்கு எது தேவையோ அதைச் செய்வதில் கவனம் செலுத
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: விஜய்யிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் அடுக்கடுக்கான தொடர் கேள்வி: விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய திட்டம்
19 Jan 2026புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் 2-வது முறையாக நேரில் ஆஜரான த.வெ.க. தலைவர் விஜய்யிடம் தாமதமாக வர காரணம் என்ன? உள்ளிட்ட அடுக்கடுக்கான தொடர் கேள்விகளை சி.பி.ஐ.
-
கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்: கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்
19 Jan 2026சென்னை, செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு, கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றுவரும் கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம் கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில
-
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றம்: 71 புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம்
19 Jan 2026சென்னை, தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பு ரீதியான 71 மாவட்டங்களுக்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
19 Jan 2026சென்னை, சென்னையில் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை காலை வணிகம் தொடங்கியதும், ஆபரணத் தங்கம் விலை மற்றும் வெள்ளி விலைகள் உயர்ந்து விற்பனையானது.
-
பா.ஜ. புதிய தேசிய தலைவரை தேர்வு செய்ய இன்று தேர்தல்
19 Jan 2026புதுடெல்லி, பா.ஜ. புதிய தேசிய தலைவரை தேர்வு செய்ய இன்று தேர்தல் நடக்கிறது. இன்றே புதிய தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகிறது.
-
செர்பியா நாட்டில் ஊழலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி
19 Jan 2026நோவி சாத், செர்பியா அரசில் ஊழலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி நடத்தினர்.
-
பனையூரில் இன்று நடைபெறுகிறது 12 பேர் அடங்கிய த.வெ.க.வின் தேர்தல் அறிக்கை குழு கூட்டம்
19 Jan 2026சென்னை, பனையூரில் இன்று நடைபெறுகிறது த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு கூட்டம்.
-
திபெத்தில் நிலநடுக்கம்
19 Jan 2026பெய்ஜிங், திபெத்தில் ரிக்டர் 4 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பா.ம.க. எங்களுக்கே சொந்தம்: ஐகோர்ட்டில் ராமதாஸ் வழக்கு
19 Jan 2026சென்னை, பா.ம.க. கட்சி விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
-
இ.பி.எஸ்.சுடன் தனியரசு சந்திப்பு?
19 Jan 2026சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு சந்தித்து பேசினார்.
-
காஸா தொடர்பான அமைதி வாரியம்: இந்தியாவுக்கு ட்ரம்ப் அழைப்பு
19 Jan 2026நியூயார்க், காஸாவில் மறுசீரமைப்புக்காகவும் அமைதியை நிலைநாட்டவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அமைதி வாரியத்தில் சேர இந்தியாவுக்கு அமெரிக்
-
அவதூறு வழக்கில் கோர்ட்டில் நேரில் ஆஜராகாத ராகுல் காந்தி விசாரணை ஒத்திவைப்பு
19 Jan 2026லக்னோ, பா.ஜ.க. நிர்வாகி தொடர்ந்த வழக்கில் ராகுல் காந்தி கோர்ட்டில் ஆஜராகததால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.


