முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திடீர் வெள்ளப்பெருக்கு: ஜம்முவில் 3 பேர் பலி

வியாழக்கிழமை, 26 ஜூன் 2025      இந்தியா
Suicide 2023 04 29

Source: provided

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் மீட்கப்பட்டனர்.

ஜம்முவின் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டது.மேலும் வானிலை ஆய்வு மையம், ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் கனமழை எதிர்பார்க்கப்படுவதாக எச்சரித்துள்ளது. இது தொடர்பாக, அதிகாரிகள் கூறியதாவது:-

ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி, பூஞ்ச், தோடா மற்றும் கதுவா மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இன்று மேக வெடிப்பு மற்றும் பலத்த மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 3 பேர் இறந்தனர். இதுவரை 4 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 

ரஜோரியின் கலகோட் துணைப்பிரிவில் உள்ள சியால்சுய் மௌ கிராமத்தில் உள்ள ஒரு ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஷகாபத் அலி 14, மற்றும் அவரது உறவினர் சபீனா கவுசர் 11, ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். திடீர் வெள்ளத்தில் சிக்கிய சைமா 10, வை, உள்ளூர் தன்னார்வலர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் ஆபத்தான பகுதிகளில் இருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து