எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காரைக்குடி: - காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழக நாட்டு நலப் பணித்திட்டத்தின் சார்பில் “நாட்டு நலப் பணித் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்” குறித்த ஒருநாள் கருத்தரங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
அழகப்பாபல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையாஅவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று உரையாற்றுகையில், ஆரம்பத்தில் இந்தியாவில் 37 பல்கலைக்கழகங்களில் மட்டுமே தொடங்கப்பட்ட நாட்டு நலப் பணித்;திட்டம், தற்போது இந்தியாவில் 790 பல்கலைக்கழகங்களில் செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது என்றார். மாணவர்கள் கிராமத்தில் வசிக்கும் மக்களை பற்றிபுரிந்து கொள்ளுதல்;, பிரச்சனைகள் மற்றும் தேவைகளை அறிந்து அவர்களுக்கு உதவி செய்தல் ஆகியவற்றிற்கு நாட்டு நலப் பணித்திட்டம் உதவி புரிகிறது. மாணவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும், தலைமைப் பண்பைவளர்க்கவும் நாட்டுநலப்பணித்திட்ட முகாம்கள் வாய்ப்பாக அமைகின்றன. மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் போது அவர்களே அனைத்தையும் கற்றுக் கொள்வார்கள். பிறரோடு ஒத்துப்போதல், இணைந்து பணியாற்றுதல், உணர்ச்சி வசப்படும் போது தங்களை கட்டுப்படுத்திக் கொள்ளுதல் போன்றவற்றை நாட்டுநலப் பணித்திட்ட பணிகள் மூலம் மாணவர்கள் கற்றுக் கொள்கிறார்கள்.
சமுதாயசேவை பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில்,அவர்களுக்கு சிறந்த பயிற்சியினை அளிப்பது இந்த நாட்டு நலப்பணித்திட்டத்தின் முக்கிய பணியாகும். சமுதாயத்திற்கு சேவையாற்றும் வகையில் மாணவர்களை உருவாக்குவதே கல்வியின் தலையாய நோக்கமாகும். இத்தகைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு நாட்டுநலப் பணித் திட்டம் உறுதுணையாக உள்ளது. இந்த நாட்டுநலப் பணித்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்கு நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் தாமாகவே முன்வரவேண்டும் எனகேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை நாட்டுநலப் பணித்திட்ட மண்டல இயக்குநர் திரு. சாமுவேல் செல்லையா, தொடக்க உரையாற்றினார். அவர் தம் உரையில், ஒருவரது வார்த்தையும், செயலுமே மனிதனின் அலங்காரமாக ஆகுமேதவிர, பிறஎதுவும் அலங்காரமாக ஆகாது. ஒவ்வொருவரும் முதலில் அவரவரை நேசிக்க வேண்டும். அதன் மூலமாகவே அவர்கள் வாழ்க்கையை நேசிக்க முடியும். ஆசிரியர்களே கல்வி நிறுவனங்களுக்கு தூண் போன்றவர்கள். ஆசிரியர்கள் அறியாமையையும், இருளையும், நீக்கி வெளிச்சம் ஏற்படுத்துபவர்கள். நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்களாகிய ஆசிரியர்கள் வார்த்தையினாலும், செயலினாலுமே மற்றவர்களை கவரவேண்டும். அதற்கு ,நாட்டுநலப் பணித்திட்டம் வாய்ப்பாக அமைகிறது. மாணவர்களை நாட்டு நலப் பணித்திட்டத்தில் ஈடுபடுத்தி அவர்களை பொது நலத்தில் அக்கறை உடையவர்களாக ஆக்கவேண்டியது நம் அனைவரது கடமையாகும் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில், இராமநாதபுரம் சார்புநீதிபதிசி. சொர்ணகுமார் கருத்துரை வழங்கினார். அவர் தம் உரையில், மாவட்டசட்டப் பணி ஆணைக்கு ழுநாட்டுநலப் பணித்திட்டத்துடன் இணைந்து கிராமங்களில் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டுமென்று உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் வழிகாட்டியுள்ளது. அவ்வகையில், நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர்கள் தத்தம் பகுதிகளில் சட்டவிழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ,நாட்டுநலப் பணித்திட்ட தொண்டர்களை ஈடுபடுத்தவேண்டும் எனகேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் அவினாசிலிங்கம் பல்கலைக்கழக நாட்டுநலப்பணித்திட்ட பயிற்சிமைய ஒருங்கிணைப்பாளர் திருமதி. ஆர்.ராணி வாழ்த்துரை வழங்கினார்.
அழகப்பாபல்கலைக்கழகத்தில் செயல்படும் 96 அலகுகளுக்கான நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
முன்னதாக, நாட்டுநலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு. இராசாராம் வரவேற்புரையாற்றினார். நிறைவாக, நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர் முனைவர் பி. சீனிவாசன் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-11-2025.
15 Nov 2025 -
பொங்கல் பண்டிகை: சில நிமிடங்களில் விற்று தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்
15 Nov 2025சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.
-
பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: டி.டி.வி.தினகரன்
15 Nov 2025சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க - த.வெ.க இடையேதான் போட்டி என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.
-
திருநள்ளாறு கோவில் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பக்தர்கள் அவதி
15 Nov 2025புதுச்சேரி : திருநள்ளாறு கோவில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பக்தர்கள் அவதியடைந்தனர்.
-
நைஜீரியாவில் தொடக்கப் பள்ளிகளில் தாய்மொழி கட்டாய கல்வி சட்டம் ரத்து
15 Nov 2025அபுஜா, நைஜீரியாவில் தொடக்க பள்ளிகளில் தாய்மொழி கட்டாய கல்வி சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
இந்தியாவில் தொழில்மயமான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
15 Nov 2025சென்னை, இந்தியாவில் தொழில்மயமான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.
-
பீகார் சட்டசபை தேர்தல்: ஆர்.ஜே.டி 23 சதவீத வாக்குகளை பெற்று முதலிடம்
15 Nov 2025பாட்னா : பீகாரில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் வெளியாகியுள்ளது.
-
மர்ம பலூன்களை பறக்கவிட்ட விவகாரம்: பெலாரஸ் எல்லையை மூடிய லித்துவேனியா
15 Nov 2025வில்னியஸ், தங்கள் எல்லைக்குள் மர்ம பலூன்களை பறக்கவிட்ட விவகாரத்தை அடுத்து பெலாரஸ் எல்லையை மூடியது லித்துவேனியா.
-
எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் த.வெ.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்
15 Nov 2025சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கண்டித்து த.வெ.க. சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருக்கிறது.
-
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
15 Nov 2025சென்னை : எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை நடைபெறவுள்ளது.
-
ரஜினியின் 173-ம் படத்தில் இருந்து இயக்கனர் சுந்தர் சி விலகல் ஏன்..? கமல்ஹாசன் பதில்
15 Nov 2025சென்னை, ரஜினிக்கு கதை பிடிக்கும் வரையில் கதை கேட்டுக்கொண்டே இருப்போம் என அவரது 173-வது திரைப்படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
-
ஐ.நா. பொதுச்செயலாளருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
15 Nov 2025வாஷிங்டன், ஐ.நா. பொதுச்செயலாளரை சந்தித்து பேசிய இந்திய வெளியுறவத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவிற்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார்.
-
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் எனக்கு ஆச்சரியமளிக்கிறது: ராகுல்
15 Nov 2025பாட்னா, பீகார் தேர்தல் முடிவுகள் எனக்கு ஆச்சரியமளிக்கிறது என்று ராகுல் காந்தி கூறினார்.
-
டெல்லியில் காற்று மாசு; சுப்ரீம் கோர்ட் கவலை
15 Nov 2025புதுடெல்லி, டெல்லியில் காற்று மாசு குறித்து சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்துள்ள நிலையில், காற்று மாசு வழக்கில் வழக்கறிஞர்கள் காணொலி காட்சி மூலம் ஆஜராக அறிவுறுத்தியுள்ளது
-
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை உணவுத்திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
15 Nov 2025சென்னை, சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான உணவுத்திட்டத்தை சனிக்கிழமை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், டிசம்பர் முதல் தமிழகத்தில் அனைத்து மாநகராட்சி,
-
காவல் நிலைய குண்டுவெடிப்பு எதிர்பாராத நிகழ்வு: மத்திய அரசு
15 Nov 2025புதுடெல்லி : ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு எதிர்பாராத நிகழ்வு என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஜம்மு காஷ்மீர் பிரிவு இணை செயலாளர்
-
எஸ்.ஐ.ஆர். தொடர்பான கூட்டங்களுக்கு த.வெ.க.வையும் அழைக்க வேண்டும்;: தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கடிதம்
15 Nov 2025சென்னை : தேர்தல் ஆணையம் நடத்தும் கூட்டங்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கடிதம் எழு
-
4 ரிக்டர் அளவில் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
15 Nov 2025காபுல், ஆப்கானிஸ்தானில் 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.
-
இந்தியாவுடன் இந்த ஆண்டு இறுதிக்குள் வர்த்தக ஒப்பந்தம் : அமெரிக்க அதிகாரி தகவல்
15 Nov 2025வாஷிங்டன் : இந்தியாவுடன் இந்த ஆண்டு இறுதிக்குள் வர்த்தக ஒப்பந்தம்; அமெரிக்க அதிகாரி தகவல் தெரிவித்தார்.
-
தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வு 2-ம் தாள் தேர்வு இன்று நடைபெறுகிறது
15 Nov 2025சென்னை : தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வின் 2-ம் தாள் தேர்வு இன்று நடைபெறுகிறது.
-
பெண்களின் சுதந்திரம் கேள்விக்குறி: நடவடிக்கை எடுக்க வி.எச்.பி. வலியுறுத்தல்
15 Nov 2025சென்னை : தமிழகத்தில் பெண்களின் சுதந்திரம் கேள்விக்குறியாக உள்ளதையடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வி.எச்.பி. வலியுத்தினார்.
-
1 கோடி பேர் நோயால் பாதிப்பு: தமிழகத்தில் நீரிழிவு நோய் பாதிப்பை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
15 Nov 2025சென்னை, தமிழகத்தில் நீரிழிவு நோய் பாதிப்பை தடுக்க தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் மூலம் தேர்தல் ஆணையத்தின் தவறான செயல்கள் வெளிப்பட்டுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
15 Nov 2025சென்னை, பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் மூலம் தேர்தல் ஆணையத்தின் தவறான செயல்கள் வெளிப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இது அனைவருக்குமான பாடம் என்
-
ரூ.1.06 கோடி மதிப்பிலான போதைப்பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்: ஒருவர் கைது
15 Nov 2025சென்னை சென்னை விமான நிலையத்தில் ரூ.1.06 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து ஒருவர் கைது செய்தனர்.
-
வியட்நாமில் கனமழைக்கு 9 பேர் பலி
15 Nov 2025ஹனோய், வியட்நாமில் கனமழைக்கு 9 பேர் உயிரிழந்துள்ளனர்.



