எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட தொழில் மையம் சார்பாக மத்திய அரசின் தேசிய பட்டியலினர் மற்றும் பழங்குடியினர் மைய திட்டத்தின் மூலம் பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய அரசு, அரசு சார்பு நிறுவனங்களில் கொள்முதல் செய்யக்கூடிய பொருட்களின் 20மூ குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட வேண்டும் என்றும் 4மூ பட்டியலின மற்றும் பழங்குடியின நிறுவனங்களிடமிருந்து பெறப்பட வேண்டுமென்ற திட்டத்தினை பிரபலப்படுத்த கலெக்டர் இல.சுப்பிரமணியன், தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது.இக்கூட்டத்தில், கலெக்டர் இல.சுப்பிரமணியன், தெரிவித்ததாவது:
கருத்தரங்கம்
இக்கருத்தரங்கில் குறிப்பிடப்படும் பல்வேறு கருத்துக்களை தொழில் முனைவோர் கவனமுடன் அறிந்து, முன்னேற வேண்டும். இக்கருத்தரங்கத்தின் நோக்கம், மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் கலந்து கொண்டு, பயனடைய வேண்டுமென்பதே ஆகும். பழங்குடியின நிறுவனங்களிடமிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களை அதிகமாக கொள்முதல் செய்து, அதன் மூலம் பழங்குடியின நிறுவனங்கள் மென்மேலும் வளர வேண்டும் என்பதே இக்கருத்தரங்கின் நோக்கமாகும். மத்திய அரசு கொள்முதல் செய்யும் பொருட்களில் கட்டாயமாக 4மூ பொருட்களை பட்டியலின மற்றும் பழங்குடியின நிறுவனங்களிடமிருந்து வாங்க வேண்டும்.பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் தங்கள் நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சரியான முறையில் விற்பனை செய்யமுடியாமல், அந்நிறுவனங்களை மூடிவிடும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற இன்னல்களை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே, மத்திய அரசு இத்திட்டத்தை கொண்டுவந்துள்ளது. எனவே, பட்டியலின மற்றும் பழங்குடியின நிறுவனங்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை கட்டாயமாக ஒப்பந்தப்புள்ளிகள் வெளியிடும்போது அதில் அவர்களும் கலந்து கொண்டு தங்கள் பொருட்களை கொள்முதல் செய்ய உரிமையோடு கோர வேண்டும்.அவ்வாறு கொள்முதல் செய்யப்பட வேண்டுமெனில், பட்டியலின மற்றும் பழங்குடியின நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை, மற்ற நிறுவனங்களுடன் போட்டியிடும் அளவிற்கு தரமாகவும், சிறப்பாகவும் உற்பத்தி செய்ய வேண்டும். தங்கள் பொருளை மற்றவர்கள் தேடி வந்து வாங்கும் அளவிற்கு தரமாக உற்பத்தி செய்யும் தகுதியை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். அரசு சார்பாக நடத்தப்படும் பல்வேறு தொழில் முனைவோர் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு, தொழில் செய்வதற்கான திறனை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு வளர்த்துக் கொண்டால், நாம் தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் கடன் திட்டங்களின் மூலம் கடன் பெற்று பயனடையலாம்.ஒவ்வொரு மாதமும் நடைபெறும் வங்கியாளர்கள் கூட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு ஏற்ப வேலையற்ற இளைஞர்களுக்கு தொழில் தொடங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ், ரூ.10 இலட்சம் வரை வங்கிகள் மூலம் கடன் வழங்கப்பட்டு, தமிழக அரசின் மான்யமாக 25 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டங்களின் கீழ் பல்வேறு இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்.புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.1 கோடி வரை கடனுதவி பெறலாம். இதில் 25 சதவீதம் அரசு மானியமாக வழங்கப்படுகிறது. பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ், ரூ.25 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இதில் ஊரக பகுதியில் அமையும் தொழில்களுக்கு 35 சவீதமும், நகர பகுதிகளில் அமையும் தொழில்களுக்கு 25 சதவீதமும் மான்யமாக வழங்கப்படுகிறது. இவ்வாறு அரசு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. இத்திட்டங்களின் மூலம் கடன் பெற்று இளைஞர்கள் தொழில் தொடங்கி சிறந்த தொழில் முனைவோர்களாக உருவாக வேண்டுமென கலெக்டர் இல.சுப்பிரமணியன், தெரிவித்தார்.தொடர்ந்து, சிறந்த தொழில் முனைவோர்களுக்கு கலெக்டர் இல.சுப்பிரமணியன், விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.இக்கருத்தரங்கில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராஜகணேஷ், தமிழ்நாடு தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு தலைவர் லெனின், முன்னோடி வங்கி மேலாளர் சேதுராமன், தாட்கோ மாவட்ட மேலாளர் விஸ்வநாதன், என்எஸ்ஐசி புதுச்சேரி கிளை மேலாளர் ரங்கநாதன், சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், கடலூர் சிட்கோ கிளை மேலாளர் செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள், தொழில் முனைவோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தமிழக சட்டசபை இன்று கூடுகிறது
19 Jan 2026சென்னை, பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்ட சபை இன்று கூடுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி.
-
வரும் 22-ம் தேதி அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
19 Jan 2026சென்னை, மத்திய அமைச்சரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பா.ஜ.க. பொறுப்பாளருமான பியூஸ் கோயல் நாளை (புதன்கிழமை) சென்னைக்கு வருகை தரவுள்ளார்.
-
டெல்லியில் லேசான நிலநடுக்கம்
19 Jan 2026புதுடெல்லி, டெல்லியில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
தொடர்ந்து 4-வது ஆண்டாக சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவு
19 Jan 2026பெய்ஜிங், சீனாவில் தொடர்ந்து 4-வது ஆண்டாக குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவை கண்டுள்ளது. இது தொடர்பாக அரசு அறிவித்த பல்வேறு திட்டங்கள் பலனற்று போயின.
-
லடாக்கில் நிலநடுக்கம்
19 Jan 2026புதுடெல்லி, லே லடாக் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
நெம்மேலியில் ரூ.342.6 கோடியில் புதிதாக அமைகிறது நீர்த்தேக்கம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
19 Jan 2026செங்கல்பட்டு, 1.6 டி.எம்.சி.
-
குடியரசு தினவிழா அணிவகுப்பு ஒத்திகை: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
19 Jan 2026சென்னை, குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –19-01-2026
19 Jan 2026 -
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30 வரை அவகாசம் நீட்டிப்பு
19 Jan 2026சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான காலஅவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தானில் பயங்கரம்: வணிக வளாக திடீர் தீ விபத்தில் 14 பேர் பலி
19 Jan 2026கராச்சி, பாகிஸ்தானில் நாட்டில் வணிக வளாக ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 14 பேர் பலியான சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நெம்மேலியில் புதிதாக அமையவுள்ள 'மாமல்லன்' ஏரி மூலம் 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
19 Jan 2026மாமல்லபுரம், 69 ஏரிகளில் இருந்து வரும் உபரிநீரை சேமித்து மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் புதிதாக அமையவுள்ள மாமல்லன் ஏரி மூலம் 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியும
-
ஸ்பெயின் ரயில் விபத்தில் உயிரிழப்பு 21 ஆக உயர்வு
19 Jan 2026மாட்ரிட், ஸ்பெயின் நாட்டில் நடந்த ரயில் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
-
அமெரிக்காவின் நலனுக்கு எது தேவையோ அதை செய்வேன்: அதிபர் டெனால்ட் ட்ரம்ப் அதிரடி முடிவு
19 Jan 2026நியூயார்க், இனி அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவின் நலனுக்கு எது தேவையோ அதைச் செய்வதில் கவனம் செலுத
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: விஜய்யிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் அடுக்கடுக்கான தொடர் கேள்வி: விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய திட்டம்
19 Jan 2026புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் 2-வது முறையாக நேரில் ஆஜரான த.வெ.க. தலைவர் விஜய்யிடம் தாமதமாக வர காரணம் என்ன? உள்ளிட்ட அடுக்கடுக்கான தொடர் கேள்விகளை சி.பி.ஐ.
-
கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்: கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்
19 Jan 2026சென்னை, செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு, கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றுவரும் கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம் கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில
-
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றம்: 71 புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம்
19 Jan 2026சென்னை, தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பு ரீதியான 71 மாவட்டங்களுக்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
19 Jan 2026சென்னை, சென்னையில் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை காலை வணிகம் தொடங்கியதும், ஆபரணத் தங்கம் விலை மற்றும் வெள்ளி விலைகள் உயர்ந்து விற்பனையானது.
-
திபெத்தில் நிலநடுக்கம்
19 Jan 2026பெய்ஜிங், திபெத்தில் ரிக்டர் 4 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பா.ஜ. புதிய தேசிய தலைவரை தேர்வு செய்ய இன்று தேர்தல்
19 Jan 2026புதுடெல்லி, பா.ஜ. புதிய தேசிய தலைவரை தேர்வு செய்ய இன்று தேர்தல் நடக்கிறது. இன்றே புதிய தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகிறது.
-
செர்பியா நாட்டில் ஊழலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி
19 Jan 2026நோவி சாத், செர்பியா அரசில் ஊழலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி நடத்தினர்.
-
பனையூரில் இன்று நடைபெறுகிறது 12 பேர் அடங்கிய த.வெ.க.வின் தேர்தல் அறிக்கை குழு கூட்டம்
19 Jan 2026சென்னை, பனையூரில் இன்று நடைபெறுகிறது த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு கூட்டம்.
-
பா.ம.க. எங்களுக்கே சொந்தம்: ஐகோர்ட்டில் ராமதாஸ் வழக்கு
19 Jan 2026சென்னை, பா.ம.க. கட்சி விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
-
காஸா தொடர்பான அமைதி வாரியம்: இந்தியாவுக்கு ட்ரம்ப் அழைப்பு
19 Jan 2026நியூயார்க், காஸாவில் மறுசீரமைப்புக்காகவும் அமைதியை நிலைநாட்டவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அமைதி வாரியத்தில் சேர இந்தியாவுக்கு அமெரிக்
-
இ.பி.எஸ்.சுடன் தனியரசு சந்திப்பு?
19 Jan 2026சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு சந்தித்து பேசினார்.
-
அவதூறு வழக்கில் கோர்ட்டில் நேரில் ஆஜராகாத ராகுல் காந்தி விசாரணை ஒத்திவைப்பு
19 Jan 2026லக்னோ, பா.ஜ.க. நிர்வாகி தொடர்ந்த வழக்கில் ராகுல் காந்தி கோர்ட்டில் ஆஜராகததால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.


