முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பிரசவத்துக்கு முன்பாகவே 21 வாரத்தில் பிறந்த குழந்தை

ஒரு சில குழந்தைகள் பிரசவத்துக்கு முன்பாகவே குறை பிரசவத்தில் பிறப்பதுண்டு. அவை 8 அல்லது 9 மாதத்தில் பிறந்தாலும் போதிய வளர்ச்சி இருந்தால் அவற்றை இன்குபேட்டர் எனப்படும் மருத்து பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து பராமரித்து தேற்றி விடுவர். ஆனால் உலகின் மிகப் பெரிய அதிசயமாக வெறும் 21 வாரத்தில் பிறந்த குழந்தை தற்போது வளர்ச்சி அடைந்து உயிர் பிழைத்துள்ளது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள அலபாமா பகுதியைச் சேர்ந்த தம்பதிக்குத்தான் கடந்த ஆண்டு ஜூலையில் வெறும் 21 வாரத்தில் குழந்தை பிறந்துள்ளது. பிறக்கும் போது அதன் எடை வெறும் 420 கிராம் மட்டுமே. பொதுவாக பிரசவ காலம் என்பது 280 நாட்கள், ஆனால் இந்த குழந்தை 148 நாட்களிலேயே பிறந்து விட்டது. மிகவும் நுட்பமான மருத்துவ கவனிப்பின் மூலம் அந்த குழந்தை தற்போது 16 மாத குழந்தையாக உயிர் பிழைத்துள்ளது. இதில் மற்றொரு அதிசயமாக இரட்டையராக பிறந்த இந்த குழந்தையுடன் பிறந்த மற்றொரு பெண் குழந்தை பிறந்த ஒரு நாளிலேயே இறந்து விட்டது என்பதுதான். இந்த குழந்தையை பிரசவம் பார்த்த டாக்டர் பிரெய்ன் சிம்ஸ் கூறுகையில் எனது 20 ஆண்டுகால மருத்துவ அனுபவத்தில் இப்படி ஒரு சம்பவத்தை நான் பார்த்ததேயில்லை என வியந்துள்ளார். இந்த செய்தி தற்போது உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆன்மீக ஸ்தலம்

தமிழ்நாட்டின் கோரமண்டல கடற்கரையோரம் அமைந்திருக்கும் வேளாங்கன்னி, அனைத்து மதத்தை சேர்ந்த மக்களுக்கும் ஆன்மீகத் ஸ்தலமாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் இந்த வேளாங்கன்னியில் அன்னை மரியாவிற்கு ஒரு மகத்தான பேராலயம் எழுப்பப்பட்டிருக்கிறது. இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படும். நாகப்பட்டினம், தஞ்சாவூர், சென்னை முதலிய பல இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

வியாழனை விட 10 மடங்கு மிகப் பெரிய கோள்

சூரிய மண்டலத்தில் நமக்கு தெரிந்து 9 கோள்கள் உள்ளன. ஆனால் அதையும் தாண்டி பால்வெளி மண்டலத்துக்குள் சென்றால் எண்ணற்ற கோள்களும், நட்சத்திரங்களும் கோடி கணக்கில் கொட்டி கிடக்கின்றன. இயற்கையின் முடிவற்ற ஆச்சரியங்களில் ஒன்றாக பிரபஞ்சம் எப்போதும் திகழ்ந்து வருகிறது. அதற்கு சாட்சியாக தற்போது வியாழனை விட மிகப் பெரிய கோளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த கோள் பூமியிலிருந்து 325 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளதாம். இது வியாழனை விட 10 மடங்கு பெரியது, இதன் எடை ஏறக்குறைய 10 சூரியன்களுக்கு சமம் என்கின்றனர். இது தொடர்பான விஞ்ஞான தகவல்கள் நேச்சர் இதழிலும் வெளியாகி உள்ளன. “b Cen (AB)b" என பெயரிடப்பட்டுள்ள இந்த கோள் தனிப்பட்ட சுற்றுவட்ட பாதையில் சுற்றி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேறென்ன பிரபஞ்சத்தின் ஆச்சரியங்கள் விரிவடைந்து கொண்டே போகின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.

வந்து விட்டது தலைமுடிக்கும் மவுசு கேசத்தில் தயார் செய்த ஆடைகள் டிரெண்டிங்

விலங்குகளின் தோல்களையும், ரோமங்களையும் கொண்டு ஆடைகள் தயார் செய்தது பழைய காலம். பின்னர் பருத்தியையும் மரத்திலான நார்களையும் பயன்படுத்தி ஆடைகள் செய்வது தற்காலம். ஆனால் மனித கேசத்தில் நவீன ஆடைகளை தயாரிப்பதுதான் தற்போது நியு டிரெண்டிங்.  ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் Zsofia Kollar என்பவர்தான் இந்த புதிய ஐடியாவுக்கு சொந்தக்காரி. தற்போது ஜவுளி உற்பத்தியின் வயிற்றை கலக்கியுள்ள இந்த புதிய ஆடை வடிவமைப்பு பிரபலமாகத் தொடங்கியுள்ளது. மேலும் பசுமை ஆடை, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத ஆடை என்ற பெயரில் பல்வேறு ரகங்கள் சந்தையில் குவிந்து வரும் வேளையில் உண்மையிலேயே இது ஒரு மாற்றுதான் என்கிறார் இவர். முடி, அதன் அளவு, நச்சுத்தன்மையற்ற தன்மை, அதிக இழுவிசை வலிமை, வெப்ப இன்சுலேட்டர், நெகிழ்வுத்தன்மை, இலகுரக மற்றும் எண்ணெயை உறிஞ்சும் திறன் ஆகியவற்றின் காரணமாக, ஜவுளி உற்பத்தி முறைக்கு ஒரு சிறந்த சேர்க்கையாக அமைகிறது என்று ஜவுளித்துறையின் தலையில் தூக்கி கல்லை போடுகிறார். ஜவுளி உற்பத்தியால் ஏற்படும் ரசாயன மாசுபாட்டிலிருந்து விலகி இது முற்றிலும் இயற்கையானதாக இருக்கும் என்கிறார். தற்போது இவரது நவீன ஆடை ரகம் ஜெட் வேகத்தில் டிரெண்டாகி வருகிறது.

ஒளிரும் அழகிய தோல் கொண்ட மிகவும் ஆபத்தான அம்புத் தவளை

நச்சு அம்புத் தவளைகள் (Poison dart frog) இத் தவளைகள் கண்கவரும் பிரகாசமான நிறங்களில் காணப்படும். எதிரி விலங்குகளை தாக்கும் ஒரு வகையான கொழகொழப்பான, கொடிய விஷத்தினை தன் முதுகுப்பகுதியில் சுரக்குமாம். இது எதிரிகளை எச்சரிக்கை விடுத்துத் தாக்க பயன்படும் ஒரு கருவி. தவளை சுரக்கும் கொடிய விஷம் கிட்டத்தட்ட 10 மனிதர்களைக் கொல்லக்கூடியதாம். மழைக்காடுகளில் மட்டுமே காணப்படும் இந்த தவளைகள் நச்சு அம்பு தவளைகள் என அழைக்கப்படுகின்றன. மத்திய மற்றும் தென் அமெரிக்கப் பகுதிகளில் 220 இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் மேல் தோலில் அம்புகளை தடவி வேட்டையாட உபயோகித்தனர். இத் தவளைகள் கண்கவரும் பிரகாசமான நிறங்களில் காணப்படும். இந்த நிறம் ஒரு எச்சரிக்கை அடையாளம். மேல் தோலில் உள்ள விஷம் 20,000 எலிகளையும், 10 மனிதர்களையும் கொள்ள கூடியது. அழகென்றாலே ஆபத்து என்பதற்கு மிக சிறந்த உதாரணம் இந்த நச்சு அம்பு தவளைகள் தாம்.

களையெடுக்கும் ரோபோ

தோட்டங்களில் வளரும் களைகளை கொல்லக்கூடிய புதிய ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. டெர்டில் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ முற்றிலும் சூரிய மின்சக்தியில் செயற்படக்கூடியது. இதை பயன்படுத்தி களைகளை கொல்ல முடிவதால் எதிர்காலத்தில் கிருமிநாசினிகள் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என இதை வடிவமைத்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago