கோவிட் பெருந்தொற்று உலகம் முழுவதும் 59 லட்சம் பேர் கடந்தாண்டில் இறந்தனர். ஆனால் அதை காட்டிலும் அதிகமானோர் சுற்றுச்சூழல் மாசால் உயிரிழப்பதாக ஐநா எச்சரித்துள்ளது. சுற்றுச்சூழல் மாசு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 90 லட்சம் சிசுக்கள் குறைபிரசவத்தில் இறந்து போவதாக தெரியவந்துள்ளது. தற்போது இந்த விவகாரம் பூதாகரமெடுத்து வருவதாக ஐநா அலறுகிறது. நீரில் பாதிப்பு, காற்று பாதிப்பு, ரசாயன உரங்கள், பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் அது தொடர்பான ரசாயனங்கள் என சுற்றுச்சூழலுக்கான அச்சுறுத்தல் நீண்ட சங்கிலி தொடர் போல நீண்டு செல்வதாகவும் ஐநா தெரிவித்துள்ளது. இது குறித்து உலக நாடுகள் விரைவில் நடவடிக்கை எடுக்க தவறினால் விளைவுகள் விபரீதமாகும் என்றும் எச்சரித்துள்ளது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
கேஸ் அடுப்புகள் பழசானாலும் சரி, புதுசானாலும் சரி, அவை தொடர்ச்சியாக மீத்தேன் வாயுவை வெளியிடுகின்றன. இந்த தனிமம்தான் இயற்கை எரிவாயு தொகுப்பில் முக்கியமான ஒன்றாகும். தற்போது தோராயமாக நாடு முழுவதும் சுமார 40 மில்லியன் கேஸ் அடுப்புகள் நாள்தோறும் பயன்படுத்தப்படுகின்றன. அதே போல அரை மில்லியன் எரிவாயு வாகனங்கள் சாலையில் பறக்கின்றன. இப்போது நினைத்து பாருங்கள். அவற்றிலிருந்து வெளியாகும் மீத்தேன் அளவு குறித்து. புவிவெப்பமயமாதலுக்கு மிக முக்கிய காரணியாக இது உள்ளது என ஸ்டான்போர்ட் பல்கலை கழகம் மேற்கொண்டுள்ள புதிய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளதாக அதன் விஞ்ஞானிகள் குழு தலைவர் எரிக் லேபெல் (Eric Lebel). இது குறித்து அவர் மேலும் கூறுகையில், வெளியாகும் மீத்தேனில் முக்கால்வாசி பங்கு கேஸ் அடுப்பில் இருந்துதான் வெளியாகிறது என்பதை கண்டறிந்துள்ளோம் என எச்சரிக்கிறார்.
பெங்களூர் விஆர் மாலில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட பாப் (பட்லர் ஒ பிஸ்ட்ரோ)என்கிற ரோபோ உணவு பரிமாறியது. குழந்தைகளை வெகுவாக கவர்ந்த அந்த ரோபோவை உருவாக்கியது சிறுவர்கள்தான் என்பது ஆச்சர்யம். இந்தியாவிலேயே உணவு பரிமாறும் முதல் ரோபோ இதுதான்.
ரஃப்ரீ என்று பெயரிடப்பட்டுள்ள புதிய மாடல் ஸ்மார்ட் போனை சோப்பு போட்டு கழுவி சுத்தப்படுத்தலாம். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யோசெரா என்ற நிறுவனம் இந்த புதிய வகை ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. சூடான தண்ணீரில் கூட ஸ்மார்ட் போனை சுத்தபடுத்தலாம். இந்த மொபைல் நௌவ்கட் இயங்கு தளத்தில் இயங்கும்.
தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு இதோ ஒரு டிப்ஸ். உறங்குவதற்கு முன்பு ஒரு வாழைப்பழமும், வெதுவெதுப்பான பாலும் சாப்பிடுவது நல்ல உறக்கத்தை தரும், காரணம் உறக்கதிற்கான ஹார்மோன் மெலடோனின் மூலம் சிறந்து செயல்படுகிறது. மேலும், பாலில் இருக்கும் டிரிப்டோபென் ஆழ்ந்த உறக்கத்தை நமக்கு தருகிறது.
ஆள் இல்லாத விமானங்களையும், பைலட் இல்லாத விமானங்களையும் தற்போது நாம் கேள்வி பட்டு வருகிறோம். தற்போது காரிலும் ஆட்டோ பைலட் எனப்படும் தானியங்கி கார்கள் வந்து விட்டன. ஆனால் மிகவும் சிக்கலான செயல்பாடுகளை கொண்ட ஹெலிகாப்டர்களை பைலட் இல்லாமல் ஓட்ட முடியுமா என்ற கேள்வி எழுவது இயல்புதான். ஆனால் தற்போது முடியும் என அமெரிக்கா நிரூபித்துள்ளது. பிளாக் ஹாக் ரக ஹெலிகாப்டர்களை முழுக்க முழுக்க பைலட்டே இல்லாமல் ஆட்டானமஸ் முறையில் இயங்கும் வரையில் வடிவமைத்துள்ளது அமெரிக்க ராணுவம். இதற்கான முதல் சோதனை ஓட்டம் கடந்த 5 ஆம் தேதியும் பின்னர் கடந்த 7 தேதியும் நிகழ்த்தி பார்க்கப்பட்டன. இதில் இந்த பைலட் இல்லா ஹெலிகாப்டர் மிகச் சரியாக மேலெழுந்து சென்று பறந்து. மிகச் சரியாக தரையில் வந்து லேண்ட் ஆனது. இனி வருங்காலத்தில் ஆட்டோ பைலட் கார்களை போல ஆட்டோ பைலட் ஹெலிகாப்டர்களும் வானில் வலம் வருவதை பார்க்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –11-02-2026
11 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
10 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
10 Feb 2026- திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மர் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
- இராமேஸ்வரம் சுவாமி வெள்ளி கைலாச வாகனம், அம்பாள் தங்க சிம்ம வாகனம்.
-
இன்றைய நாள் எப்படி?
10 Feb 2026


