பூமிக்கு அருகே சுமார் 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக நெருக்கமாக வால் நட்சத்திரம் ஒன்று வருகிறது. வானின் அரிய நிகழ்வான இதை பார்ப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக இதை கருதலாம். மேலும் இதை வெறும் கண்ணால் பார்க்க முடியும் என வானியியலாளர்கள் கூறுகின்றனர். இந்த வால் நட்சத்திரம் அரிசோனா பல்கலை கழகத்தைச் சேர்ந்த கிரிகோடி பே லியோ ஹார்ட் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த வால் நட்சத்திரத்துக்கு சி2021 ஏ1 லியோனார்ட் என பெயரிடப்பட்டுள்ளது. தற்போதைய கணிப்பின் படி இந்த வால் நட்சத்திர்ம் டிசம்பர் மாதத்தில் பூமிக்கு மிக நெருக்கமாக கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. பூமியில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொது மக்கள் இந்த வால் நட்சத்திரத்தை வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்பது இதன் கூடுதல் சிறப்பு. ஆனால் சென்னை வாசிகளுககு இந்த வாய்ப்பு மிகவும் குறைவு என்றே சொல்லப்படுகிறது. அதே போல டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு காரணமாக டெல்லி வாசிகளுக்கும் வால் நட்சத்திரத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது துரதிருஷ்டம் என்றே சொல்ல வேண்டும். டிசம்பர் 10 முதல் 16 ஆம் தேதி வரை பூமிக்கு நெருக்கமாக கடக்கும் போது தெளிவாக பார்க்கலாம். உச்சமாக இதை நாம் 13 ஆம் தேதி வடகிழக்கு திசையில் மிகத் தெளிவாக பார்க்கலாம். வாழ்வில் ஒரே முறை மட்டுமே கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி மக்கள் வால் நட்சத்திரத்தை கண்டு களிக்கலாம்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
கெப்ளர் டெலஸ்கோப் மூலம் நாசா ஆராய்ச்சி மையம் புதிய கோள்களை கண்டறிந்துள்ளது. ஒன்று இரண்டல்ல. நமது சூரியக் குடும்பத்தைத் தாண்டி 1,284 புதிய கோள்களைக் கண்டறிந்துள்ளனர். ஒரே முறையில் இத்தனை கோள்களை நாசா கண்டறிவது இதுதான் முதல் தடவை என்பதும் கூடுதல் சிறப்பு.
செவ்வாயில் மனிதர்கள் உயிர்வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வை, நாசா விஞ்ஞானிகள் மேற்கொற்கொண்டு வரும் நிலையில், தற்போது செவ்வாய் கிரகத்தில் மது பாட்டில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. இந்த மது பாட்டில் புகைப்படம், கடந்த 2007-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டதாம்.
உலகிலேயே மிகவும் உயரமான பனி சிகரமான எவரெஸ்ட் வேகமாக உருகி வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் கடந்த 25 வருடங்களில் அந்த பனிப்பாறை இதுவரை 54 மீட்டர் வரையில் அகலத்தில் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. அந்த பனிப்பாறை கடல் மட்டத்திலிருந்து 25 ஆயிரத்து 938 அடி உயரத்தில் உள்ளது. இது பனியாக மாறிய நேரத்தை காட்டிலும் 80 மடங்கு வேகமாக உருகி வருகிறது. இதற்கு பருவநிலை மாற்றமும் வேகமான காற்றும்தான் காரணம் என்று கூறப்படுகிறது. சுமார் 2000 வருடங்களாக உருவான பனிப்பாறைகள் 1990ஆம் ஆண்டிலிருந்து உருகத் தொடங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இமாலய மலைத்தொடர்களை நம்பி சுமார் பல கோடி மக்கள் உள்ளனர். இவர்கள் குடிநீருக்கு இந்த மலைத்தொடர்களைதான் சார்ந்துள்ளனர். எனவே இந்த மலைத்தொடரில் உள்ள பனிப் பாறைகள் அனைத்தும் உருக தொடங்கினால் மக்களுக்கு குடிநீருக்கும், விவசாயத்திற்கும் நீர் இல்லாமல் போய்விடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
உலகில் முதன் முறையாக மீத்தேன் ஹைட்ரேட் எனும் எரிபொருளை சீன பொறியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கடந்த வருடமே, எரியக்கூடிய பனிக்கட்டி என அழைக்கப்படும் மீத்தேன் ஹைட்ரேட் வாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனா அறிவித்திருந்தது. எனினும் தற்போது தான் இது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த வாயுவானது பனிக்கட்டி போன்று தோற்றத்தினை கொண்டிருப்பதனாலேயே எரியும் பனிக்கட்டி என அழைக்கப்படுகின்றது. இயற்கை எரிபொருளாகக் காணப்படும் இவ்வாயு எவ்வாறு தோற்றம் பெறுகின்றது என்பது தொடர்பான விளக்கப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை இவ்வாயுவைக் கண்டறிய அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் தென்கொரிய நாடுகளும் பல மில்லியன் டாலர்களை முதலீடு செய்திருந்த நிலையில், சீனா இதில் வெற்றிபெற்றுள்ளது.
இப்போது, ஞாயிற்று கிழமைகளில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் விடுமுறை நாள், முகலாய காலத்தில் இந்தியாவில் 1530 - 1707 வரை வெள்ளிக்கிழமை விடுமுறையாக இருந்தது. ஏனெனில், இஸ்லாமியர்கள் மசூதியில் அன்று, தொழுகை செய்வதால்தான். ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு பின் அது ஞாயிறாக மாறியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
41 பேரை காப்பாற்ற முடியாதவர் 7 கோடி மக்களை எப்படி காப்பாற்றுவார்? விஜய்க்கு அமைச்சர் பெரியசாமி கேள்வி
03 Feb 2026திண்டுக்கல், திண்டுக்கல்லில் பேரறிஞர் அண்ணா நினைவுதினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
-
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தால் அமெரிக்காவின் கிராமப்புற பொருளாதாரம் வளர்ச்சியடையும்: விவசாயத்துறை செயலர்
03 Feb 2026நியூயார்க். புதிய ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய சந்தைக்கு அதிகப்படியான அமெரிக்க விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யும்.
-
தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்கள்: மத்திய அரசை கண்டித்து பிப்ரவரி 12-ல் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்: 12 முக்கிய தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
03 Feb 2026சென்னை, தொழிலாளர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களை கண்டித்து நாடு முழுவதும் வருகிற 12-ந்தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
-
தி.மு.க.வை விஜய் விமர்சிப்பது ஏன்? அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்
03 Feb 2026திருச்சி, த.வெ.க. தொண்டர்களை உற்சாகப்படுத்தவே தி.மு.க.வை விமர்சனம் செய்து விஜய் பேசியுள்ளார் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
-
கனடாவில் துப்பாக்கிச்சூடு: இந்தியர்கள் 3 பேர் கைது
03 Feb 2026ஓஸ்லோ, கனடா நாட்டில், தனி நபர் ஒருவரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றச்சாட்டின் பேரில் மூன்று இந்தியர்களை அந்நாட்டு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
திருப்பூரில் விபத்து: 2 பேர் பலி
03 Feb 2026திருப்பூர், திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதி 2 பேர் உயிரிழந்தனர்.
-
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: ஈரான் அதிபர் பெசாஸ்கியன்
03 Feb 2026தெக்ரான், அமெரிக்கா உடன் நியாயமான மற்றும் சமமான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வெளியுறவுத்துறை அமைச்சரிடம் ஈரான் அதிபர் பெசாஸ்கியன் வலியுறுத்தியுள்ளார்.
-
விஜய்யைப் பார்த்து எங்களுக்கு பயமில்லை: நிர்மலா சீதாராமன்
03 Feb 2026புதுடெல்லி, விஜய்யைப் பார்த்து தி.மு.க.தான் பயப்பட வேண்டும் என்றும் எங்களுக்கு எந்த பயமும் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
-
இந்திய நாட்டின் சட்டங்களை பின்பற்றப்படாவிட்டால் உடனே நாட்டை விட்டு வெளியேறலாம்: மெட்டா நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
03 Feb 2026புதுடெல்லி, தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்திய நாட்டின் சட்டத்திற்கு இணங்க வேண்டும் என்றும் நாட்டின் சட்டங்கள் பின்பற்றப்படாவிட்டால் நீங்கள் வெளியேறலாம் என்றும் மெட்டா நிறு
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ


