முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

அதிசய வானவில் கிராமம்

 ரெயின்போ வில்லேஜ் அல்லது வானவில் கிராமம் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா.. தற்போது உலகம் முழுவதையும் கவர்ந்துள்ள அந்த கிராமம் ஒரு முதியவரால் உலகத்தின் கவனத்தை பெற்றது என்றால் ஆச்சரியம் தானே.. அவர் பெயர் Huang Yung-fu, அந்த கிராமம் Taichung அமைந்துள்ள இடம் தைவான். 2 ஆம் உலகப் போர் கால கட்டத்தில் சீனாவிலிருந்து பிரிந்து வந்த சிலருக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட ராணுவ குடியிருப்புகள் அமைந்த இடம் தான் Taichung. அண்மையில் இதை இடித்து விட்டு மால் கட்ட அரசு முடிவு செய்ததாக தெரிகிறது. இதையடுத்து அங்கிருந்து 97 வயதான Huang Yung-fu மட்டும் வெளியேற மறுத்து விட்டார். அதிகாரிகள் என்ன செய்வது என தெரியாமல் கையை பிசைந்தனர். ஆனால் அதிகாரிகளுக்கு எதிராக போராடும் வலிமையை இழந்து விட்ட முதியவர் Huang Yung-fu தன் கையில் எடுத்தது தூரிகையை. அந்த கிராமத்தின் அனைத்து சுவர்களை மூலை முடுக்குகளையும்,இண்டு இடுக்குகளையும் தனது கலை திறமையால் அற்புதமான ஓவிய கூடமாக மாற்றினார். பார்ப்பவர்களை கவரும் வானவில் கிராமமாக மிளிர்ந்தது. இதை கேள்விபட்ட பொது மக்கள் அங்கு வந்து இவற்றை படம் எடுத்து உலகம் முழுவதும் பரப்பி விட்டனர். தற்போது ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் வரும் பிரபல சுற்றுலா தளம் என்ற பட்டியலில் அந்த கிராமம் இடம் பெற்றது. இதையடுத்து அதை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட்டு அரசே இப்போது தனது பொறுப்பில் பாதுகாத்து வருகிறது. தூரிகையின் வலிமையை இந்த உலகுக்கு புரிய வைத்தவர் Huang Yung-fu.

ஸ்மார்ட் வாட்ச்

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கண்டறியும் சென்சார்களைக் கொண்ட ஸ்மார்ட் வாட்ச்களைக் கண்டுபிடிப்பது ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்-இன் கனவாக இருந்தது. இதற்கு வடிவம் கொடுக்கும் நவீன சென்சார்களைத்தான் ஆப்பிள் நிறுவன பயோமெடிக்கல் என்ஜினியர்கள் தற்போது உருவாக்கியுள்ளனர்.

முதன் முதலில் விமானத்தை கண்டு பிடித்தவர் இந்தியரா- ஆச்சரிய தகவல்

உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் தெரியும் விமானத்தை கண்டு பிடித்தது ரைட் சகோதரர்கள்தான் என்று. அவர்களது முதலாவது வான் பயணம் 1903இல் அமெரிக்காவிலுள்ள கிட்டி ஹாக் என்னுமிடத்தில் நடைபெற்றது. ஆனால் யாருக்கும் தெரியாது அவருக்கு முன்பே 1895 லேயே இந்தியர் ஒருவர் விமானத்தை கண்டு பிடித்து, அதை பறக்கவும் விட்டுள்ளார். ஆனால் அங்கீகாரம் பெறாத அந்த மேதையின் பெயர் ஷிவ்கார் பாபுஜி தல்படே. மும்பையில் 1864 இல் பிறந்த அவர், அப்போதே சமஸ்கிருத இலக்கியங்களில் வித்தகராக விளங்கினார். அவர் ஆள் இல்லாத விமானத்தை மும்பையில் உள்ள சவ்பாத்தி பீச்சில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் பறக்க விட்டுள்ளார். சமஸ்கிருத இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள விமானங்கள் குறித்து பண்டைய சாஸ்திரங்களை கற்று அதே போன்ற ஒரு விமானத்தை இவர் உருவாக்கியுள்ளார். மூங்கில் வடிவிலான அது பாதரசம் அல்லது யூரியா மூலம் இயக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த வெள்ளோட்ட நிகழ்ச்சியில் பரோடா மன்னர் சகஜியா கெய்க்வாட், மகாதேவ் கோவிந்த ஆரோன் ராய் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இவரது விமானம் சுமார் 1500 அடி வரை பறந்து சென்று சிறிது நேரத்தில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஆனால் அவரது முயற்சிக்கு அப்போதைய ஆங்கிலேய அரசு முட்டுக்கட்டை போட்டது. பாதரசத்தை வைத்து வெடி பொருள் தயாரித்ததாக கூறி அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. அவர் விடுதலை ஆகி வெளியில் வந்த போது ரைட் சகோதரர்களின் விமானம் வானில் பறந்து கொண்டிருந்தது.

கழுத்து சுருக்கம் போக..

சரியான உணவு பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்காமல் இருப்பது, ஹார்மோன் பிரச்சினைகளால் கழுத்து சுருக்கங்கள் ஏற்படுகிறது. இதை போக்க,  அன்னாசி பழ சாறை கழுத்து பகுதியில் தடவி மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும். மேலும், முட்டைக்கோஸ் சாறு,  தக்காளி பழ சாறு, ஆலிவ் எண்ணெயை கொண்டும் கழுத்து சுருக்கத்தை போக்கலாம்.

விண்வெளியிலும்

பூமிக்கு வெளியே உள்ள குப்பைகளை அகற்ற மிகப்பெரிய மீன்வலையை அனுப்பியுள்ளது, ஜப்பான். சர்வதேச விண்வெளி மையத்திற்கு அந்த வலை ராக்கெட் மூலம் ஏவப்பட்டுள்ளது. இந்த மீன்வலை ஸ்டீல் மற்றும் அலுமினியத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியில் இருந்து வெளிவரும் மின்சாரத்தின் மூலம் பூமியைச் சுற்றி வரும் குப்பைகளின் இயக்கத்தை மெதுவாக்கி, அவற்றை கைப்பற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

மொபைல் சார்ஜ் தீர்ந்து விட்டதா?

மொபைல் போன் வைத்திருப்பவர்களின் கவலை பெரும்பாலும் சட்டென்று கரைந்துவிடக் கூடிய பேட்டரி சார்ஜ்தான்.  தற்போது வெளியூர் பயணங்களின் போது பலரும் பவர் பேங்க் வைத்திருப்பதை பார்க்க முடியும். ஆனால் மொபைலை சார்ஜ் செய்வதாக இருந்தாலும், பவர் பேங்கை சார்ஜ் செய்வதாக இருந்தாலும் அதற்கான மின் இணைப்பை தேட வேண்டியது அவசியமாகும். மின் இணைப்பு கிடைக்காத வெட்ட வெளியில் இருக்க நேர்ந்தால், மொபைல் பேட்டரி சார்ஜ் டவுண் ஆகி விட்டால்.. மிகவும் கஷ்டம்தான். இதனால் நமது மனமும் டவுனாகி விடும். இனி அந்த கஷ்டம் வேண்டாம். மொபலை சார்ஜ் செய்ய தற்போது சோலார் மொபைல் சார்ஜர் வந்து விட்டது. இதற்கு சிறிய அளவு வெளிச்சம் போதும். அதை அப்படியே நமது மொபைலில் இணைத்து விட்டால்... நாள் முழுவதும் பேட்டரி டவுன் ஆகாமல் ஜாலியாக அரட்டை கச்சேரியை தொடரலாம்.. இதன் விலையும் சுமார் ரூ.300 லிருந்து தொடங்கி பல்வேறு ரகங்களில் ஆன் லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது. இனி வாங்கி உங்களது நண்பிகள், நண்பர்களை அசத்துங்கள்..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago