Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பென்குயினை கணக்கெடுக்கும் போஸ்ட் ஆபீஸ்

ஆள் அரவமற்ற அமைதியாக பென்குயின்கள் மத்தியில் வேலை செய்ய விரும்புகிறீர்களா.. அப்படியானால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் அண்டார்டிகாவில் உள்ள பிரிட்டன் அறக்கட்டளைக்கு சொந்தமான போர்ட் லாக்ராய் என்ற இடத்திலுள்ள தபால் அலுவலகத்துக்கு தான். இந்த அலுவலகம் 1944 இல் பிரிட்டன் தன்னார்வ அறக்கட்டளையால் உருவாக்கப்பட்டு 1962 வரை தபால் அலுவலகமாக செயல்பட்டு வந்தது. அங்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வீடுகளுக்கு எழுத விரும்பும் கடிதங்களை தயார் செய்து அனுப்பும் பணியை மேற்கொண்டது. ஆள் இல்லாத காலங்களில் பென்குயின் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டது. தற்போது யார் கடிதம் அனுப்புறா.. எனவே தபால்களை எண்ணுவதற்கு பதிலாக பென்குயின்களை எண்ணும் பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளது. என்ன நீங்க ரெடியா..

மூக்கை பிடித்துக் கொண்டு நம்மால் 'ஹம்' செய்ய முடியுமா?

பலரை நாம் பார்த்திருக்கலாம். எப்போதும் ஏதேனும் ஒரு மெட்டை வாயால் ஹம் செய்து கொண்டே இருப்பார்கள். இன்னும் சிலரோ ஹம் செய்தபடியே வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு விஷயம் தெரியுமோ தெரியாதோ...உங்களுக்கு தெரிந்திருக்கக் கூடும். அதாவது மூக்கை விரல்களால் இறுக்கமாக மூடிக் கொண்டு நம்மால் ஹம் செய்ய முடியாது. வேண்டுமானால் சோதித்து பார்த்துக் கொள்ளுங்கள். என்னா ஒரு ஆச்சரியம் பாருங்கள்.

திப்பு சுல்தான் ஓவியம் ரூ.6.32 கோடிக்கு விற்பனை

இந்திய சுதந்திர போரின் போது மைசூர் சமஸ்தானத்து மன்னர்களான ஹைதர் அலி மற்றும் அவரது மகன் திப்பு சுல்தான் ஆகியோரின் படைகள் 1780 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரின் படைகளை ஓட ஓட விரட்டியடித்தனர். பொள்ளிலூர் என்ற இடத்தில் இந்த சண்டை நடைபெற்றது. இந்த வெற்றியை குறிப்பிடும் வகையில் பொள்ளிலூர் சண்டை என்ற தலைப்பில் சுமார் 32 அடி நீளமுள்ள 10 மிகப் பெரிய காகிதங்களில் இந்த வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம் ஓவியமாக தீட்டப்பட்டது. இந்த ஓவியம் லண்டனில் புதன் கிழமை ஏலத்துக்கு வந்தது. அப்போது 630000 பவுன்ட்ஸ் அதாவது இந்திய மதிப்பில் ரூ.6.32 கோடிக்கு விற்பனையானது.

திப்பு சுல்தான் ஓவியம் ரூ.6.32 கோடிக்கு விற்பனை

இந்திய சுதந்திர போரின் போது மைசூர் சமஸ்தானத்து மன்னர்களான ஹைதர் அலி மற்றும் அவரது மகன் திப்பு சுல்தான் ஆகியோரின் படைகள் 1780 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரின் படைகளை ஓட ஓட விரட்டியடித்தனர். பொள்ளிலூர் என்ற இடத்தில் இந்த சண்டை நடைபெற்றது. இந்த வெற்றியை குறிப்பிடும் வகையில் பொள்ளிலூர் சண்டை என்ற தலைப்பில் சுமார் 32 அடி நீளமுள்ள 10 மிகப் பெரிய காகிதங்களில் இந்த வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம் ஓவியமாக தீட்டப்பட்டது. இந்த ஓவியம் லண்டனில் புதன் கிழமை ஏலத்துக்கு வந்தது. அப்போது 630000 பவுன்ட்ஸ் அதாவது இந்திய மதிப்பில் ரூ.6.32 கோடிக்கு விற்பனையானது.

எப்போதும் போனும் கையுமாக..

உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், காலை தூங்கி எழுந்தவுடன் முதல் ஐந்து நிமிடங்களில் ஸ்மார்ட் போனை தேடி எடுத்து விடுவதாக 61 சதவீதத்தினரும், முதல் அரை மணி நேரத்தில் ஸ்மார்ட்போனை எடுத்துவிடுவதாக 88 சதவீதத்தினரும், 96 சதவீதத்துக்கும் அதிகமானோர் முதல் ஒரு மணி நேரத்துக்குள் மொபைலை எடுத்துவிடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.இதேபோல், 74 சதவீதம் பேர், இரவு தூங்கச் செல்வதற்கு 15 நிமிடங்கள் முன்பு வரை ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. 53,000 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் மேற்கண்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஸ்குவாட்ஸ் பயிற்சி

ஸ்குவாட்ஸ் பயிற்சியைச் செய்வதால், முழு உடலுக்கும் வலு கூடுகிறது. கொழுப்பைக் குறைத்து தொடை, பின்புறம் மற்றும் வயிற்றுப் பகுதிகளை உறுதியாக்குகிறது.தொடை வலுவாக இருந்தால்தான் உடலைத் தாங்கிப்பிடிக்க முடியும். இந்தப் பயிற்சி செய்வதன் மூலம் தொடைப் பகுதி நன்றாக வலுப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago