நம்மில் பலரையும் நாம் பார்த்திருக்க கூடும். அவர்கள் நம்மை போல அல்லாமல் இடது கை பழக்கம் உடையவர்களாக இருப்பர். இடது கையால் எழுதுவது, இடது கையால் வேலைகளை செய்வது, சாப்பிடுவது. அவ்வளவு ஏன் நமது கிரிக்கெட் வீரரான சிகர் தவான் போன்றவர்கள் விளையாட்டில் கூட பட்டையை கிளப்புவதை பார்த்திருக்கலாம்... ஆனால் ஒன்று தெரியுமா இந்த உலகம் வலது கை பழக்கமுடையவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இடது கை பழக்கமுடையவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் வலது கை காரர்கள் உருவாக்கிய கருவிகளால் சுமார் 2500 பேர் வரை இடது கை பழக்கமுடையவர்கள் உயிரிழக்கும் நிலை உள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. என்ன ஒரு உலகம் பாருங்கள்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
பெண்கள் மது குடிப்பதால் அதிக உடல்நல பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். உடல் எடை கூடுவது, கல்லீரல் பாதிப்பு, இதயநோய், வயிற்றுப்புண், கண்பார்வை மங்குதல் போன்றவை ஏற்படும். கர்ப்பிணி பெண்கள் மதுகுடித்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு குறைபாடு ஏற்படும். மேலும், குழந்தை உண்டாகும் வாய்ப்பு குறைவாகும். குறிப்பாக மார்பக புற்றுநோய் தாக்கும் அபாயம் அதிகம்.
காட்டில் வளரும் நீர் யானைகள் அதிகம் ஒலி எழுப்பக் கூடியவை. அதன் சத்தம் ஏரிகள் மற்றும் ஆறுகளில் நீண்ட தூரத்துக்கு எதிரொலிக்கும். 'வீஸ் ஹாங்க்ஸ்' என்று அழைக்கப்படும் ஒரு வித ஒலியை, நீர்யானைகள் எதற்கு எழுப்புகின்றன என்று இதுவரை தெரியாமல் இருந்தது. ஆப்ரிக்காவில் நீர்யானைகள் குறித்து ஆராய்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞானிகள், அந்த தனித்துவமான ஒலி, தன் நண்பர்கள் முதல் எதிரிகள் வரை பிரித்துக் கூற பயன்படுவதாகக் கூறுகின்றனர். மேலும் நீர்யானைகள் தங்கள் கூட்டத்தில் உள்ள மற்ற நீர்யானைகளின் குரலைக் கொண்டு, தனித்துவமாக அடையாளம் கண்டு கொள்ளும் எனவும் கூறியுள்ளனர். நீர் யானைகளால் தன் நண்பர்கள், உறவினர்கள், அறிமுகமில்லாத நீர்யானைகளை அதன் குரலோசையைக் கொண்டு அடையாளம் கண்டு கொள்கின்றன.
தென் ஆப்பிரிக்க பாலைவனங்களில் காணப்படும் ஒரு வகை தாவர இனம் பாட்சிபோடியம் நாமகுவானம் (Pachypodium Namaquanum). இந்த செடியில் நீளமான ஒரு கிளை மட்டுமே காணப்படுகிறது.மேலும் தண்டு எப்போதும் வடக்கு திசை நோக்கியே சாய்ந்து நிற்க்கும் இயல்புடையது. பாலைவனங்களில் பயணம் மேற்கொள்பவர்கள் இந்த செடியை திசைகாட்டும் கருவியாக பயன்படுத்துகின்றனர்.
ஸ்ட்ராபெர்ரி என்று நாம் சாப்பிடும் பழம், பெர்ரி வகையைச் சேர்ந்தது அல்ல. ஆனால் வாழைப்பழம் பெர்ரி வகையைச் சேர்ந்தது. சீதாப்பழம் என்பது ஒரே பழம் அல்ல. அது ஒரு கூட்டுக்கனி. Compound fruit என்பார்கள். தாவரவியல் பாஷையில் சொன்னால் கூட்டு மஞ்சரி மலர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு கனியைப் போல இவ்வாறு உருவாகியுள்ளது. ஒரே பழத்துக்குள் பல்வேறு பழங்கள் ஒட்டுமொத்தமாக பொதிந்து வைக்கப்பட்டதைப் போல காட்சியளிக்கும். அதற்கு நமது சீதா பழம் தான் மிக சிறந்த உதாரணமாகும். என்ன ஒரு ஆச்சரியம் பாருங்கள்.
மேஜர் ஜெனரல் ராபர்ட் கிளைவ், வங்காளத்தில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவ மற்றும் அரசியல் மேலாதிக்கத்தை நிலைநாட்டிய ஒரு இங்கிலாந்து அதிகாரி ஆவர். இந்தியத் தலைமை ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்சும் படைத்தலைவர் இராபர்ட் கிளைவும் இணைந்துதான் பிரித்தானிய இந்தியாவை உருவாக்கிய முக்கிய நபர்களாகக் கருதப்படுகின்றனர். இந்த ராபர்ட் கிளைவ், சென்னையில்தான் திருமணம் செய்து கொண்டார். செயின் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சர்ச்சில் இருக்கும் திருமண ரிஜிஸ்டரில் ராபர்ட் கிளைவ் கையொப்பமிட்டிருக்கிறார். அதை ஒரு நினைவுச் சின்னமாக வைத்திருக்கிறார்கள் என்றால் ஆச்சரியம் தானே.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


